<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-17429638</id><updated>2012-02-12T10:42:02.146-08:00</updated><category term='விளம்பரம்'/><category term='அமேசான்'/><category term='இணையம்'/><category term='திரைப்பட விமர்சனங்கள்'/><category term='சிறுகதை'/><category term='தமிழ்மணம் &quot;நட்சத்திரமாக&quot; எழுதியது'/><category term='பதிவர் பட்டறை'/><category term='ஒரு நிமிடக்கதைகள்'/><category term='கப்பல் விபத்து'/><category term='ஐஸ்லாந்து'/><category term='ஞொள் சிரவெடி'/><category term='ரயில்வே'/><category term='கிரிக்கெட்'/><category term='கட்டுரை-போலாந்து'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='Sweden'/><category term='இலவசக்கல்வி'/><category term='குறும்படம்'/><category term='நிகழ்வுகள்'/><category term='Blekinge'/><category term='சொந்த அனுபவம்'/><category term='ஈழம்'/><category term='குறுந்தொடர்'/><category term='அனுபவம்'/><category term='கபில்தேவ்'/><category term='வீடியோக்கள்/Videos'/><category term='கட்டுரை'/><category term='சுவீடன் மேற்படிப்பு'/><category term='இளையராஜா'/><category term='சுவீடன்'/><category term='போலாந்து'/><category term='முகமது அலி ஜின்னா'/><category term='அரசியல்'/><category term='கல்விக்கடன்'/><category term='Quiz'/><category term='thiratti.com'/><category term='புத்தகவெளியீடு'/><category term='விளையாட்டு'/><category term='ஆனந்தி சஞ்சிகை'/><category term='உலகத்திரைப்படம்'/><category term='செய்திகள்'/><category term='திகில்'/><category term='”தமிழோவியம்” சிறுகதைகள்'/><category term='ஸ்வீடன்'/><category term='பிரான்ஸ்'/><category term='தமிழ்'/><category term='பேய்'/><category term='புனைவுகள்'/><category term='Joan of Arc'/><category term='துணுக்குகள்'/><category term='வினாடி வினா'/><category term='நகைச்சுவை'/><category term='Tamiloviam.com'/><category term='இத்தாலி'/><category term='மேற்படிப்பு'/><category term='பாகிஸ்தான்'/><category term='தொடர்கதை'/><category term='Online MBA'/><category term='தகவல்கள்'/><category term='தமிழோவியம்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='திரைப்படம்'/><category term='சிறுகதைகள்'/><title type='text'>வினையூக்கி</title><subtitle type='html'>&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்&lt;/p&gt;</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vinaiooki.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>429</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-2785033223291277335</id><published>2012-02-11T23:36:00.000-08:00</published><updated>2012-02-12T10:42:02.160-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>2012 - ஒரு நிமிடக்கதை</title><content type='html'>” வரும் 2012 யின் இறுதியில்  ஒட்டு மொத்த அழிவு இல்லை என்றாலும் பூமி பெரும் மாற்றத்திற்கு ஆளாகும், இயற்கை மாற்றங்களால்  முடிவுக்குப்பின் மீண்டும் ஆரம்பம் என்ற நிலைக்கு மனிதனைக் கொண்டு வரும்” என்ற என் வாதத்திற்கு, &lt;br /&gt;&lt;br /&gt;“இருக்கலாம், ஆனால் என்னைப் பொருத்தவரை, உலகத்தின் தோற்றம், உலகமென்ன, இந்த அண்டசராசரங்களின் தோற்றம் என் பிறப்பில் ஆரம்பித்து நான் இறக்கும்பொழுது அழிந்து விடுகின்றது” வழமைப்போல மோகன் தத்துவார்த்தமாகப் பதில் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;பேரழிவுச் செய்திகளின் மேல் எனக்கு இருக்கும் ஆர்வத்தை பொட்டில் அடித்தால் போல சொல்லி மர்ஃபி விதிகளையும் சொன்னதால், மோகன் பேசும்பொழுது எல்லாம் கவனமுடன் கேட்பேன்.  சிறுவயது முதலேயே இயற்கைச் சீற்றங்கள், பெரிய விபத்துகள் பற்றிய செய்திகளின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பேரிடர்கள் எங்கேனும் ஏற்படும் சில மணி நேரங்களுக்கு முன்னரே, உள்ளுணர்வில் ஒரு பரபரப்பு என்னைத் தொற்றிக்கொள்ளும்.  இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபொழுது, அய்யோ கட்டிடம் இடிகிறதே, ஏராளமான மக்கள் கட்டிடங்களோடு புதைந்துப் போவார்களே என மற்றவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, “அட , அடிச்சான் பாரு, இது தில்லு, காலையிலேயே நினைச்சேன், இன்னக்கி செம நியுஸ் இருக்குன்னு ” என்று சொல்லி நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டேன். ஒவ்வொரு டிசம்பர் 26 போது, சுனாமிக்கு ஊரே துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்க, நான் மட்டும், முந்தயதைவிட கொஞ்சம் காட்டம் அதிகமாக இன்னொரு சுனாமி வரக்கூடாதா என ஏங்கிக் கொண்டிருப்பேன். வேறு சில சமயங்களில் பேரிடர்களில் நான் மட்டும் தப்பிப்பதாகவும் கற்பனை செய்துப் பார்ப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;விபத்துக்களில் ஒருவர் இருவர் இறந்துப்போனால் எனக்குப் பரிதாபமாகவும் கவலையாகவும்  இருக்கும், ஆதலால் பெரும் விபத்துகளே எனது விருப்பங்கள், உதாரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இத்தாலிக் கப்பல் கவிழ்ந்தபொழுது, 4500 பேர் இருந்த கப்பலில் வெறும் 23 பேர் இறந்துபோனது அத்தனை சுவாரசியமாகத் தோன்றவில்லை. இந்த 2012ல்  குறைந்த பட்சம், உலக உருண்டையில் சில பாகங்களாவது கூண்டோடு கைலாசம் போகக்கூடும் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மோகனுக்கு எதிர்மறையாகப் பேசுவது பிடிக்கவே பிடிக்காது என்பதால் அழிவைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு , 2012 புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பிராட்டிஸ்லாவாவில் கொண்டாடப்போவதாகச் சொல்லி பேச்சை மாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டுத் தினத்தன்று, வியன்னாவில் இருந்து 45 நிமிடங்கள், வண்டியை ஒரு அழுத்து அழுத்தி பிராட்டிஸ்லாவாவிலும் கொண்டாடிவிட்டு, 100 கிமீக்கும் சற்று அதிகமான வேகத்தில் தனியாகத் திரும்பிக்கொண்டிருக்கும்பொழுது ஒன்றுமே இல்லாமல் ஒரு பரபரப்புத் தொற்றிக்கொண்டது, ஆகா 2012 வேலையை ஆரம்பித்து விட்டது போல, காலையில் சுடச்சுட செய்திகள் காத்திருக்கும்போல என ஆர்வமாக வேகத்தை அதிகரிக்க, சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிக நீண்ட கண்டெயினர் லாரியைக் கவனிக்காமல் நேரேக் கொண்டுபோய் அதன் பின்னர் என் காரை சொருகினேன்...அப்பளமாக நானும் காரும் நொறுங்கும் முன், கடைசியாகப் பார்த்தவை, &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-M9-xa9GePnY/TzeWqncbVnI/AAAAAAAAGAY/AFQYbgb3bhA/s1600/aztecalendarstone.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 377px;" src="http://3.bp.blogspot.com/-M9-xa9GePnY/TzeWqncbVnI/AAAAAAAAGAY/AFQYbgb3bhA/s400/aztecalendarstone.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5708196711602280050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்டெயினர் லாரியின் பதிவு எண்  2012, பதிவு எண் தகட்டிற்கு மேலே வரையப்பட்டிருந்த,பண்டைய அமெரிக்க  அஸ்டெக் நாகரிக சூரிய அட்டவணைக்கல் ஓவியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-2785033223291277335?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/2785033223291277335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/2785033223291277335'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/02/2012.html' title='2012 - ஒரு நிமிடக்கதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-M9-xa9GePnY/TzeWqncbVnI/AAAAAAAAGAY/AFQYbgb3bhA/s72-c/aztecalendarstone.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-6770960369464208543</id><published>2012-02-03T02:32:00.000-08:00</published><updated>2012-02-03T13:49:13.642-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞொள் சிரவெடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகில்'/><title type='text'>ஞொள்சிரஷாக்ஸ்ப்ளோ - ஒரு நிமிடக்கதை</title><content type='html'>தொடர்ந்த நச்சரிப்பைத் தாங்க முடியாமல், சில ஆங்கிலப்படங்கள், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் ரத்தம், கொஞ்சம் கிளுகிளுப்பு எனக் கலந்து கட்டி அடித்த திகில் புனைவு ஒன்றை எழுதி முடித்து எனது வார இதழின் ஆசிரியரின் மேசையின் மேல் கொண்டு வந்து வைத்தேன். அவசரப்படுத்தினால், பல இடங்களில் இருந்து அச்செடுத்துத் தான் எழுதிக் கொடுக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்குள்ள முடிச்சிட்டியா, கதையை கடுகு மாதிரி நச்சுன்னு சொல்லுப்பா” &lt;br /&gt;&lt;br /&gt;”கதை இது தான் சார், ஒரு நகரம்,,, அங்கிருக்கும் மக்கள் திடிரென தலை வெடித்து சாகின்றனர், சுடப்படவில்லை, எந்த மின்னழுத்த வேறுபாடுகள் இல்லை.. வரிசையாக சாகிறார்கள். நாயகன், ஏன் சாகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் பொழுது அவனுக்கு ஓர் அதிர்ச்சி, எங்கிருந்தோ வந்த ஒரு குறிப்பிட்ட வார்த்தையை வாய்விட்டு உச்சரிக்கும்பொழுது, தலை வெடிக்கிறது.  வார்த்தையை உபயோகப்படுத்திய எல்லோரும் தலைவெடித்து இறந்து விட, காரணத்தைக் கண்டுபிடித்த  நாயகனும், இந்த வார்த்தை வேறு யாருக்கும் தெரியக்கூடாது என அது சம்பந்தபட்ட தனதுக் குறிப்புகளை எல்லாம் அழித்துவிட்டு, சத்தமாக சொல்லிவிட்டு இறக்கின்றான்.”&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-U0mfDQO-AVU/Tyu4H6DQKiI/AAAAAAAAGAI/1HWMagPlIXc/s1600/head.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 103px; height: 83px;" src="http://1.bp.blogspot.com/-U0mfDQO-AVU/Tyu4H6DQKiI/AAAAAAAAGAI/1HWMagPlIXc/s400/head.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704855798976358946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் அது என்ன வார்த்தை”  &lt;br /&gt;&lt;br /&gt;”உட்டலாக்கடியா ஒரு வார்த்தையை நானே யோசிச்சி எழுதினேன்  அது என்ன வார்த்தை என்பது கடைசி எபிசோட்ல  கடைசி வார்த்தையா இருக்கும் சார்” &lt;br /&gt;&lt;br /&gt;“இண்ட்ரஸ்டிங், கதையை நான் படிச்சுட்டுக் கூப்பிடுறேன்” &lt;br /&gt;&lt;br /&gt;அறையின் கதவை சாத்திவிட்டு அடுத்தக் குற்றப்பின்னணி கொண்ட கதைக்கு கருவைத் தேடிக்கொண்டிருப்பதில் இரண்டு மணி நேரம் கரைந்தது. மேசை தொலைபேசி அடிக்க, ஆசிரியர் எதிர்முனையில்&lt;br /&gt;&lt;br /&gt;“பின்னிட்டய்யா, கலக்கல் அருமை தலைப்பு அந்த வார்த்தைதான்யா“ எனச்சொல்லி சில வினாடிகள் இடைவெளிவிட்டு &lt;br /&gt;&lt;br /&gt;“ஞொள் சி ர ஷா க் ஸ் ப் ளோ   ” என ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தம் திருத்தமாக அவர் சொல்லி முடிக்க மறுமுனையில் டப்பென வெடிக்கும் சத்தம் கேட்க தொலைபேசி துண்டிக்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-6770960369464208543?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/6770960369464208543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/6770960369464208543'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/02/blog-post_03.html' title='ஞொள்சிரஷாக்ஸ்ப்ளோ - ஒரு நிமிடக்கதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-U0mfDQO-AVU/Tyu4H6DQKiI/AAAAAAAAGAI/1HWMagPlIXc/s72-c/head.gif' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-8533625826565509200</id><published>2012-02-01T12:26:00.000-08:00</published><updated>2012-02-01T14:11:24.691-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இளையராஜா</title><content type='html'>தமிழ் சுணங்கிப் படுக்கும்பொழுதெல்லாம், மீட்டெடுக்க ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் ஒன்று தமிழைத் தட்டி எழுப்பி ஃபீனிக்ஸாக மாற்றும். இந்தத் தலைமுறையில் யுனிகோடும், சென்ற தலைமுறையில் செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளும் அதைச் செய்ய, கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என மண்ணின் இசையுடன், தமிழை மட்டுமல்ல,ஒட்டு மொத்த தென்னகத்தின் அடையாளங்களையே மீட்டவர் இளையராஜா. &lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு சிறிய வார இறுதி விருந்துக் கொண்டாட்டம், அமெரிக்க, ஸ்விடீஷ் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஒருப் பாடல் ஒலிக்கிறது, திடீரென ஒருவர் ஆனந்தத்தில் கத்துகிறார், இது ஐஸ்லாந்து இசை, என் ஊர் இசை ... அப்பொழுதுதான் இத்தனை நாள் வரை ஸ்விடீஷ் ஆள் என நினைத்துக் கொண்டிருந்தவர் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மொழிக்கு அடுத்தபடியாக இசையே தான் இன்னார் எனக் பெருமையுடன் காட்டிக்கொள்ள ஏதுவாக இருக்கிறது என்பதை வேறு ஒருவர் மூலம் நான் உணர்ந்த தருணம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;மேட்டிமைக் கனவான்களின் இசையையும் ரசிக்க முடியாமல், எங்கே தன் நிலம் சார்ந்த இசையை  ரசித்தோமானால் தாழ்ச்சியாகிவிடுமோ என்று அல்லாடிக்கொண்டிருந்த சாமானிய தமிழ் இசை விரும்பிகளை, இதோப்பார் எனக்கான இசை, என் மக்களில் மத்தியில் இருந்து ஒருவனால் இசைக்கப்படுகிறது என இசையின் எந்த இலக்கணங்களும் தெரியாத என்னைப்போன்ற சராசரிகளைப் பெருமை கொள்ள செய்தவர். நல்ல ஆசிரியருக்கான அளவுகோல் , எத்தனைப் பெரிய சூத்திரமாக இருந்தாலும் அதை எத்தனை எளிமையாக சொல்லுகிறார் என்பதில்தான் இருக்கின்றது. இளையராஜா, இசைக்கு அரசனோ, சக்கரவர்த்தியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னைப்போன்றவர்களுக்கு இசை ஆசிரியன். மன்றம் வந்தத் தென்றலுக்கு பாடல் ஒலிக்கும்பொழுதெல்லாம் உடன் பாடும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இசைக்கும் எனக்குமான தூரத்தைக் குறைத்தவர் இளையராஜா என்ற ஆசிரியர் தான். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்னது “இளையரஜா இல்லை எனில் 80 களில் ஒரு இளையத் தலைமுறையே பைத்தியமாகி இருக்கும் அல்லது தீவிரவாதியாகி இருக்கும்”. 80 களின் தலைமுறையென்ன, இன்றும் கூட, பலரின் சோகங்களுக்கு ஆறுதல் சொல்லப்படுவது இளையராஜாவின் இசையினால் தான். கொண்டாட்ட மனோபாவத்தில் இருக்கும்பொழுது நவீன புதுமையான இசை வடிவங்கள் வேண்டுமானால் ரசிக்கப்படலாம். ஆனால் ஆறுதலாக  உடைந்திருக்கும் மனதை வருடிக் கொடுக்க பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் நாடுவது இளையராஜாவின் இசையைத்தான். மகிழ்ச்சியை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம், வருத்தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டுமே பகிரப்படும், இளையராஜாவின் இசை அத்தகையது. இரவு பத்து மணிக்கு மேல் இளையராஜாவுடன் தூங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என இது அல்லது அது என அரசியலைக் குழந்தைப் பருவத்தில் இருந்தேத் தொடங்கிவிடும் நாம், இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை. இளையராஜாவைப் பிடித்தால் ஏ.ஆர்.ரகுமானையோ அல்லது வேறு யாரையுமேப் பிடிக்கக் கூடாது என்பதில்லை. மேலே சொன்னபடி ஏ.ஆர்.ரகுமானையும் ரசிக்க தேவையான அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தவர் பேராசிரியர் கிராமத்து ராசா. ஒரு வேளை இசை கடவுள் என்றால், இளையராஜா கடவுளின் அவதாரம் அல்லது கடவுளின் தூதர். ஒன்றிற்கு மேற்பட்ட அவதாரங்களையோ கடவுளின் தூதர்களையோ மனிதன் வேண்டாம் என்று சொல்லுவதில்லை. இவர் ராமன் என்றால் அவர் கிருஷ்ணன், இவர் நபி என்றால் அவர் யேசு... &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் அல்லாத சூழல், இந்தியா என்றாலே பாலிவுட் என்று மட்டுமே அறிந்திருக்கும் சராசரியான ஐரோப்பியச் சூழல், எனது கைபேசி ஒலிக்கிறது. குறைந்தது 5 பேராவது, திரும்பிப்பார்க்கிறார்கள், மூன்று பேராவது இது என்ன இசை, யார் இசைத்தது, எனக்  கேட்கின்றார்கள்... ஒருவராவது இதனின் எம்பி3 வடிவத்தை எனக்கு அனுப்புகின்றாய எனக் கேட்பதுண்டு.... ஸ்வீடன், போலாந்து, பின்லாந்து தற்பொழுது இத்தாலி எனத் தொடருகின்றது... அது, பல்லவி அனுப்ல்லவி என்ற கன்னடப் படத்தில் இளையராஜாவால் போடப்பட்ட சின்ன இசைத்துணுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;சிலமாதங்களுக்கு முன்னர் ஓர் இந்திப் பேசும் மாணவன்,”வடக்குத் தெற்கு இடைவெளியால் நாங்கள் இழந்தது இளையராஜாவின் இசையை”  சீனிகம் , பா படப்பாடல்களைக் கேட்டப்பின்னர் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;“அடேய் நண்பா, இந்தப் பாடல்களை எல்லாம் நாங்கள் 25 வருடங்களுக்கு முன்னரேக் கேட்டுவிட்டோம்”  என்றபடி எனது மடிக்கணினியில் வைத்திருந்த அத்தனை இளையராஜாவின் குழந்தைகளையும் கொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சில வகை இசை, வோட்கா என்றால், இளையராஜாவின் இசை வைன், வைனைப்போல எத்தனைக் காலம் கடக்கிறதோ, அத்தனை மகத்துவமும் இனிமையும் ராஜாவின் இசைக்கு. நீருற்றுகள் கோடையில் வறண்டதுப்போலக் காணப்படலாம், அதற்காக அவை கானல் நீராகிவிடாது. இன்று ஆடு தாண்டும் அளவில் ஓடினாலும், இளையராஜாவின் இசையாறு , இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னமும் ஓடும். எனது உற்சாகத்தை மீட்டு எடுக்க ஒவ்வொரு  படித்துறையிலும் தினமும் கொஞ்சம் நீரை எடுத்துப் பருகுகின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்று ஒன்று இருந்தால் நான் கேட்கும் ஒரே வரம், அனுதினமும் குறையா உற்சாகம். அந்த உற்சாகத்தை தவமின்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இளையராஜாவின் இசை. இந்த நூற்றாண்டில் சிலரைக் கடவுளாக்க எனக்கு அதிகாரம் கிடைத்தால், காந்தி, பெரியார், பிரபாகரனுடன் இளையராஜாவின் இசையையும் வைப்பேன். நிச்சயம் தமிழும் தமிழ்ச் சமுதாயமும் இளையராஜாவின் இசைக்குக் கடமைப்பட்டிருக்கின்றது. எனது ஒவ்வொரு வெற்றியிலும் இளையராஜாவின் இசையின் பங்கும் இருக்கின்றது என்ற வகையில் இந்தப் பதிவு இளையராஜாவின் இசைப் பயணத்திற்கு சமர்ப்பிக்கபடுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-8533625826565509200?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/8533625826565509200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/8533625826565509200'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/02/blog-post.html' title='இளையராஜா'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-7521181982686703901</id><published>2012-01-31T01:34:00.001-08:00</published><updated>2012-01-31T06:10:31.863-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஒன்றிற்குப் பின் இரண்டு, பின்னர் மற்றொன்று - சிறுகதை</title><content type='html'>எல்லோருடைய இரண்டாவது காதலும், முதல் காதலைப் பற்றியப் பகிர்தலில் தான் ஆரம்பிக்கின்றது. என்னுடைய இந்த இத்தாலியக் காதல் எத்தனையாவது என்பது முக்கியமல்ல. எத்தனையாவது முறை என்றாலும், தங்களது முதல் காதலைப் பற்றியே சுவாரசியமாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள்.  தனது முன்னாள் காதலியை எதிர்மறைப் பிம்பமாக மாற்றாமல் அவளுக்கு ஒரு தேவதை உருவைக் கொடுத்து, தற்பொழுதைய தோழியிடம் பகிர்வதில்தான், நட்பு காதலாக முன்னெடுப்பதை முடிவு செய்கிறது. பிடித்தமான பெண் நட்புகளிடம் முந்தையக் காதல் பகிரப்படும்பொழுது, கிடைக்கும் அனுதாபம் காதல் உருமாற்றத்திற்கு வலு சேர்க்கும். &lt;br /&gt;&lt;br /&gt;“நீ எத்தனை வருடங்கள் உன் அம்முவைக் காதலித்தாய்?” &lt;br /&gt;&lt;br /&gt;“மூன்றரை வருடங்கள்?, ஆனால் இப்பொழுதும் அவளைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன்” நிஜத்தில் ஒன்றரை வருடம் தான்., பிரிவின் தொடர் தாக்கங்களின் வலிகளையும் கணக்கில் &lt;br /&gt;கொண்டதால் மேலும்  இரண்டு ஆண்டுகள், &lt;br /&gt;&lt;br /&gt;“உன்னைப் போன்ற நல்லவனைப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது?” அடடா, இதே வசனத்தை இடையில் ஸ்வீடனில் இருந்தபொழுது சிலத் தெலுங்குப் பெண்களிடமும் &lt;br /&gt;கேட்டிருக்கின்றேனே !!! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்ற வகையில் சுந்தரத் தெலுங்குத் தோழிகளும் வலி தராமல் சென்றுவிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;“நான் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை, குடிப்பேன், பெண்களை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்ப்பேன்,, வாய்ப்பு இருந்தால் வலை விரிப்பேன்” &lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை, ஏனைய இந்தியர்களைக் காட்டிலும் நீ கண்ணியமாகவே நடந்து கொள்கின்றாய்,”&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிடம் இல்லாத எதிர் விழுமியங்களை,  இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தாழ்த்திக் கொள்ளும் நட்பரசியல் இவளிடமும் வேலை செய்தது. எதிர் இருக்கையில் இருந்து மாறி, &lt;br /&gt;என்னருகே வந்து உட்கார்ந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;“பொதுவாக தென்னிந்தியாவில் இருந்து வருபவர்கள், குறிப்பாக தமிழ் பேசுபவர்கள் பெண்களை மதிப்பவர்கள், அனுமதி கிடைக்கும் வரை அமைதியாகவே இருப்பார்கள்” &lt;br /&gt;&lt;br /&gt;”அம்முவைப் பற்றி மேலும் கொஞ்சம் சொல்லு, உன்னை விலக்கி வைத்தவளைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் கதை கேட்க ஆரம்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தானடா எதிர்பார்த்தாய் என, அலுவலகத்தில் அம்முவைச் சந்தித்தது, அவள் என்னைப் பொறுக்கி என்றது, தொடர் மன்னிப்பு, மாயாஜால் திரைப்படங்கள், பெற்றோர்களிடம் மாட்டிக்கொண்டது, சூழ்நிலைக் கைதியாதல், அவளின் திருமணம் என முழுநீள் விக்ரமன் திரைப்படம் போல சிலப்பல லாலாலா க்களுடன் கதையை முடித்தேன். பின்னணியில் இளையரஜாவின் இசை சூழலுக்கு மேலும் இனிமைச் சேர்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“ஒன்று தெரியுமா, அவளின் மேல் என் சுண்டு விரல் கூடப் பட்டது கிடையாது?” &lt;br /&gt;&lt;br /&gt;”என்ன?” வியப்பாக கண்களை  அகட்டிக் கேட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;”இரண்டு காரணங்கள், உடல் சாரா காதல் தான் உயர்ந்தது என்று அன்றிருந்த ஒரு தவறான அபிப்ராயம், இரண்டாவது வாய்ப்புக் கிடைக்காமை”  &lt;br /&gt;&lt;br /&gt;“இங்கே எல்லாம் காதல், காமத்தில் ஆரம்பித்து, கலவியில் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும், காமமும் கலவியும் காதலில் மிகமிக முக்கியமானது” என்றபடி தோளில் சாய்ந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் கார்த்தி,  இன்னும் நீ பிரம்மசரியத்தைத் தான் கடைப்பிடிக்கிறாயா ...”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை இல்லை, ஸ்வீடனில் இருந்த பொழுது இடையில் சில பரிட்சார்த்த முயற்சிகள் நடந்திருக்கின்றன” &lt;br /&gt;&lt;br /&gt;மனம் விட்டு சிரித்தபடி என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;”கொக்கு ஒன்னு கொக்கிப்போடுது ஹோய்.... ” என கங்கை அமரன் பாட, காதல் முழுமையடைவது காமத்திலும் கலவியிலுந்தான் என்பதை உணர்ந்தபடி அன்றிரவு நீடித்த இரவாக மாறிப்போனது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்வது, பின்னர் தோதுப்பட்டால் திருமணம் செய்து கொள்ளாலாம் எனவும் முடிவு செய்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வருட, புதுவருடக் கொண்டாட்டத்திற்காக, அருகில் இருக்கும் மிகப்பிரபலமான உணவரங்கத்திற்கு சென்றபொழுது, எனது இத்தாலியக் காதலி திடிரென வருத்தமானாள். &lt;br /&gt;தொடர் வற்புறுத்தல்களுக்குப்பின்னர் தூரத்தில் இருக்கும் மேசையைக் காட்டினாள். அங்கே மொட்டைத்தலையுடன் ஒரு இத்தாலிய இளைஞன், அழகான இத்தாலியப் பெண்ணுடன் அமர்ந்திருந்தான்.  அவன் எனதுக் காதலியின் முன்னாள் காதலன் எனப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்,&lt;br /&gt;&lt;br /&gt;“கடந்த காலங்களைத் திரைப்படங்கள் போலப் பார்க்க பழகிக் கொள்ளவேண்டும், நாம் வேண்டுமானால் வேறு இடத்திற்குப் போகலாமா” &lt;br /&gt;&lt;br /&gt;“வேண்டாம் கார்த்தி, நான் அன்று அவனைப் பற்றி நினைத்தது எல்லாம் உண்மை, அவன் உண்மையிலேயே பொம்பளைப் பொறுக்கிதான், அப்பொழுது எல்லாம் என்னை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கின்றான் தெரியுமா, எதற்கு எடுத்தாலும் சந்தேகம், படுப்பதற்கு மட்டும் தேவையான ஒரு பொருளாக என்னைப் பயன்படுத்திக் கொண்டான்” என அவளின் முன்னாள் காதலனை, சிலப்பல கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துத் திட்டிக்கொண்டிருந்தாள். சிலத் திட்டுகளில் உண்மையிருந்த போதிலும், பெரும்பான்மையான திட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவையாகவேத் தோன்றின.  அவளைச் சமாதனப்படுத்தி இரவு உணவை முடித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் காதலன் இவள் இருப்பதைக் கவனித்துவிட்டு, தன்னுடையப் பெண்ணுடன் எங்களின் மேசைக்கு வந்து எங்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னான். அவன் கண்களில் என்னுடைய காதலி இன்னமும் தேவதையாகவே இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது., ஆண்கள் தங்களுடைய அனைத்துக் காதலிகளையும் எல்லாக் காலக் காட்டத்திலும் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள்., முன்னாள் காதலி என்ற சொற்பதம் என்பதே ஆண்களுக்கு கிடையாது, ஆனால் பெண்களுக்கு தங்களது முன்னாள் காதலன் எப்பொழுதும் வில்லன் தான், என்பதை எனது பேஸ்புக் நிலைத்தகவலாக தமிழில் வைக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-7521181982686703901?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7521181982686703901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7521181982686703901'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_31.html' title='ஒன்றிற்குப் பின் இரண்டு, பின்னர் மற்றொன்று - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-7414343569744775912</id><published>2012-01-29T12:18:00.000-08:00</published><updated>2012-01-30T02:47:38.089-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>ஹலால் - சிறுகதை</title><content type='html'>பங்கேற்பாளனாய் இருப்பதைவிட பார்வையளானாய் இருப்பதே மேல், என்பதை நுட்பமான உணர்வுகள் சம்பந்தப்பட்ட  விவாதங்களில் நான் கடைப்பிடிக்கும் அணுகுமுறை. &lt;br /&gt;&lt;br /&gt;°மீனையும் தானே கொன்று சாப்பிடுகிறீர்கள், அது மட்டும் எப்படி எந்த சடங்கும் இன்றி ஹலால் ஆகின்றது”  தன்னுடையை சீண்டலை, அறிவார்ந்த கேள்விமாதிரி வாசுதேவ் ஷாகித்திடம் கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;ஷாகித் பதில் சொல்லவில்லை.  வாசுதேவ் என்னைப் பார்த்து ”பார்த்தியா, மடக்கிட்டேன்” என்ற வகையில் கண் சிமிட்டினான். வர வர வாசுதேவின் மேல் எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக,  குறைந்த பட்சம் கிரிக்கெட் பற்றி பேசுவதற்காகவது, அவனுடன் இருக்க வேண்டி இருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானிலிருந்து ஷாகித் வந்தபின்னர், தமிழ்நாட்டு வழக்கமான, இயல்பான இஸ்லாமிய இணக்க வளர்ப்பு சூழலினால் அவனுடன் நட்பாக முடிந்தது. ஆனால் வடநாட்டு வாசுதேவிற்கு சீண்டலையும் கேலியையும் மட்டுமே கொடுக்கத் தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வழமையான புன்னகையைக் கொடுத்துவிட்டு, எங்களது ஆராய்ச்சிக்கூடத்தின் முதல் தளத்திற்கு ஷாகித்தின் மதிய தொழுகைக்கு சென்றுவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;ஷாகித் இந்த மீன் ஹாலால் பற்றிய விளக்கத்தை ஏற்கனவே எனக்கு தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கின்றான். ”செதில் வைத்த எல்லா மீன்களும் ஹலால், சாப்பிடலாம். வெப்பரத்தப் பிராணிகளுக்கும் குளிரரத்தப் பிராணிகளுக்கும் ஏக வித்தியாசமுண்டு. மீன்களின் ரத்த ஓட்டம், அதன் ரத்தவகையும் நிலவாழ் , பறவைகளைக் காட்டிலும் வேறானது. ஆகையினால், தேர்ந்த முறையில் மீன்களை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை” என அவன் சொன்ன  அந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“புலாலில் ஹலால் என்பது சுத்த வியாபரத்தந்திரம், அவங்க ஆட்கள் கடைகளில் மட்டுமே வியாபரம் நடக்க வேண்டும் என்று போடப்பட்ட சூட்சுமம்” வாசுதேவனின், சீண்டல் பொருளாதாரக் கோணம் எடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் கூட, அதுவும் சரிதானே... நான் கூட 25 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, ரோம் நகரத்திற்கு வெளியே இருக்கும் ஈழத்தமிழர் கடையில் தான் போய் அரிசி, பருப்பு இன்ன பிற வகையறாக்கள் வாங்குவேன். &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை, என் சாப்பாட்டுத் தட்டில் கை வைக்காதவரை எந்தக் கோட்பாடுகளைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. ஆடோ, மாடோ, பன்றியோ... ஏன் ஒணானாக இருந்தாலும் என் வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு ஜீரணம் ஆகும் அனைத்து உணவு வகைகளும் ஹலாலே.... அவரவருக்கு சரி என்பதை அவரவர் பின்பற்றுகிறார்கள். நல்லதே ஆனாலும் திணிக்கப்படும்பொழுதுதான் பிரச்சினை. &lt;br /&gt;&lt;br /&gt;ஷாகித்திடம் ஒரு நல்ல குணம் உண்டு, அன்புடன்  வற்புறுத்தினால், &lt;br /&gt;&lt;br /&gt;“அன்பிற்காக சில விதிவிலக்குகளை பின்பற்றலாம்” நான் கொண்டு வந்திருக்கும் ஹலால் அல்லாத கோழிக்கறியை சிறிதளவேனும் ருசி பார்ப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;“எப்படித்தான் பிணத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ”  ஒரு நாள் நான் கோழிக்கறி வறுவல் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது வாசுதேவ் கேட்டபிறகு அவனுக்கு மட்டும் தெரியும் படி, சைவச் சாப்பாட்டுப் பிரியர்களைக் கேலி செய்யும் சித்திரங்களையும் தகவல்களையும் பேஸ்புக்கில் பகிர ஆரம்பித்தேன். தாவரங்களுக்கும் உயிருண்டு என்பதைக் கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகப்போகின்றது என்பதை பல சைவப்பிரியர்கள் மறந்துவிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நடுநிலை என்பதைவிட, சமனிலைப் படுத்தும் காரணியாக நான் இருந்ததால், ஷாகித்தை , பலசமயங்களில் வாசுதேவ்வின் உள்குத்துகளில் இருந்து காப்பாற்ற முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்குப் பின்னர், ஷாகித்திற்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதால், அவன் வீட்டில் விருந்துக் கொடுக்க முடிவு செய்தான். வாசுதேவ் வரவில்லை என்று சொல்லிவிட்டான். இருந்த போதிலும் நான் ஷாகித்திற்கு அறிமுகப்படுத்தி இருந்த வேறு துறை  மாணவர்கள் ரங்கநாதனும் ஸ்ரீராமும் வருவதாக சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விருந்து தினத்தன்று, அவனுக்கு உதவுவதற்காக காலையிலேயே சென்ற பொழுது, சமையலறையில் புதுப்பாத்திரங்களாக அடுக்கி வைத்திருந்தான். இரண்டு குழம்பு வைக்கும் சட்டிகள், அரிசி வைக்கப் புதுப்பாத்திரம், வாணலி, கரண்டிகள் என எல்லாம் முந்தைய நாள் வாங்கியவை. &lt;br /&gt;&lt;br /&gt;“எதற்கு இந்தப் புதுப்பாத்திரங்கள், கல்யாணப்பையன் காசு சேர்க்க வேண்டாமா” &lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை கார்த்தி, ஸ்ரீராமும் ரங்காவும் சைவர்கள், மாமிசம் சமைத்த எனது பாத்திரங்களில் சாப்பாடு செய்து கொடுத்தால், ஒரு வேளை அவர்களுக்கு அசூயையாக இருக்கக் கூடும், நான் கொடுக்கும் விருந்து அவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்” &lt;br /&gt;&lt;br /&gt;ஷாகித்தின் மேல் இருக்கும் மதிப்பு உயர்ந்தது. அடுத்த முறை, ஹாலால் கோழி வாங்கி, ஷாகித்திற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என மனதினுள் முடிவு செய்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-7414343569744775912?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7414343569744775912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7414343569744775912'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_29.html' title='ஹலால் - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-3233298774925643070</id><published>2012-01-27T02:51:00.000-08:00</published><updated>2012-01-27T05:03:31.279-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>க்ரிஷ் - சிறுகதை</title><content type='html'>”கார்த்திபா ஒரு விசயம் கேட்கனும், கோச்சுக்க மாட்டதானே” என்ற அம்முவிடம்&lt;br /&gt;&lt;br /&gt;“சொல்லு குட்டிமா~ என்றதும் எனது மடியில் அமர்ந்து என்னுடன் குழந்தைப் பாடல்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலிப்பாப்பா தலைத் திருப்பி என்னைப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”உன்னை இல்லைடாக் குட்டி, நான் கூப்பிட்டது சீனியர் குட்டிமாவை.. ” மீண்டும் அஞ்சலிப்பாப்பாவிற்கு ”தோட்டத்தில் மேயுது  வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா... என்றது வெள்ளைப்பசு- உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.” பாட்டின் மேல் கவனம் சென்றது. எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று நபர்கள், ஆனால் கூப்பிடப் பயன் படுவது இரண்டே பெயர்கள். குட்டிமா இருவருக்கும் நான் கார்த்திபா. ஜூனியர் குட்டிமாவிற்கு ஜூலை வந்தால் 3 வயது. குழந்தைகளின் இரண்டு வயது முதல் நான்கு வயது வரைக்கான காலம் அற்புதமானது. நீங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதை விட, அவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம். &lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா, அப்பா இரண்டு பேரும் கோவிலுக்குப் போக ஆசைப்படுறாங்க,”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹரே கிருஷ்னா க்ருப்போட கோயில் ஃப்ரீத்ஹெம்ஸ்காத்தான் பக்கம் தானே, அங்கேப் போயிட்டு வரச்சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;“அவங்க... குட்டிப்பாவையும் கூட்டிட்டுப் போக ஆசைப்படுறாங்க, இதுவரைக்கும் பாப்பாவை கோவிலுக்கோ சர்ச்சுகோ கூட்டிட்டுப் போகலேன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க ..” &lt;br /&gt;&lt;br /&gt;வாசுதேவனும் ரங்கநாயகியும் நீண்டகால கோபத்தை மறந்து , ஒரு மாதம் எங்களுடன் தங்க ஸ்வீடன் வந்து இருக்கிறார்கள். மருமகனை மாப்பிள்ளை என வாய்நிறையக் கூப்பிடாமல் பெயர் சொல்லி அழைப்பவர்களை நானும் பேர் சொல்லித்தான் அழைப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;“நாமதான் பாப்பாவுக்கு சாமி, பூதம் கண்டதை எல்லாம் கத்துக்கொடுக்ககூடாதுன்னு பேசி இருக்கோமே,,, பின்ன என்ன திடீர்னு” என்றதும் அம்முவின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. தனது கோரிக்கையை விட, தன் அம்மா அப்பாவின் விருப்பம் நிரகாரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான ஆயுதம் அது. கிருஷ்ணன் தேவையில்லை, ஆனால் அம்மு முக்கியம் அல்லவா... குழந்தைக்கு சாமி கண்ணைக்குத்தும் ரீதியிலான விளக்கங்கள் எல்லாம் கொடுத்து பயமுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன்,  கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சலிப்பாப்பா அச்சில் அம்முவைப்போல இருந்ததால், வாசுதேவன், ரங்கநாயகி இருவரும், மறுநாள் கோவிலில் குழந்தைக்கு நடைப்பழக்கியபடி மகளின் குழந்தைபிராயத்தை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒரே மகளை , அவர்களின் விருப்பமின்றி கவர்ந்தெடுத்ததின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சலியின் வடிவில் கரைந்து கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பூசை நடக்கும்பொழுது, அஞ்சலிப்பாப்பாவிற்கு அது எல்லாம் புதியதாகத் தோன்றியது,. கொஞ்சம் மிரண்டுபோய் என் பக்கத்தில் வந்துவிட்டாள்,. இருந்த போதிலும் அவளுக்கு அங்கிருந்த கிருஷ்ணர் படங்களின் மேலும் பொம்மைகளின் மேலும் ஒர் ஈர்ப்பு வந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;“கார்த்திபா, அது என்ன?” என மழலையாக கிருஷ்ணன் சிலையை கைக் காட்டிக் கேட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;“நல்லா .. மாட்டினியா ... பதில் சொல்லு” எனத் தோளில் இடித்தாள் அம்மு.  &lt;br /&gt;&lt;br /&gt;“அது, கிருஷ்ணன், அர்ஜுனோட நண்பன்...  காம்பிஸ்” , ஸ்வீடனிலேயே இருக்கப்போகின்றோம் என முடிவாகிவிட்டதால், தமிழும் ஸ்வீடிஷும் கலந்தே பேசி அஞ்சலிப்பாப்பவைப் பழக்கப் படுத்தி வருகின்றோம்.  நாங்கள் இருவரும் வேலைக்குப்போவதால் பகல் நேர முழுவதும்  குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதனால், தமிழுக்கு இணையாக ஸ்வீடிஷையும் அஞ்சலிப்பாப்பா வேகமாக கற்றுவருகிறாள். இந்த மூன்று வாரங்களாக அம்முவின் பெற்றோர் இருப்பதால் குழந்தைகள் காப்பகத்திற்கு மட்டமடித்துவிட்டு தமிழையும் பாசத்தையும் கற்று வருகின்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;“அஜூன் ஆரு” &lt;br /&gt;&lt;br /&gt;“வீட்டுக்குப்போனதும் யூடூப்ல குட்டிம்மாவுக்கு கட்டுறேன்” எனச்சொல்லி வீட்டுக்கு வந்ததும் யுடுயுபில் மகாபாரதத் தொலைக்காட்சித் தொடரின் தமிழ் மொழிமாற்று வடிவத்தைத் தேடி எடுத்து,&lt;br /&gt;&lt;br /&gt;“இதுதான் அஜூன்” என்றேன் குழந்தையின் மொழியில். &lt;br /&gt;&lt;br /&gt;“அஜுனும் க்ரிஷும் காம்பிஸ்” அவளுக்கு எளிமையாக்க கிருஷ்ணனை க்ரிஷ் ஆக்கி, “அஜூனுக்கு எப்போ பிரச்சினை வந்தாலும் க்ரிஷ் உதவி பண்ணுவார்”&lt;br /&gt;&lt;br /&gt;“பிச்சினா” அடடா, குழந்தைகளுக்கு ஏதுப் பிரச்சினை, பிரச்சினை என்பதை எப்படி புரியவைப்பது. குழம்ப, &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தே பிச்சினா ... யெல்பர், க்ரிஷ் யெல்ப்பர் அஜுன் ஆல்தீத், பெர்சொன் வெம் யெல்பர் எர் க்ரிஷ் “  க்ரிஷ் எப்பொழுதும் அஜுனுக்கு உதவுவார், யார் உதவி செய்கிறார்களோ அவரின் பெயர் க்ரிஷ் என்ற பொருள்படும் விதத்தில் அம்மு ஸ்விடீஷில் தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசுதேவனும் ரங்கநாயகியும் ஊருக்குப்போன பின்னர்,  குழந்தையை அழைக்க நானும் அம்முவும் காப்பகத்திற்கு சென்றபொழுது, கருப்பு, வெள்ளை குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த எங்களின் தேவதையுடன் வேறு ஒரு குட்டி அரபுக்குழந்தையும் ஓடிவந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“குட்டிமா, இது யாரு... “ என அரபுக்குழந்தையையும் அரவணைத்தபடி அஞ்சலிப்பாப்பாவிடம் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“க்ரிஷ்” என்றாள் குழந்தை. &lt;br /&gt;&lt;br /&gt;                            ----------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-3233298774925643070?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/3233298774925643070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/3233298774925643070'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_27.html' title='க்ரிஷ் - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-6356521062006647191</id><published>2012-01-26T05:58:00.000-08:00</published><updated>2012-01-29T11:40:56.996-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினாடி வினா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு</title><content type='html'>நெருக்கப்பட்ட பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையில் சாமானிய ரசிகனால் உள்ளூர் போட்டிகளைத் தொடர்ந்து கவனிக்க முடிவதில்லை. ஐபிஎல் போட்டிகள் உள்ளூர் போட்டிகள் என்ற போதிலும், அதில் இருக்கும் பன்னாட்டு வீரர்களினால் இருபதுக்கு இருபதை சர்வதேசத் தரப் போட்டியாகவே நோக்கப்படுகிறது. கட்டமைப்பான உள்ளூர் போட்டிகளினாலும் தொடர்ந்த ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஆதரவாலும்,  ஆஸ்திரேலியா 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நீட்டிப்பான வெற்றிகளைத் தொடர்ந்து பெற முடிகிறது. இந்தியாவிலும் உள்ளூர் முதல் தரப்போட்டிகளுக்கு ஆதரவு அதிகமானால் மேலும் இந்தியக் கிரிக்கெட்டின் தரம் உயரும். இந்த வினாடி வினாவில், நம் கிரிக்கெட் ரசிகர்களால் எந்த அளவிற்கு முதல் தரப்போட்டிகள் நோக்கப்படுகிறது என்பதை “டெஸ்ட்” செய்யும் விதமாக இந்த ஆறு கேள்விகளும் அமையப்போகின்றது. முடிந்தவரை எளிமையாகவே கேள்விகளை அமைத்து இருக்கின்றேன். வினாக்கள் முதல் தரப்போட்டிகளில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. ஒரு வேளை கேள்விகளில் தகவல் பிழை இருந்தாலும் சுட்டிக்காட்டவும். &lt;br /&gt;&lt;br /&gt;1. கீழ்கண்ட படத்தில் பிரபல ஆட்டக்காரர் கவாஸ்கர் இடதுகையால் மட்டையடிப்பது போல இருக்கின்றது, இது கண்ணாடி வழியாக இடவல மாற்றப் புகைப்படம் அல்ல, நிஜமாகவே ஒரு ஆட்டத்தில் கவாஸ்கர் இடதுகை ஆட்டக்காரராகவும் ஆடினார். அந்த இந்திய முதல் தர ஆட்டம் என்ன? எந்த சூழலில் அவர் ஆடினார் என்பதையும் தெரிந்தால் சொல்லுங்களேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-cDryHkXRh0Y/TyFgAeyt5rI/AAAAAAAAF_c/w6sOhoLd6O4/s1600/Gavaskar_left_handed.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/-cDryHkXRh0Y/TyFgAeyt5rI/AAAAAAAAF_c/w6sOhoLd6O4/s400/Gavaskar_left_handed.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701944164609812146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. முதல் தரப்போட்டிகளில் பிரையன் லாரா அடித்த ஆட்டமிழக்காத 501 ஓட்டங்களே இன்று வரை அதிகபட்சமாக இருக்கின்றது. கேள்வி, பிரையன் லாராவிற்கு முன்னர் அந்த சாதனையை வைத்திருந்தவர் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்திய முதல்தரப்போட்டிகளில்,  முந்தைய ரஞ்சிக்கோப்பையை வென்ற அணியுடன், இதர இந்திய வீரர்களின் அணி (Rest of India)ஆடும் போட்டிக்கான கோப்பையின் பெயர் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;4. ஐபில் இருபதுக்கு இருபது ஆட்டமாக நகரங்களுக்கு இடையிலான போட்டிகளாக நடத்தப்படுகிறது. ஆனால் இந்திய அளவில் வேறு ஒரு இருபதுக்கு இருபது போட்டித்தொடரும் முதல்தரப் போட்டிகளாக நடத்தப்படுகின்றது. அதாவது ரஞ்சிப் போட்டிகளில் ஆடும் அணிகள் இந்த இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்கும். இந்தப் போட்டித் தொடரின் பெயர் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;5. கீழ்க்காணும் படத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர் யார்? தொடர்ந்து இந்திய முதல் தரப்போட்டிகளைக் கவனித்து வருபவர் என்றால் இவரை சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/-s64i3IEemuU/TyFj_RUenbI/AAAAAAAAF_o/pWNo3538pMg/s1600/whoamI_firstclass_game.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 288px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-s64i3IEemuU/TyFj_RUenbI/AAAAAAAAF_o/pWNo3538pMg/s400/whoamI_firstclass_game.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701948541859962290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. கடைசிக் கேள்வி, லீ ஜெர்மோன், தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை கேப்டனாக அறிமுகமாகி ஆடினார். கேண்டர்பர்ரி அணிக்காக இவர் ஆடிய முதல் தர ஆட்டமொன்று கிரிக்கெட் பதிவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அந்த ஆட்டத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு என்ன, அதில் இவரின் பங்கு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;விடைகள் &lt;br /&gt;&lt;br /&gt;1. 81/82 ரஞ்சிப்போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில், ரகுராம் பட் என்ற கர்னாடகா அணியின் சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பம்பாய் அணியினர் சுருண்டனர். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் குவித்திருந்ததின் அடிப்படையில் கர்னாடகா இறுதிக்குத் தகுதிப்பெற்றிருந்தது. ஒட்டு மொத்தத் தோல்வியைத் தவிர்க்க, ரகுராம் பட் பந்து வீசும்பொழுது மட்டும் இடதுகை ஆட்டக்காரராக ஆடி, ஆட்டத்தை டிரா செய்தார். முதல் தரப்போட்டிகளில் நன்றாக விளையாடியும் சொற்ப பன்னாட்டு ஆட்டங்களே ஆடி ரகுராம் பட் ஓய்வுப் பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricketarchive.com/Archive/Scorecards/42/42114.html"&gt;ஆட்டவிபரம் இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. ஹனீப் முகமது கராச்சி அணிக்காக அடித்த 499 ஓட்டங்கள். சுவாரசியமான விசயம் என்னவெனில் இவர் 500 வது ஓட்டத்தை எடுக்கும்பொழுது ரன் அவுட் என்ற முறையில் ஆட்டமிழந்தார். அதைப்பற்றியக் கட்டுரையை பின்வரும் சுட்டியில் படிக்கலாம். &lt;br /&gt;&lt;a href="http://www.espncricinfo.com/magazine/content/story/385930.html"&gt;http://www.espncricinfo.com/magazine/content/story/385930.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. இரானி கோப்பை &lt;br /&gt;&lt;br /&gt;4. எதிர்பார்த்த விடை சையத் முஷ்தாக் அலி கோப்பை என்ற போதிலும் Interstate 20 என்ற விடையும் சரியானதே &lt;br /&gt;&lt;br /&gt;5. ராபின் பிஸ்ட் , ராஜஸ்தான் அணியின் ஆட்டக்காரர். இந்த சீசனில் அதிக ஓட்டங்களை ரஞ்சிப்போட்டிகளில் எடுத்தவர் என்ற பெருமை உடையவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.espncricinfo.com/ci/content/player/262464.html"&gt;இவரின் பக்கம் http://www.espncricinfo.com/ci/content/player/262464.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. 59 ஓவர்களில் 291 வெற்றி இலக்கு என்று கடைசிநாளில் களமிறங்கிய கேண்டர்பர்ரி அணி, 108 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. இருந்த போதிலும் லீ ஜெர்மோனும் ரோஜர் போர்டும் ஓரளவிற்கு சமாளித்து டிராவை நோக்கி ஆட்டத்தை நகர்த்திக் கொண்டிருந்தனர். எதிராக ஆடிய வெலிங்க்டனின் அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் ஒரு திட்டத்தை வகுத்தனர். இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் எளிதாக பந்துகளை ஆட்டக்காரர்களுக்கு வீசுவதன் மூலம் , இரண்டு மூன்று பந்து ஆடி வாங்கினாலும், கிட்டத்தட்ட 95 ஓட்டங்களை கண்டிப்பாக எடுக்க முடியாது, மீதமிருக்கிற இரண்டு விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு இருக்கின்றது என பெர்ட் வான்ஸ் என்பவரை பந்து வீசச்செய்தனர். வேண்டுமென்றே நோபால்களை வீசச் செய்து மட்டையாளர்களை குஷிப்படுத்தினர். கொடுத்தக் காசுக்கு மேல் கூவ ஆரம்பித்த வான்ஸ் வாரி வழங்கி 77 ஓட்டங்களைக் கொடுத்தார். கடைசி ஓவரில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 17 ஓட்டங்களை எடுத்த லீ ஜெர்மோன் ஸ்கோரை சமன் செய்தார். அதனைப் பற்றிய விவரணையான கட்டுரை இங்கே &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.espncricinfo.com/magazine/content/story/451716.html"&gt;http://www.espncricinfo.com/magazine/content/story/451716.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-6356521062006647191?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vinaiooki.blogspot.com/feeds/6356521062006647191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17429638&amp;postID=6356521062006647191' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/6356521062006647191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/6356521062006647191'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/cricket-quiz.html' title='கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-cDryHkXRh0Y/TyFgAeyt5rI/AAAAAAAAF_c/w6sOhoLd6O4/s72-c/Gavaskar_left_handed.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-853835551564379700</id><published>2012-01-26T02:05:00.000-08:00</published><updated>2012-01-26T02:25:53.514-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தினைத் துணை நன்றி செயினும் - சிறுகதை</title><content type='html'>இந்திப் பேசும் இந்தியர்களை விட உருது பேசும் பாகிஸ்தானியர்களிடம் பழகியதுதான் அதிகம். ஆரம்பத்தில் விஜய்காந்த் , அர்ஜூன் பட வில்லன்களைப்போல அவர்களைப் பார்த்தாலும், போகப்போக நம்மவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலாகவே தெரிந்தார்கள். கடைசி சில வருடங்களாக பாகிஸ்தானியர்களிடம் பழகுவது பெரிய சிரமமான காரியமாகவே தெரியவில்லை. கடவுளைத் தவிர்த்து  வேறு எந்த விசயத்தையும் அவர்களிடம் விவாதம் செய்யலாம். இந்த பாகிஸ்தானிய முன்னனுபவம் இருந்ததால் புதிதாக வந்து இருந்த ஆய்வு மாணவன் ஷாகித்தை வழி நடத்தும்படி என் பேராசிரியர் கேட்டுக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;வந்ததும் வராததுமாய் எடுத்தவுடன் உருதுவில் பேச ஆரம்பித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;”நீ என்ன சொல்கிறாய் விளங்கவில்லை” என்றேன் ஆங்கிலத்தில், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தி பேசமாட்டாயோ, அது உங்களின் ராஷ்டிரபாஷை அன்றோ” வேண்டுமென்றே சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராட்டிரபாஷையோ கூட்டுற பாஷையோ என மனதில் நினைத்துக் கொண்டு, ”எனக்கு இந்தியோ உருதுவோ தெரியாது., தயவு செய்து ஆங்கிலத்தில் பேசவும்” முகத்தில் மென்மையும் குரலில் கடுமையும் காட்டினேன். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு அவனுடன், அவனுக்கான வரி எண், குடியிருக்கும் அட்டை, காப்பீடு போன்றவைகளை வாங்க அவனுடன் சென்ற பொழுது, என்னைப்போலவே நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்து இருக்கின்றான் என்று அவன் சொன்ன அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஒரு மாதத்தில் நைய்யி நையின்னு ஒவ்வொரு விசயத்துற்கு என்னையும், எனது ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் சக இத்தாலியப் மாணவியையும் அரித்து எடுத்தாலும், ஒவ்வொன்றிற்கும் அவனுக்கு நான் மட்டும் பொறுமையாக்வே விளக்கிக் கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஷாகித்தின் பிரச்சினை என்னவெனில் ஆங்கிலம் அத்தனை சரளமாக வராது. ஒவ்வொரு வாக்கியத்தையும் உருதில் இருந்து மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் பேசுவதால், இலக்கணமும் அடிபட்டு, சரியான சொற்களும் கிடைக்கப்பெறாமல் அவன் சொல்ல வந்த விசயத்தின் அர்த்தமே மாறிவிடும். அவனுக்கு இத்தாலியப் மாணவியிடம்  நட்பு பாராட்ட வெண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவளிடமே சின்ன சின்ன சந்தேகங்களைக் கூட என் பின் பக்கத்து இருக்கையில் இருந்து அடுத்த முனை இருக்கை வரை சென்று கேட்பான். &lt;br /&gt;இடம் பொருள் ஏவல்களை சரியாகப் புரிந்து கொள்ள மாட்டான். அவள் சிடுசிடுத்தப்பின்னரே என்னிடம் வருவான். நான் எளிய ஆங்கிலத்தில் ஷாகித்திற்கு விளக்கி , அப்படியும் புரியாவிடில் எனக்குத் தெரிந்த தூர்தர்ஷன் இந்தியைக் கொண்டு விளக்கி புரியவைப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வார இறுதியில் மூன்றாவது மதுபானச் சுற்று முடிந்தவுடன் என் தோளில் சாய்ந்தபடி சக இத்தாலிய மாணவி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“கார்த்தி, சிலநாட்களாகவே உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், ஷாகித் தொட்டதற்கெல்லாம் உன்னிடம் வந்து நிற்கும்பொழுது, எப்படி பொறுமையாக அவனுக்கு உதவுகின்றாய், இத்தனைக்கும் அவன் உன் நாட்டுக்காரனோ, உன் மொழிக்காரனோ ஏன் உன் மதத்துக்காரனோ இல்லை, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதே பல சமயங்களில் புரியாது, பேராசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றுதானே இப்படி செய்கிறாய்” என கண் சிமிட்டினாள். &lt;br /&gt;&lt;br /&gt;“அப்படி எல்லாம் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக பம்பாயில்  உள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்த பொழுது, அப்பொழுது ஊரும் புதியது, நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயற்சி செய்யும் நிறுவனத்தின் சூழலும் புதியது, சிறுநகரச் சூழலில் வளர்ந்த நான் அன்று தடுமாறிய பொழுது  எனது உடைந்த ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு, அவரின் உடைந்த தமிழுடன் ஒரு தெலுங்கு பேசும் நண்பர் உதவினார்.... ஷாகித் முதன் முறையாக தனது சொந்த ஊர், நாடு, கண்டம் விட்டு இங்கு முழுக்க முழுக்க அந்நியமான தேசத்திற்கு வந்து இருக்கின்றான், ... ஷாகித்திற்கு உதவும் பொழுதெல்லாம், ஏதோ ஒரு வகையில் எனக்கு அன்று கிடைத்த உதவியைத் திருப்பிச் செலுத்துவதாகவே ஒரு மகிழ்ச்சி,... வாய்ப்புகள் இருக்கும்பொழுது நமக்குக் கிடைத்ததை மற்றவருக்கு கொடுக்கத் தவறக்கூடாது ... நிச்சயம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஷாகித்தும், ஒரு தமிழன் எனக்கு உதவினான் என்று நினைவுகூர்ந்து வேறு யாருக்காவது உதவுவான்”  &lt;br /&gt;&lt;br /&gt;“Pay it forward° எனச் சொல்லிவிட்டு என்னை மேலும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-853835551564379700?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/853835551564379700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/853835551564379700'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_26.html' title='தினைத் துணை நன்றி செயினும் - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-6450248156572941660</id><published>2012-01-25T01:35:00.000-08:00</published><updated>2012-01-25T01:51:07.591-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>காகிதக் கடவுள் - உரைநடைக்கும் கவிதைக்கும் நடுவிலான ஒரு முயற்சி</title><content type='html'>சாமிப்படத்தை மிதித்த போது நாத்திகன் எனக்கும் கடவுள் நம்பிக்கை வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;காந்தி, ஜின்னா, பெஞ்சமின் பிராங்ளின், வாஷிங்டன், &lt;br /&gt;ஜெபர்சன், மாவோ, கோமேனி, அகஸ்டஸ் 2, குஸ்டாவ் 1, எலிசபெத் 2, &lt;br /&gt;பியரி க்யுரி , யூசுப்-பின்.இசாக் &lt;br /&gt;ஏன் ரத்தக் காட்டேறி ராஜபக்சேவுடன்&lt;br /&gt;இன்னும் ஏராளமானோர் என் கடவுள்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிக்கையில் குறைவானவர்கள் &lt;br /&gt;படைக்கப்பட்ட கடவுள்களை விட மேலானவர்கள்&lt;br /&gt;காகிதங்களில் இருக்கும் கருணாமூர்த்திகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;மிதிபட்ட படத்தைக் குப்பையில் வீசி,&lt;br /&gt;அருகில் கிடந்த 100 ரூபாய்த் தாளை எடுத்துக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;தொலைந்ததைத் தேடி தன்னையும் கடவுளையும் நிந்தித்தபடி&lt;br /&gt;கடந்து சென்றான் ஒருவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-6450248156572941660?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/6450248156572941660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/6450248156572941660'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_25.html' title='காகிதக் கடவுள் - உரைநடைக்கும் கவிதைக்கும் நடுவிலான ஒரு முயற்சி'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-1267292297662900978</id><published>2012-01-24T03:45:00.000-08:00</published><updated>2012-01-24T04:11:06.264-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>479 - ஒரு நிமிடக்கதை</title><content type='html'>உலகத்தின் ஒரு பகுதியை ஆண்ட ரோமானிய தேசத்தின் இன்றைய தலைமுறையினருக்கு தங்கள் நாட்டின் கலாச்சாரத்தின் மேல் பெருமை இருப்பது தவறில்லை. ஆனால் எனது இத்தாலியத் தோழி ஒரு படி மேலே ... அவளுக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் இத்தாலியத்தில் தான் பேசுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இங்கு இருக்கும்பொழுது இந்த மொழியைக் கற்றுக்கொள்ளவிடில் எங்கு போய் கற்றுக்கொள்வாய்” அவளது வாதம் நியாயமானதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஞாயிறு முழுவது அவளுடன் ரோம் நகரத்து கடைத்தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றேன். சில ஆடைகள் மற்றும் அழகுப் பொருட்கள் வாங்குவதற்காக என்னைத் துணைக்குக் கூட்டிச்சென்றாள்.  பெரும்பாலான கடைகளின் வாசற்படியில் Made in Italy , என்று வெளிப்படையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருக்கும் கடைகளில் மட்டுமே நுழைகின்றாள். ஒரு பொருளை எடுக்கிறாள். அதில் இருக்கும் பார்கோடைப் பார்க்கிறாள். பொருளின் விலையும் தரமும் ஏற்புடையது என்றாலும் ஏனோ நிராகரித்து விட்டு வேறு ஒன்றை தேர்வு செய்கிறாள்,&lt;br /&gt;&lt;br /&gt;“உன் கண்களில் என்ன பார்கோட் ரீடரையா வைத்திருக்கிறாய்?” என்றேன் சிரித்தபடி...&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை கார்த்தி ... முதல் இரண்டு இலக்கங்களை வைத்து பொருட்கள் என் நாட்டில் தயாரிக்கப்பட்டவையா எனப் பார்த்தேன் 80 யில் இருந்து 83 வரை இருக்கும் எண்கள் இத்தாலிக்கானது” &lt;br /&gt;&lt;br /&gt;“அதுதான் வாசற்படியிலேயே கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கின்றனரே,,,, பின்ன என்னவாம்?” &lt;br /&gt;&lt;br /&gt;“அது வியாபாரத் தந்திரமாகக் கூட இருக்கலாம், எதற்கும் ஒரு முறை சரிபார்த்து வாங்குவதுதானே நலம்,... நான் வேறுநாட்டுப் பொருட்களை வெறுக்கவில்லை, அதே சமயத்தில் பொருளாதார ரீதியாக நொறுங்கிப் போய் இருக்கும் இத்தாலிக்கு என்னால் முடிந்த சிறு உதவி~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-x9NmsPkSDbI/Tx6akBxb91I/AAAAAAAAF_Q/yaR2MFLmi8k/s1600/boycott_srilankan_products.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-x9NmsPkSDbI/Tx6akBxb91I/AAAAAAAAF_Q/yaR2MFLmi8k/s400/boycott_srilankan_products.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701164122039383890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, எனது ஐபோனை எடுத்து, வேறு சில பார்கோடுகளைத் தேடிவிட்டு &lt;br /&gt;&lt;br /&gt;”இனிமேல் 479 என்ற எண்ணையும் நினைவில் வைத்துக்கொள்”&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த எண்ணில் இருக்கும் பொருட்களையும் வாங்கவேண்டுமா ...”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை இல்லை... வாங்கக்கூடாது ... ரத்தத்தில் தோய்ந்த பொருட்களை நீ வாங்க மாட்டாய் என எனக்குத் தெரியும்”&lt;br /&gt;&lt;br /&gt;“இது எந்த நாட்டின் குறி எண்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;“இலங்கை ... ”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-1267292297662900978?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/1267292297662900978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/1267292297662900978'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/479.html' title='479 - ஒரு நிமிடக்கதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-x9NmsPkSDbI/Tx6akBxb91I/AAAAAAAAF_Q/yaR2MFLmi8k/s72-c/boycott_srilankan_products.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-8120587069030218798</id><published>2012-01-23T06:08:00.000-08:00</published><updated>2012-01-23T06:13:40.940-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இத்தாலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகில்'/><title type='text'>நான்காவது பரிமாணம் - சிறுகதை</title><content type='html'>என்னமோ தெரியவில்லை, இத்தாலி வந்ததில் இருந்து அம்முவின் நினைவுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் அவளின் பெயரை கூகுளில் பத்துத் தடவைகளாவது தேடி இருப்பேன். அவளின் பெயரும் படிப்பும் தனித்துவமானவை... எத்தனைத் தேடியும் என்னுடைய ஆராய்ச்சிக்கட்டுரையில் நன்றித் தெரிவித்தப் பக்கத்தைத் தவிர வேறு எங்குமே அவளின் பெயர் இல்லை.-... மூன்று வருடங்களில் லிங்டின் தளத்திலாவது இருக்க மாட்டாளா என்ற ஒரே நப்பாசைதான் ... ஒரு வேளை நேரத்தை நிறுத்தக் கூடிய ஆற்றல் எனக்கு இருந்தால், செப்டம்பர் 3, 2009 ஆம் ஆண்டோடு நிறுத்தி இருப்பேன். அன்றுதான் நான் அவளுடன் பேசிய கடைசி தினம். எத்தனைக் கெஞ்சியும் அவளின் பெற்றோர் பேச்சை மீறமாட்டேன் என்று விலகிப்போய்விட்டாள். பெண்கள் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால், மிச்சமீதின்றி அத்தனையும் துடைத்து எடுத்தது போல, இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிடுவார்கள். அவளை நினைவூட்டும் நபர்களை நானும் தள்ளிவைத்தேன் ... தள்ளிவைத்தலில் பலப் பாடல்களும், ஏன் உணவுப்பழக்கங்கள்  கூட உள்ளடங்கிப் போயின. &lt;br /&gt;&lt;br /&gt;இதோ அவளின் நினைவுகளை சுப்ரமணியபுரத்தில் வரும் இளையராஜாப் பாட்டுடன் ஆளரவமற்ற , ரோம் நகரத்துப் புறநகர்ப் பகுதிகளில் பொட்டல் திடலில் மறுவாசிப்பு செய்து &lt;br /&gt;கொண்டிருக்கின்றேன். எப்படியாவது அம்முவைக் கண்டுபிடித்துவிட வேண்டும், கடைசியாக அவளைப் பற்றிக் கேள்விப்ட்டது, இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கின்றாள் என. &lt;br /&gt;விபரத்தை சொன்ன முன்னாள் அலுவலகத் தோழியை ஒட்டு மொத்தமாக நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்கி இருந்தேன்.  முதலில் அந்தத் தோழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற &lt;br /&gt;எண்ணத்தோடு,  இயற்கையின் உந்துதலை கழிக்க, நமது ஊர்ப்புறங்களில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தைப்போலக் காணப்பட்ட கூரையில் சுவர்களின் பின்னால் ஒதுங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;”பலப்பேர் வந்து போகின்ற தபால் நிலையத்திற்கு முன்னால் சிறுநீர் கழிக்கின்றாயே உனக்கு அறிவில்லையா “ என ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. இத்தாலியில் அதுவும் இந்த &lt;br /&gt;இடத்திலா... எனது பேராசிரியர் வந்த முதல் நாளே சொன்னார், தனியாக எங்கும் தெரியாத இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று.. நான் கேட்டால்தானே.... &lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை இல்லை... நிறுத்திவிட்டேன். தாங்கள் யார்” குரலிலும் உடலிலும் தானாகவே நடுக்கம் வந்து சேர்ந்தது. அழுக்கு உடைகளுடன், நீண்ட தாடி, தலைமுடியுடன் ஒருவர் &lt;br /&gt;மற்றொரு சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து வெளிவந்தார்.  ராணுவத்தின் உடையைப்போல ஒன்றை அணிந்திருந்தார், தோராயமாக 80 வயது இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;“அட ... இந்தியனா ... ~ என கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்து வியப்பு மேலிட, மேலும் கீழும் பார்த்தார். எனக்கு இரண்டு ஆறுதல்கள், கையில் இருப்பதைப் பிடுங்கிக் கொள்ளும் வழிப்பறித் திருடன் இல்லை. பேய்களும் பிசாசுகளும் இந்தியனா என ஆச்சரியமாக கேட்டதாக எங்கும் படித்ததில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம், தமிழ்நாட்டில் இருந்து வருகின்றேன்” &lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கும் ஒரு தமிழ் நண்பன் இருந்தான், அதோ அந்தக் கால்வாயைக் கடக்கும்பொழுது, அச்சு நாட்டுப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்” என அந்தக்காலத்து ஆங்கிலத்தில். &lt;br /&gt;&lt;br /&gt;”ஓ நீங்கள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரா” &lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் .... கனடாவில் இருந்து வந்த படையணிகளைச் சேர்ந்தவன், இத்தாலியை நாஜிக்களிடம் இருந்து மீட்டதில் உங்கள் இந்திய வீரர்களுக்கும் பங்கு உண்டு”&lt;br /&gt;&lt;br /&gt;“படித்திருக்கின்றேன், கிட்டத்தட்ட 30 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாலியப் போர் முனைகளில் உயிரிழந்திருக்கின்றனர்” அந்த &lt;br /&gt;முதியவருடனான உரையாடல் எனக்கும் தேவையாக இருந்தது. அம்முவின் சோக நினைவுகளில் இருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பற்றி விசாரித்தார். கணினிப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கே எதற்கு என அவர் என்னிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் திரும்பக் &lt;br /&gt;கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;“தபால் நிலையத்திற்கு தபால்களைப்போட வந்தேன்”,  கையில் சில உறையிடப்பட்ட கடிதங்களையும் வைத்திருந்தார். நான் சிறுநீர் அடித்த இடத்திற்கு பத்தடித் தள்ளி சன்னல் &lt;br /&gt;அமைப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்திற்கு அப்பால் கடிதங்களைப்போட எத்தனித்தவரிடம், &lt;br /&gt;&lt;br /&gt;“ஐயா, தபால் பெட்டியில் தான் போடவேண்டும், இங்கு போட்டால் தபால்கள் போகாது, என்னிடம் கொடுங்கள் நகரத்திற்கு செல்லும்பொழுது நான், பெட்டியில் போட்டுவிடுகின்றேன்” &lt;br /&gt;&lt;br /&gt;“அது சரிதான், போக வேண்டிய இடத்திற்குப்போகும், போக வேண்டிய காலக்கட்டத்திற்குப் போகுமே,,,, இந்த ராணுவ தபால் நிலையமே சேரவேண்டியவர்களுக்குச் சேர்ப்பிக்கும்” என &lt;br /&gt;தபால்களை சன்னலில் எறிந்துவிட்டு எதுவும் பேசாமல் எதிர்ப்பக்கம் நடந்துபோனார். ஒரு வேளை மனக்கிறுக்குப்பிடித்தவராக இருக்கக்கூடும் என நானும் மாணவர் விடுதியை நோக்கி &lt;br /&gt;நடக்கலானேன். அடுத்த இரண்டு நாட்கள் படிப்பிலும், அம்முவிற்கும் எனக்கும் பொதுவாக இருந்த நண்பர்களைத் தேடுவதிலேயே காலம் கழிந்தது. ஒரு சிலரைக் கண்டுபிடித்து, &lt;br /&gt;அவர்களிடம் தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகவும் என்னுடைய இத்தாலிய முகவரியை அவளுக்குத் தெரிவித்துவிடவும் கேட்டுக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறொரு இளையராஜாப்பாடலுடன் மீண்டும் முந்தையப் பகுதிக்கு நடைபயிலப் போனபொழுது அந்த முதியவரும் அவரின் கடிதங்களும் நினைவுக்கு வந்தது. கடிதங்களை எடுத்து சரியான தபால் பெட்டியில் போட்டுவிடலாம் என அந்தக் கட்டிடத்தில் கடிதங்களைத் தேடினேன். கலைந்து கிடந்த சில உறைகளை சேகரித்துக் கொண்டிருந்த பொழுதுதான் &lt;br /&gt;கவனித்தேன். அனைத்திலும் 43 ஆம் ஆண்டு , இங்கிலாந்து ராணியின் படம் போட்ட தபால் தலை ஒட்டப்பட்டிருந்தது. இத்தாலிய முகவரிக்கு கடிதம் எழுதப்பட்டு கனடாவில் &lt;br /&gt;இருந்து அனுப்பப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-uXxeiGd9WMc/Tx1qrRETL4I/AAAAAAAAF_E/s7r5dlw_fko/s1600/Stamp_Canada.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 342px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-uXxeiGd9WMc/Tx1qrRETL4I/AAAAAAAAF_E/s7r5dlw_fko/s400/Stamp_Canada.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700829994869272450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முதியவர் வயதின் மூப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதியாக நம்பினேன். இரண்டாம் உலகப்போர் காலக்கட்ட கடிதங்கள், &lt;br /&gt;அரியப்பொக்கிஷங்கள், ஏலத்திற்கு விட்டால் எப்படியும் கோடி ரூபாய் பெறுமானம் பெறும். அடுத்த மூன்று வருட படிப்பைப் பிரச்சினை இன்றி முடித்துவிடலாம் என மனம் &lt;br /&gt;கணக்குப்போட்டது. ஒரு கடிதத்தை படிக்கப் பிரிக்க , முதுகில் மென்மையான அடி விழுந்தது. திகிலுடன் திரும்பிப்பார்க்க, முதியவர் கோபமாக என்னிடம் இருந்து கடிதங்களைப் &lt;br /&gt;பிடுங்கிக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;“அடுத்தவர்களுக்கு வந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிப்பது அநாகரிகம்” என்றபடி, கையில் கொண்டு வந்திருந்த வேறு கடிதங்களை சன்னலில் எறிந்துவிட்டு அவரின் பாதையில் &lt;br /&gt;திரும்பிப்போனார். &lt;br /&gt;&lt;br /&gt;“பைத்தியக்கார கிழவன்~ என்று மனதில் நினைத்தபடி, புதிதாக அவர் எறிந்த கடிதங்களைப் பொறுக்குகையில் ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. எதிலும் தபால் தலைகள் ஒட்டப்படவே &lt;br /&gt;இல்லை. புத்தம் புதிதாக கனடிய முகவரிக்கு எழுதப்பட்ட கடிதங்கள். மறுநாள் விடியற்காலையிலேயே அந்த கட்டிடத்திற்கு வந்து, நேற்று எறியப்பட்ட கடிதங்கள் கிடக்கின்றனவா எனத் தேடினேன். தபால் தலையில்லாமல் எறியப்பட்ட ஒன்றுகூட &lt;br /&gt;இல்லாமல் , புதிய கடிதங்கள் கிடந்தன தபால் தலைகளுடன், ஆனால் 44 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு. கண்கள் சொருக கீழே சரியப் போனவனை அந்த முதியவர் மீண்டும் &lt;br /&gt;கைதாங்கலாகப் பிடித்துக் கொண்டார். மனதும் உடலும் தெளிவடைந்தபின்னர்,&lt;br /&gt;&lt;br /&gt;“அவரிடம் நேரிடையாகவே கேட்டேன், நீங்கள் கடந்த காலத்திற்கா கடிதங்கள் எழுதுகின்றீர்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;“எதிர்காலத்தில் போய் சேரக்கூடிய கடிதங்களை நம்மால் அனுப்ப முடியும் பொழுது, ஏன் கடந்த காலத்திற்கு அனுப்ப முடியாது, இந்த ராணுவ தபால் நிலையம் அந்த சேவையை &lt;br /&gt;எனக்கு கடந்த 70 வருடங்களாக செய்துவருகின்றது ... வேண்டுமானால் நீ கூட முயற்சி செய்து பாரேன்” என்று சித்தர் வாக்கு போல சொல்லிவிட்டு தனது கடிதங்களுடன் அந்த &lt;br /&gt;இடத்தை விட்டு நகர்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடம் அமானுஷ்யமாக திகிலூட்டினாலும், அம்முவிற்கு 2009 துவக்கத்தில் கடிதத்தை எழுதி இந்த கட்டிடத்தில் போட்டால் என்ன எனத் தோன்றியது. அன்று இரவே, அம்முவின் &lt;br /&gt;பிரிவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சிலத் தென்றல் வருடும் சம்பவங்களை நினைவில் கொண்டு, அந்தக் காலக் கட்டத்தில் எழுதுவதைப் போலவே ஒரு கடிதம் எழுதி, &lt;br /&gt;அவளின் அந்நாளைய அலுவலக முகவரியுடன் ,மறுநாள் அந்த கட்டிடத்தில் போட்டுவிட்டு வந்தேன், பத்து நாட்கள் நடையாய் நடந்து எனக்கு அம்முவிடம் இருந்து ஏதேனும் பதில் வந்து இருக்கின்றதா என எதிர்ப்பார்ப்பதிலேயே கழிந்தது. அந்த முதியவரும் தென்படவில்லை, அவருக்கான கடிதங்களும் அங்கே காணப்படவில்லை. இரண்டு வாரமாகியும் எந்தக் கடிதமும் எனக்கு வரவில்லை. ஒருவேளை எனக்கு வந்த கடிதத்தை இந்தக் கிழவர் எடுத்துக் கொண்டு போய் இருப்பாரோ என சந்தேகமும் ஏற்பட்டது. 15 ஆம் நாள் நம்பிக்கை கைவிடாமல், கடிதம் வந்திருக்கிறதா, எனப் பார்க்க போகையில் கிழவர் எதிரில் வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு வந்த கடிதம் ஏதேனுமொன்றை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டீர்களா” எனப்பாவமாய் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;மையமாய் சிரித்துவிட்டு, ”உனக்கான தபால்கள் வந்து சேருமிடம் உனது இல்லத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையம் தான். இங்கு அனுப்ப மட்டும்தான் முடியும். , நாளை அங்கு போய் கேள், ஒரு வேளை வந்து இருக்கலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள், உடைந்த இத்தாலியத்தில் என் வீட்டு முகவரிக்கு ஏதேனும் தபால்கள் வந்து இருக்கின்றனவா எனக்கேட்டேன்.... உள்ளேப் போய் சில நிமிடங்கள் கழித்து வந்த தபாலதிகாரி, &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு தபால் மட்டும் வந்திருக்கின்றது எனக் கையில் கொடுத்தார். தபால் தலையின் அச்சிடப்பட்டத் தேதியைப் பார்த்தேன்... கருப்புமை விரவி வருடம் தெரியவில்லை.... &lt;br /&gt;அனுப்புனர் முகவரி இல்லை, உறையின் மேல் இருந்த கையெழுத்து அம்முவினதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் கார்த்திக்கிற்கு,&lt;br /&gt;&lt;br /&gt;அம்மு எழுதிக் கொண்டது... நலம் நலமறிய ஆவல்........ &lt;br /&gt;&lt;br /&gt;எனக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;                 ----------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-8120587069030218798?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/8120587069030218798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/8120587069030218798'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_23.html' title='நான்காவது பரிமாணம் - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-uXxeiGd9WMc/Tx1qrRETL4I/AAAAAAAAF_E/s7r5dlw_fko/s72-c/Stamp_Canada.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-7455267664223280489</id><published>2012-01-20T04:32:00.001-08:00</published><updated>2012-01-20T04:35:48.099-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>விவிஎஸ். லக்‌ஷ்மண்</title><content type='html'>1998 ஆம் ஆண்டு, ஷார்ஜாவில் இந்திய அணிக்கு இரண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஒன்று ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, மற்றொன்று இறுதிப்போட்டிக்கு ஓட்டங்கள் விகித அடிப்படையில் தகுதி பெறுவதற்கு,,, இரண்டில் எதையுமே அடைய விட மாட்டோம் என ஆஸ்திரேலியா கடினமான இலக்கை நிர்ணயிக்கிறது. சோம்பலுக்கும் சொதப்பலுக்கும் பெயர் போன, 90களின் இந்திய அணி 138 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அதன் பின்னர் தான் கதையே , அன்றிரவு ஏற்பட்ட மணற்புயலைக்காட்டிலும் பரபரப்பாக மறுநாள் பேசப்பட்டது டெண்டுல்கரின் சூறாவளித்தனமான ஆட்டம். டெண்டுல்கர் மட்டுமே பேசப்பட்டார்.... மறு முனையில் உறுதியாகவும் உறுதுணையாகவும் நின்ற விவிஎஸ் லக்‌ஷ்மணைப் பற்றி மக்கள் பேசவே இல்லை. டெண்டுல்கருடன் இணைந்து இணையாட்டமாக 104 ஒட்டங்கள் எடுத்து ரன்ரேட் அடிப்படையில் தகுதிப் பெற செய்ததில் கண்டிப்பாக லக்‌ஷ்மணுக்கு கால்வாசிப் பங்காவது உண்டு. இத்தனைக்கும் லக்‌ஷ்மணுக்கு மூன்றாவது ஒரு நாள் ஆட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;கடைசி 15 வருடங்களில் தொடர்ந்து கத்தித் தொங்கிக் கொண்டே இருப்பது லக்‌ஷ்மணினின் கழுத்துக்குத்தான் ... அணியில் தடகளப்பு சரியில்லையா.... தூக்கு லக்‌ஷ்மணை, பந்து வீச்சாளர்கள் சரி இல்லையா... லக்‌ஷ்மணை தூக்கிவிட்டு மேலதிக பந்துவீச்சாளரை சேருங்கள் ...என்னது இந்தியா தோற்றுவிட்டதா ... லக்‌ஷ்மணை எல்லாம் இன்னும் ஏனப்பா வைத்திருக்கிறார்கள் ... இந்தப் பல்லவியை லக்‌ஷ்மண் ஆடத்தொடங்கிய நாள் முதல் இன்று வரை கேட்கலாம். இந்திய அணியின் மறுமலர்ச்சிக்கு கங்குலியின் தலைமைப் பண்புகள் எந்த விதத்தில் உதவியதோ அந்த அளவிற்கு லக்‌ஷ்மணது நிதானமான கோல்கத்தா 2001 டெஸ்ட் ஆட்டமும் இந்தியக் கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த டெஸ்ட் போட்டிகளுக்கே புதுப் பரிமாணத்தைக் கொண்டு வந்தது. அற்புதங்கள் அடிக்கடி நிகழ்த்தப்பட்டால் அவை சாதாரண நிகழ்வுகள் ஆகிவிடும். லக்‌ஷ்மணால் அந்த அளவிற்கு மீண்டும் ஒரு ஆட்டத்தைக் கொண்டு வர இயலாவிட்டாலும், அந்த ஆட்டத்தின் அடர்த்திக்கு நெருக்கமாக பல ஆட்டங்களில் ஆடி வென்றோ  அல்லது அணியைத் தோல்விகளில் இருந்து காத்தோ இருக்கின்றார். முதுகுவலி இருந்தாலும் பொறுத்துக்கொண்டு, புறமுதுகிட்டு ஓடிப்போன ஆட்டக்காரர்களைப்பற்றி நினையாமல் இஷாந்த் சர்மாவுடனும் கடைசியில் பிரக்யான் ஓஜாவுடனும் வெற்றிக்கான இலக்கை அடைய அவர் எடுத்த ஓட்டம் வெறு 76 ரன்களாக இருந்தாலும் அது 281 ரன்களுக்கு எந்தவகையிலும் குறைந்தது இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7aDXk37b4Ig/Txle_BcTiWI/AAAAAAAAF-s/5vA3zsxjjXY/s1600/vvslaxman.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 350px;" src="http://3.bp.blogspot.com/-7aDXk37b4Ig/Txle_BcTiWI/AAAAAAAAF-s/5vA3zsxjjXY/s400/vvslaxman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699691240225999202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோதானோவென்று லக்‌ஷமண் இந்திய அணியில் இடம்பெறவில்லை, வலுவாக  முதல்தர ஆட்டங்களில் பிரகாசித்து, வெகுவான ஓட்டங்களை எடுத்துத்தான் உள்ளே நுழைந்தார். ரஞ்சிப்போட்டிகளில் இரண்டு முச்சதங்களை அடித்ததோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து 9 ஆட்டங்களில் சதமடித்து தனது இருப்பை தேர்வாளர்களுக்குக் காட்டிக்கொண்டே இருந்தார். கடவுள்களும் மஹாராஜாக்களும் இருந்த இந்திய அணியில் முழுக்க முழுக்க தனது விடாமுயற்சியாலும், தொடர்ந்த அர்ப்பணிப்புடனும் அணியில் இருந்து வருபவர். &lt;br /&gt;&lt;br /&gt;96 ஆம் ஆண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்களில் அறிமுகமான லக்‌ஷ்மண் முதல் ஆட்டத்திலேயே அரை சதத்தைக் கடந்தார். இவர் அணில் கும்ப்ளேவுடன் இணைந்து எட்டாவது விக்கெட்டிற்கு எடுத்த  56 ஓட்டங்கள் கடைசியில் இந்தியா வெற்றியைப் பெற மிகப்பெரும் காரணமாகும். கடைவரிசை ஆட்டக்காரர்களை கண்ணியமாக வழி நடத்தி, தேவைப்படும் ஓட்டங்களை எடுக்க வைப்பதில் லக்‌ஷ்மண் எப்பொழுதுமே கெட்டிக்காரர். பின்வரிசை ஆட்டக்காரர்கள் லக்‌ஷ்மணுடன் ஆடும்பொழுது, தன்னம்பிக்கையுடன் ஆடுவதைக் கவனித்து இருக்கலாம். மத்திய வரிசை ஆட்டக்காரரான இவரை, அணியின் துவக்க ஓட்டக்காரராக பலிகடா ஆக்கப்பட்டார். லக்‌ஷ்மணுக்கு விருப்பம் இல்லை என்றாலும் துவக்க ஆட்டக்காரராக சித்துவுடனும் ரமேஷுடனும் சில ஆட்டங்கள் களமிறங்கினார். சில அரைசதங்களை எடுத்தபோதிலும், இவரின் சிட்னி ஆட்டம் இவரைக் கவனிக்க வைத்தது. இவர் எடுத்த 167 ஓட்டங்கள் தொடர்ந்த ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற வைத்தது. ஒரு நாள் போட்டிகளில் சோபிக்காவிட்டாலும், சில டெஸ்ட் போட்டிகளுக்குப்பின்னர் இந்தியா வந்த ஆஸ்திரேலியாவை நொங்கு எடுத்த 281 ஓட்டங்கள் இவரின் இரண்டாவது சதமானது, &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பகால விவிஎஸ் லக்‌ஷ்மணினின் பேட்டியைக் காண http://www.espncricinfo.com/ci/content/story/85437.html&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு ஒருநாள் சதங்கள் , இரண்டாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்தும் , ஒரு உலகக்கோப்பைப் போட்டிகளில் கூட ஆடாத பிரபல வீரர் யார் என வினாடிவினா வகையில் கேள்வி கேட்கப்பட்டால் அதன் விடை விவிஎஸ் லக்‌ஷ்மண், ஓடத் தெரியாதவர், ஆடத்தெரியாதவர் என்றெல்லாம் எகத்தாளமாகப் பேசப்பட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தானிலேயே கைப்பற்றக் காரணமாக இருந்தவர் விவிஎஸ் லக்‌ஷ்மண். லாகூரில் நடை பெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் சதமடித்து அந்த ஆட்டத்தையும் தொடரையும் வெற்றி பெறச்செய்தார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா 325 இலக்கை வெற்றிகரமாக எட்டிய அகமதாபாத் ஒருநாள் ஆட்டம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சிட்னி ஒருநாள் ஆட்டசதம் என பல சிறப்பான ஆட்டங்களை ஆடியிருந்த போதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தான் எடுக்கும் 20 களையும் 30 களையும் சதமாகவோ அரைசதமாகவோ மாற்றமுடியாமல் போகும்பொழுது , நன்றாக ஆடி இருந்த போதிலும் சராசரிகளையும் சதங்களையும் வைத்து ஆட்டத்திறனை மதிப்பிடும் இந்தியக் கிரிக்கெட் மனோபாவத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா சாபங்களிலும் ஒரு மறைமுக வரம் இருக்கின்றது. லக்‌ஷ்மணால் டெஸ்ட் ஆட்டங்களில் மேலும் நேர்த்தியாக ஆட முடிந்தது. பணிச்சுமை குறைந்தது. டெஸ்ட் ஆட்டங்கள் இல்லாதபொழுது ஓய்வு எடுக்காமல் பயிற்சிகளோ அல்லது ரஞ்கிப்போட்டிகளிலோ தொடர்ந்து ஆடி வருபவர். வலைப்பயிற்சிகளைக் காட்டிலும் , உண்மையான ஆட்டங்கள் ஆடும்பொழுதே சிறந்த பயிற்சி கிடைக்கின்றது, அது உள்ளூர் போட்டிகளாக இருந்த போதிலும் கூட..... யார் வீசினாலும் சில மைக்ரோ வினாடி கவனம் சிதறினாலும் ஆட்டமிழக்க இருக்கும் நிகழ்தகவு அனைத்துப்போட்டிகளிலும் ஒரே அளவே.... &lt;br /&gt;&lt;br /&gt;டெண்டுல்கருக்கும் கங்குலிக்கும் திராவிட் ஏவிஎம் ராஜன் என்றால் , திராவிடிற்கு லக்‌ஷ்மண் ஏவிஎம் ராஜன். கோல்கத்தா, அடிலெய்ட் என மறக்க முடியாத டெஸ்ட் ஆட்டங்களில் இந்த இணை கலக்கி இருந்தாலும் உள்ளூர்ப்போட்டிகளிலும் அதே அளவு ஆட்டத்தைத் தருவார்கள் என்பதற்கு ஒரு உதாரணம், 2003 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரானிக் கோப்பை ஆட்டத்தில் வெற்றி இலக்கு 340 என மும்பையால் நிர்ணயிக்கப்பட்டபொழுது, அசராமல் சிவாஜி - திராவிடும், ராஜன் - லக்‌ஷமனும் இணைந்து வெற்றியைத் தேடித் தந்தனர். ஆட்ட விபரம் இங்கே http://www.espncricinfo.com/india/engine/match/133757.html&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி 10 வருடங்களில் மறக்க முடியாத இந்திய டெஸ்ட் வெற்றிகளை எடுத்துப்பாருங்கள், அதில் லக்‌ஷ்மணது பங்கு பாதிக்குப் பாதி இருக்கும். தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய ஆட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள் அதிலும் லக்‌ஷமணது பங்கு இருக்கும். 37 வயது ஆகி இருந்தாலும் , கடந்த 6 வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் ஆடததால் , லக்‌ஷமணது ஆட்டத்திறனின் நீட்டிப்பு அதிகமே.... இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஊடகங்களும் எவ்வளவு மறதித் திறன் உடையவர்கள் என்பதற்கு உதாரணம், சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரும் சதத்தை அடித்தவர் லக்‌ஷமண். &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் சொகுசாக அனைத்தும் தனக்கு சாதகமாக இருந்தால் தான் ஆடுவார்கள், வெகுசிலர் எட்ட முடியாத இலக்கு, போராடினால்தான் வெற்றி , கழுத்துக்கு மேலே கத்தி, ஏழு கடல் ஏழு மலைத் தாண்டித்தான் சாதனையை அடைய முடியும் என்றால் புத்துணர்ச்சியுடன் ஆடுவார்கள். டெஸ்ட் ஆட்டங்களை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு, எப்படி லக்‌ஷ்மண் ஒவ்வொரு சறுக்கலிலும் மீண்டு வந்தார் என்பது தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னை ஏமாற்றி பவுல்ட் ஆக்கிவிட்டார்களோ என முழிக்கும் அதே லக்‌ஷ்மண் , அடுத்த ஆட்டத்தில் எதிர்ப்பக்கம் போகும் பந்தை மணிக்கட்டை சுழற்றி கால்பக்கம் அடித்து நம்மை மெய் மறக்கச்செய்வார்.  சிலர் வைனைபோன்றவர்கள், காலம் ஆக ஆகத்தான் அவர்களின் மதிப்பும் பெருமையும் கூடிக்கொண்டேப்போகும். வாழ்க்கைக்கு நெருக்கமான விளையாட்டான டெஸ்ட்போட்டிகளில் வயதைக் காரணம் காட்டி ஒருவரைக் கீழேத் தள்ளிவிடுவது டெஸ்ட்போட்டிகளின் மூலம் நாம் கற்கும்பாடங்களுக்கு அழகல்ல.... நிச்சயம் பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை எடுத்தப்பின்னர்தான் லக்‌ஷமண் ஓய்வு பெறவேண்டும் , அப்பொழுதுதான் அவருக்கும் அவரின் பங்கிற்கும் ஒரு முழுமைத்துவம் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;“நிக்காதடா.... வேடிக்கைப்பார்க்கதேடா ...ஓடுறா டேய் “ என அன்று ஓஜாவிடம் கத்தியது போல, உமேஷ் யாதவிடமோ அஷ்வினிடமோ அணிக்காகவும் அணியின் வெற்றிக்காகவும் லக்‌ஷ்மண் மீண்டும் ஒருமுறையல்ல, பலமுறை சத்தம் போட வேண்டும் என்பதே டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-7455267664223280489?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7455267664223280489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7455267664223280489'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_20.html' title='விவிஎஸ். லக்‌ஷ்மண்'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-7aDXk37b4Ig/Txle_BcTiWI/AAAAAAAAF-s/5vA3zsxjjXY/s72-c/vvslaxman.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-5781437863495996638</id><published>2012-01-19T08:17:00.001-08:00</published><updated>2012-01-19T08:29:20.925-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபில்தேவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சிக்ஸர் சித்துவும் பெருந்தகையாளர் கபில்தேவும்  - மறக்க முடியாத மெட்றாஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - 1987</title><content type='html'>சென்னை-மெட்றாஸ் , கிரிக்கெட் இவை இரண்டும் தேனும் பாலும் போல.... ஒன்றிணையும்பொழுது ரசிகர்களுக்கு திகட்டத்திகட்டக் கொண்டாட்டந்தான்... பெரும்பான்மையான சமயங்களில் காப்பியின் தொண்டைக்குழித் தித்திப்புக் கசப்பைப்போல வருத்தமான தோல்விகள் கிடைக்கப்பெறும் இடம் சென்னை சேப்பாக்கம் மைதானம்., இருந்த போதிலும் தோல்வியோ வெற்றியோ ஆட்டத்தை ஆட்டமாகப் பார்த்து கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். சொற்ப ஓட்டங்களில் தோல்வியுற்ற பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியாக இருக்கட்டும், சையத் அன்வர், அன்றைய உலகசாதனை ஓட்டங்கள் எடுத்த போதாகட்டும், எதிரணியினரைப் பாராட்ட சென்னை ரசிகர்கள் தவறியதேக் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் டிராவும் இல்லாமல், டையில் முடிவுற்ற ஆஸ்திரேலியா - இந்திய டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று ஒருவருடம் முடிந்த நிலையில், 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் துவங்குகிறது. இந்தியாவிற்கான முதல் ஆட்டம் மெட்றாசில்.... எள்ளு எண்ணெய் ஆகும் அளவிற்கு ரசிகர் கூட்டம்.... நாணய சுண்டலில் வென்ற இந்திய அணித்தலைவர் கபில்தேவ் ஆஸ்திரேலியாவை முதலில் ஆட பணிக்கிறார். ஜெஃப் மார்ஷ் சதமடிக்க, டீன் ஜோன்ஸ் அதிரடியாக ஆட , அன்றையக் காலக் கட்டங்களில் எட்ட முடியாத இலக்காக 271 ஓட்டங்கள் வெற்றி பெற நிர்ணயிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wTG_a8Zl3u0/TxhCNyFqG2I/AAAAAAAAF-c/dFylkkw18QQ/s1600/sidhu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-wTG_a8Zl3u0/TxhCNyFqG2I/AAAAAAAAF-c/dFylkkw18QQ/s400/sidhu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699378132988599138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பேறித்தனமான ஆட்டத்திற்குப் பெயர் பெற்ற, கவாஸ்கர் அதிரடியாக ஆட, அரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கியது. வழக்கமாக விரைவாக ஆடும் ஸ்ரீகாந்தை விட கவாஸ்கர் குறைந்த பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின் வருகிறார் நவ்ஜோத் சிங் சித்து. அவருக்கான முதல் ஆட்டம். சித்துவும் ஸ்ரீகாந்தும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பிளக்க, எளிதாக இந்தியா வெற்றியைப் பெற்றிவிடும் என்ற நிலையில் ஸ்ரீகாந்த் 70 ஓட்டங்கள் எடுக்க ஆட்டமிழந்தாலும், சித்து 5 சிக்ஸர்களுடன் வான வேடிக்கைகளைத் தொடர்ந்தார். அப்பொழுதெல்லாம், சிக்ஸர் என்றால் ஒன்றோ இரண்டோ ஆட்டத்திற்கு கிடைக்கும் நிலையில் ஐந்து சிக்ஸர்கள், அதுவுமொரு அறிமுக நாயகன் அடிப்பது என்பது பெரிய விசயம். 207 க்கு இரண்டு விக்கெட்டுகள், 90 பந்துகளில் வெறும் 64 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடங்கியது இந்திய அணியின் தொன்று தொட்டப்பழக்கம்... சித்து, வெங்க்சர்க்கார், ரவி சாஸ்திரி, கபில்தேவ் என வரிசையாக இருக்கைக்குத் திரும்ப, கடைசி ஓவர், 6 ரன்கள் எடுத்தால் வெற்றி,,, மட்டையடிப்பது மனிந்தர் சிங் .... டை ஆன டெஸ்ட் ஆட்டத்தில் கடைசியாக ஆட்டமிழந்தது, மனிந்தர் சிங் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;பந்து வீச வருவது ஸ்டீவன் வாக் ... மறு முனையில் நம்பகமான கிரன் மோரே ... அடுத்தடுத்து இரண்டு இரண்டாக நான்கு ஓட்டங்களை எடுத்த மனிந்தர் சிங் நம்பிக்கை சேர்க்கிறார். இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி,.. விட்டதைப்பிடிப்பாரா மனீந்தர் சிங்.... ஸ்டீவ் வாஹின் மிதவேகப்பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் .... ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.... இதே போல மேலும் ஒரு ரன் வித்தியாச பரபரப்பான வெற்றியை 92 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப்போட்டியிலும் ஆஸ்திரேலியா மீள்பதிவு செய்தது.-...... &lt;br /&gt;&lt;br /&gt;சரி கிரிக்கெட் வர்ணனையெல்லாம் இருக்கட்டும், கபில்தேவ் எப்படி பெருந்தகையாளர் ஆனார் என்று கேட்கிறீர்களா !!! ஆஸ்திரேலியா ஆடும்பொழுது, டீன் ஜோன்ஸ் அடித்த ஒரு சிக்ஸர் நான்காக அறிவிக்கப்படுகிறது. எல்லைக்கோட்டின் அருகே இருந்த ரவி சாஸ்திரி பந்து தலைக்கு மேலே பறந்து எல்லைக்கோட்டைத் தாண்டிய பொழுதும், சிக்ஸர் இல்லை எனக்கூறியதை நம்பி நடுவர் டிக்கி பேர்ட் நான்கு என அறிவிக்கிறார். சாதாரணமாகவே போங்கு ஆட்டம் ஆடும் ஆஸ்திரேலியர்கள், அடித்த சிக்ஸரை சும்மா விட்டுவிடுவார்களா என்ன ... ஆஸ்திரேலிய அணி ஆட்டம் முடிந்த பின்னர், ஆட்ட இடைவெளியின் பொழுது டீன் ஜோன்ஸ் அடம்பிடித்து, அணி மேலாளர் அலன் கிராம்ப்டனை கபில்தேவிடம் பேச வைத்தனர். ஆட்டத்தை கண்ணியமாக ஆடும் கபில்தேவ், எந்த ஆட்சேபனையும் இன்றி இரண்டு ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். நான்கு ஆறாக மாற்றப்பட்டு, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 270 ஆக உயர்த்தப்பட்டது. கடைசியில் தோல்விக்கு அந்த பெருந்தன்மை காரணம் என சராசரி ரசிகர்களால் பேசப்பட்டாலும், அன்றைய கிரிக்கெட் ஆட்டம் இன்றும் ரசிகர்களால் நினைவுகூறப்படுவதற்கு காரணம் கபில்தேவின் பெருந்தன்மை..... இன்று நன்னடத்தைகளைப் பற்றியும் அழுகுனி ஆட்டங்களைப் பற்றியும் வாய்கிழிய பேசும் ரவிசாஸ்திரியும் டீன் ஜோன்ஸும் எப்பொழுதும் கபில்தேவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதுவரை போகிற வருகிறவர்களால் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, வீறுகொண்டு அடுத்த 30 வருடங்களுக்கு அசைக்கமுடியாத கிரிக்கெட் சக்தியாக மாறிய வித்து இந்த மெட்றாஸ் ஒரு நாள் போட்டியில் தான் விதைக்கப்பட்டது. எழுச்சிப் பெற்ற 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது அதற்குபின் வந்த வெற்றிகள் எல்லாம் வரலாறு ஆனது.  &lt;br /&gt;ஆட்ட விபரங்களை இங்கே காணலாம் &lt;a href="http://www.espncricinfo.com/ci/engine/match/65093.html"&gt;http://www.espncricinfo.com/ci/engine/match/65093.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-5781437863495996638?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/5781437863495996638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/5781437863495996638'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/1987.html' title='சிக்ஸர் சித்துவும் பெருந்தகையாளர் கபில்தேவும்  - மறக்க முடியாத மெட்றாஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - 1987'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wTG_a8Zl3u0/TxhCNyFqG2I/AAAAAAAAF-c/dFylkkw18QQ/s72-c/sidhu.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-7029775194930295664</id><published>2012-01-19T03:59:00.000-08:00</published><updated>2012-01-19T04:50:50.067-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகத்திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முகமது அலி ஜின்னா'/><title type='text'>ஜின்னா - உலகத்திரைப்படம் - ஒரு பார்வை</title><content type='html'>காயிதே ஆசாம் முகமது அலி ஜின்னா, இவரின் பெயரைக் கேட்டாலே அன்றைய பிரிட்டிஷ் -  இந்திய அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனம். இன்றும் கூட ஜின்னாவைப் புகழ்ந்தால் இந்திய தேசியத்தின் எதிரி எனக் குற்றஞ்சாட்டப்படவும் வாய்ப்புகள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பகுதி மக்களுக்கு நாட்டைத் துண்டாடிய வில்லன், மறுபகுதி மக்களுக்கு வரலாற்று கதாநாயகன், அரசியல் வரலாற்று நோக்கர்களுக்கு ஒரு புதிர். ஒரு வேளை முகமது அலி ஜின்னா , இந்தியாவின் நேருவைப்போல அதிக காலம் ஆண்டிருந்தால் பாகிஸ்தான் ஒரு நவீன, மக்கள் நலன் நாடாக உருவெடுத்து இருக்கும் எனக் கூறும் அரசியல் நிபுணர்களும் உண்டு. ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான, தனது 14 அம்சத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமல் அரசியலில் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டபொழுது, தனது வீச்சைக் காட்டவேண்டும் என்று வீம்பாக பாகிஸ்தானிய கோஷத்தை எடுத்தவர், தனக்கு பிரதமர் பதவி கிடைக்காது என்ற கோபத்தில் பிரிவினை வாதத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. காந்தி கதாநாயகன் , நேரு துணை கதாநாயகன் , ஜின்னா வில்லன் என திரைப்படங்களில் காட்டப்படும் கதாபாத்திரக் கட்டமைப்புகளில்தாம் நாம் வரலாற்றில் படித்திருப்போம். ஸ்வீடன் வந்தபின், &lt;br /&gt;ஒரு திட்ட மேலாண்மை பாடத்தில் தலைமைப்பண்புகளை பற்றி ஒரு தலைவனை உதாரணமாகக் கொண்டு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. பெரும்பான்மையான பாகிஸ்தானிய மாணவர்கள் எழுதியது முகமது அலி ஜின்னாவைப் பற்றியதுதான். கட்டுரைகள் மிகையாக எழுதப்பட்டிருந்தாலும்,  சிலக்கட்டுரைகளை, படித்தபொழுது சுவாரசியமான மனிதராகப் பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-BbKiaUxhxuI/TxgGnj2cCmI/AAAAAAAAF9s/bFdSnZcz0iI/s1600/jinna1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 211px;" src="http://1.bp.blogspot.com/-BbKiaUxhxuI/TxgGnj2cCmI/AAAAAAAAF9s/bFdSnZcz0iI/s400/jinna1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699312605145598562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்திருந்த ஜின்னா, காந்தி திரைப்படத்தில் சிகரெட் பிடித்தபடி, முகத்தைக் கடுமையாக வைத்திருக்கும் இந்திய நடிகர் அலிக்பதமஸி தான். காந்தி திரைப்படத்தில் பிரிட்டீஷ் கதாபாத்திரங்களுக்கு அடுத்தபடியாக கெட்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் ஜின்னாவினது. காந்தி திரைப்பட உருவாக்கத்தில் இந்திய திரைப்பட வாரியமும் பங்கு பெற்று இருந்ததால் திட்டமிட்ட சேறடிப்பு இருந்ததாக ஒரு வாதம் உண்டு. சரி காந்தியைப் பற்றி திரைப்படம் உலகிற்கு வந்தாகிவிட்டது. அவருக்கு இணையான வரலாற்று நாயகன் ஜின்னாவைப் பற்றி படம் வேண்டும் அல்லவா... பொதுவாக பொழுது போக்கு அம்சங்களுக்கு நேரிடை சந்தையிலோ கள்ள சந்தையிலோ இந்தித் திரைப்படங்களை நம்பி இருக்கும் பாகிஸ்தானிய சமூகம் போர்கள், சர்வாதிகாரிகள் என அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்கள் திரைப்படம் எடுக்க எங்குப்போவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-86QYVz_qrcI/TxgGg8bRGDI/AAAAAAAAF9g/QbHdtCYMplo/s1600/jinna4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-86QYVz_qrcI/TxgGg8bRGDI/AAAAAAAAF9g/QbHdtCYMplo/s400/jinna4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699312491483437106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்தித் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து, பன்னாட்டு வெகுசனங்களுக்கு ஜின்னா ஒரு எதிர்மறைநாயகன் என ஸ்திரப்படுத்தியப்பின்னர், 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜின்னா. கலைகளின் இருப்பிடம் கல்கத்தாவில் பிறந்து, இங்கிலாந்தில் குடியேறிய ஜமீல் தெஹ்லாவி இயக்க ஜின்னா திரைப்படம் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் வெளியானது. ஜமீல் தெஹ்லாவியின் முந்தையத் திரைப்படமான தெ பிளட் ஆஃப் ஹுசைன் , ஜியா உல் ஹக் அரசாங்கத்தால் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று கதாப்பாத்திரங்களைத் திரையில் வடிவமைக்கும்பொழுது, தேர்ந்தெடுக்கப்படும் நாயகர்கள்-நாயகிகள் வேறு எந்த பிம்பங்களுக்குள்ளும் சிக்காதிருப்பவர்களாக இருந்தால் நல்லது. மாறாக ஜின்னாவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிறிஸ்டோபர் லீ. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--yPcMxI5W3A/TxgG-vwOpGI/AAAAAAAAF-E/N-ygcultz70/s1600/jinna3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 203px;" src="http://3.bp.blogspot.com/--yPcMxI5W3A/TxgG-vwOpGI/AAAAAAAAF-E/N-ygcultz70/s400/jinna3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699313003477771362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்டோபர் லீ, தேர்ந்த நடிகர்தான், அதில் சந்தேகமுமில்லை,  பிரச்சினை என்னவெனில் அவர் டிராகுலா வரிசைப்படங்களில் தொடர்ந்து நடித்தவர். பொதுவாகவே  தொட்டாச்சிணுங்கிகளான துணைக்கண்ட மக்கள் இதற்கு குரூரமான படங்களில் &lt;br /&gt;நடித்த நடிகர், தங்களின் தலைவனாக எப்படி நடிக்கலாம் என பாகிஸ்தானிய மக்களின் ஒரு பிரிவினர் கொதித்து எழுந்தனர். அடுத்தது, ஜின்னாவின் மனைவி ரத்தன்பாய் ஜின்னாவாக நடித்தவர் - இந்திரா வர்மா. காமசூத்திரா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர். கேட்கவா வேண்டும், பாகிஸ்தானிய அரசாங்கம், நடுவில் திரைப்படத்திற்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்தியது.  தளராத ஜமீல் ஒத்தக் கருத்து உடைய மக்களின் உதவியுடன் திரைப்படத்தை முடித்து வெளியிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;சுயசரிதங்களைப் படமாக்கும்பொழுது எழுதப்படவேண்டிய நேரிடை திரைக்கதை இந்தத் திரைப்படத்தில் பின்பற்றப்படவில்லை என்பது மூன்றாவது கோணல். மரணமடைந்த ஜின்னாவின் ஆத்மா வானுலகிற்கு வருகிறது. இந்தித் திரைப்பட நடிகர் சசிகபூர் தான் வானுலக தேவதூதர். ஜின்னா நரகத்திற்கு அனுப்பபடவேண்டியவரா, சொர்க்கத்திற்கு வரவேண்டியவரா என சசிகபூர் தனது கணினியின் கோப்புகளில் விபரங்களைத் தேடுகிறார். சிலக்கோப்புகள் அழிந்துவிட்டபடியால், சசிகபூரும் ஜின்னாவின் ஆத்மாவும் மீண்டும் பூமிக்குப் பயணிக்கின்றனர். சசிகபூருக்கும் ஜின்னவின் ஆத்மாவிற்கும் நடக்கும் உரையாடல்கள், கடந்த கால மீள்பார்வைகளாக விரிகின்றன. படம் முழுக்க, ஜின்னாவின் வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியாகவே ஒவ்வொரு காட்சியமைப்பும் அமைக்கப்பட்டிருப்பது மிகப்பெரும் நெருடல்.  போகிற போக்கில் விளக்கங்கள் இல்லாமல், முழுத் திரைக்கதையும் விளக்கங்களைச் சுற்றியே இருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜின்னா நாயகப்பாத்திரம் என்றால், நேருவின் பாத்திரம் எதிர்மறைப்பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. ஜின்னா - ரத்தன்பாய் காட்சிகளை விட, நேரு - எட்வினா காட்சிகள் படத்தில் அதிகம். நேரு பத்திரமாட்டுத் தங்கமல்ல, என அவரை வெளிச்சப்படுத்தி, &lt;br /&gt;ஜின்னாவை உயர்த்திக் காட்டும் கதைப்போக்கு இருப்பது ஒரு சறுக்கல். எந்தவித ஒப்புமைகளும் இல்லாமலேயே ஜின்னா மகத்தான தலைவர் என படத்தில் காட்சிப்படுத்தி இருக்கலாம்.  நேருவும் எட்வினாவும் படுக்கை அறையில் அமர்ந்து பேசிக்கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டும் இருப்பதும் போன்ற காட்சியமைப்புகள் உண்மையிலேயே தைரியமானவையே. மௌண்ட்பேட்டன் மற்றும் நேரு, எட்வினாவின் கைப்பாவைகள் எனக் குறிப்புகளால் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்திய வரலாற்று கற்பிதங்களில் ஊறியவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காட்சியில் லியாகத் அலிகான், சிலக்கடிதங்களைக் கொண்டு வந்து ஜின்னாவிடம் கொடுத்து, இக்கடிதங்கள் நேரு எட்வினாவிற்கு இடையில் பரிமாறப்பட்டவை, இவற்றைப் பகிரங்கப்படுத்தவேண்டும் எனச் சொல்லுவார். அதற்கு ஜின்னா இந்தக் கடிதங்கள் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது, அதைப் பிரசுரிப்பது என்பது தவறு, இக்கடிதங்களை எரித்துவிடுங்கள் என கோபமாக உத்தரவிடுவார்.  நேருவிற்கும் ஜின்னாவிற்கும் இடையிலான நீயா நானாப் போட்டியில் ஜின்னா எத்தனைப் பெருந்தன்மையானவர் என்பதை நிருபிப்பதிலேயேப் பாதிப்படம் போகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-sYTze52SQk0/TxgGwbSPrTI/AAAAAAAAF94/X3Qjnf_sfLI/s1600/jinna2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="http://3.bp.blogspot.com/-sYTze52SQk0/TxgGwbSPrTI/AAAAAAAAF94/X3Qjnf_sfLI/s400/jinna2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699312757465132338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் அறிந்திராத ஜின்னாவின் இளமைப்பருவத்தை உள்ளபடியே கூறியிருப்பது படத்திற்கு பலம் சேர்க்கும் விசயம். முதல் மனைவி இறந்த சோகத்தில் தனித்து இருக்கும் ஜின்னா, ரத்தன்பாய் என்ற பார்சிப் பெண்ணின் மேல் ஈர்ப்பாகிறார். ரத்தன்பாய் குடும்பம் எதிர்க்க, ரத்தன்பாய் சட்டப்பூர்வ திருமண வயது வரைக் காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அரசியல் போராட்டங்கள், அரசியல் தனிமைப்படல், மனைவியின் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்கமுடியாமை, மேற்கத்திய சிந்தனையோட்டம் - இஸ்லாமிய தேசிய முன்னெடுப்பு இரண்டு நேரெதிர் கருத்தாங்களுக்கு இடையில் அல்லல் படல் என இளமையான ஜின்னாவாக ரிச்சர்ட் லிண்டர்ன் அருமையாக நடித்து இருக்கின்றார். &lt;br /&gt;படத்தில் என்னைக் கவர்ந்தப் பாத்திரமும் இவரே !!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-xmq1MyWN9Jo/TxgI-T-mFaI/AAAAAAAAF-Q/5EiyyEMuJYQ/s1600/jinna5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 264px;" src="http://2.bp.blogspot.com/-xmq1MyWN9Jo/TxgI-T-mFaI/AAAAAAAAF-Q/5EiyyEMuJYQ/s400/jinna5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699315195045090722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் பெண் சமம் என, தனது தங்கை பாத்திமா தீவிர அரசியலில் ஈடுபடுவதையும், தனக்கு ஆலோசனைகள் வழங்குவதையும் ஆதரித்த ஜின்னா, முஸ்லீம் அடிப்படைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகவும் படத்தில் காட்டப்படுகிறது. ரத்தன்பாய் இறந்த பின்னர் பாத்திமா தனது பல்மருத்துவமனையை மூடிவிட்டு, தனது அண்ணனுடனேயே வந்துத் தங்குகிறார். ஜின்னா எடுக்கும் பெரும்பான்மையான முடிவுகளில் பாத்திமாவின் பங்கும் உண்டு என்பதை திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. (பாகிஸ்தானின் இந்திரா காந்தியாக உருவெடுத்து இருக்கக்கூடியவர், பின்னாட்களில் அயுப்கானின் அடாவடி தேர்தல் தில்லுமுல்லுகளால் அதிபராக முடியாமல் போய்விட்டார். ) &lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பிணங்களுடன் ரயில்கள் வந்ததைப்போல , இந்தியப்பகுதிகளில் இருந்தும் அதே அளவிற்கு பிணங்களுடன் ரயில்கள் அனுப்பப்பட்டன என்பதையும் திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. கடைசிவரை சிறையே செல்லாமல் ஒரு நாட்டை வார்த்து எடுத்தது ஜின்னாவின் சிறப்பாக சொல்லப்பட்டாலும்,, அரசாங்கத்தை எதிர்த்து செய்யப்படும் போராட்டங்களுக்கு ஜின்னா ஆதரிக்கவில்லை என்பது நெருடுகிறது. போராட்ட விதைகளே சுதந்திரத்தை அறுவடை செய்யும் என்பதில் நம்பிக்கை இல்லாமல், ஜின்னா ஒரு மேட்டிமை மேசை அரசியல்வாதியோ எனப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமும் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தின் இறுதியில்,  அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி ஜின்னா வழக்கறிஞராக வாதாடுவது போன்ற கற்பனையான நீதிமன்றக் காட்சி மேலுலகில் நடத்தப்படுவது போல காட்சிகள் இருப்பது பார்க்க நன்றாக இருந்த போதிலும் முன்பே சொன்னபடி, சுயசரிதைப்படங்களுக்கான இலக்கணக் கூறாக இல்லை. காந்தி, நேருவுடன் ஜின்னா பாபர் மசூதி இடிப்பையும் அதனைத் தொடர்ந்த கலவரங்களையும்  கணினியில் பார்ப்பது போலவும், ஜின்னா கலவரங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான் தான் அன்றே முஸ்லீம்களுக்கு தனிநாடு கேட்டதாக சொல்வதுடனும், காந்தியும் நேருவும் மௌனமாக அதை ஆமோதிப்பதுடனும் படம் முடிவடைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்க, ஜின்னாவினது மேல் இருக்கும் அவதூறுகளைக் களையவேண்டும் என்ற இயக்குனரின் தவிப்பு சாமனிய ரசிகனுக்கும் புரிவது போல் இருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். கட்டுப்படுத்தப்பட்ட பொருட்செலவுகளுடனுடம் படத்தைத் தயாரித்து இருந்திருந்தாலும், ஒரு திரைப்படமாக கண்டிப்பாக ஜொலிக்கின்றது. தரமான ஒளிப்பதிவு, பொருந்துகின்ற பின்னணி இசை 50 களுக்கு முந்தைய வருடங்களை மீண்டும் திரையில் கொண்டு வந்தது, நவநாகரிக , மிடுக்கான கிறிஸ்டோபர் லீ மற்றும் ரிச்சர்ட் லிண்டர்ன் ஆகியோரது நடிப்பு ஆகியனவற்றுடன் , இந்தியத் துணைக்கண்டத்தின் மாற்று அரசியல் வரலாற்றைப் பதிவு செய்த படம் வகையில் கண்டிப்பாக ஜின்னா குறிப்பிடத்தக்க திரைப்படம். காந்தி திரைப்படத்துடன் இதை ஒப்பிடுவது நியாயமானது இல்லை என்றாலும், ஒப்புமைகள் தவிர்க்கப்பட முடியாதது. படம் திரையரங்குகளில் வெளிவந்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்தே ஜின்னா திரைப்படத்தின் டிவிடி-விசிடி வடிவம் வெளிவந்தது என்பதிலும் சொல்லப்படாத அரசியல்கள் இருக்கின்றன. இத்திரைப்படம் ஆங்கிலத்திலும் உருதிலும் யூடியுப் இணையதளத்தில் கிடைக்கின்றது. திரைப்பட ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டியத் திரைப்படம். படம் பார்த்து முடிந்த பின்னர், ஜின்னா கதாநாயகன் என்று ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, அவரை இனிமேல் வில்லன் என கண்டிப்பாக சொல்ல மாட்டீர்கள், அதுவே இந்தப்படத்தின் வெற்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-7029775194930295664?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7029775194930295664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7029775194930295664'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_19.html' title='ஜின்னா - உலகத்திரைப்படம் - ஒரு பார்வை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-BbKiaUxhxuI/TxgGnj2cCmI/AAAAAAAAF9s/bFdSnZcz0iI/s72-c/jinna1.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-2469208818940440827</id><published>2012-01-18T04:20:00.000-08:00</published><updated>2012-01-18T06:02:39.146-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இத்தாலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கப்பல் விபத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>கவிழ்ந்த கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-rc9rnIPn7r4/TxbQ68vC8KI/AAAAAAAAF9U/5O8Yx1oVUoU/s1600/bigcosta.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 370px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-rc9rnIPn7r4/TxbQ68vC8KI/AAAAAAAAF9U/5O8Yx1oVUoU/s400/bigcosta.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698972089638383778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து நூறாவது ஆண்டு நினைவுதினம் நெருங்கிக் கொண்டிருக்கையில், இத்தாலிய கடற்பகுதியில் பிரம்மாண்டமான கோஸ்டா கன்கார்டியோ ( Costa Concordia) தரைத் தட்டிக் கவிழ்ந்தது. நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களுடன் பிராயணப்பட்டுக்கொண்டிருந்த உல்லாசக்கப்பல், சிவிட்டாவெக்கியா(Civitavecchia) என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் கியில்யோ (Giglio Islands)என்ற தீவுக்கருகில் தரைத் தட்டியது. இதுபோன்ற உல்லாசக்கப்பல்களில் சிலமுறை பயணம் செய்து இருப்பதால், தனிப்பட்ட அளவிலும் இந்த விபத்து பாதித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டைட்டானிக் கப்பலைப் போல பெரும் உயிர்சேதம் இல்லை என்ற போதிலும், மத்தியத் தரைக்கடலின் மிதக்கும் நகரம் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இந்த கப்பல் சாய்ந்தபடி கிடக்கும் புகைப்படங்கள் பரவலாக அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. விபத்தைக் காட்டிலும் அதிகமாக இத்தாலியில் தற்பொழுது விவாதிக்கப்படுவது கப்பல் கேப்டனின் விபத்திற்கு முன்னரும் பின்னரும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள்தாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wGfZp2zZ3Ak/Txa5XoANWFI/AAAAAAAAF8w/vO3WNqSCzhA/s1600/costa_slip.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 243px;" src="http://4.bp.blogspot.com/-wGfZp2zZ3Ak/Txa5XoANWFI/AAAAAAAAF8w/vO3WNqSCzhA/s400/costa_slip.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698946194010363986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வருடங்களுக்கு முன்னர், தஞ்சாவூர் வாணக்காரத் தெரு வழியாக பேருந்துகள் செல்லாது, வண்டிக்காரத் தெருவழியாகத்தான் புறநகரப்பேருந்துகள் செல்லும். ஆனாலும் மதியம் ஒரு மணி அளவில் சில சோழன் போக்குவரத்து கழகபேருந்துகள் மட்டும் ஒன்று, தனது வீட்டில் இருந்து கட்டுச்சோற்றை வாங்கவோ, அல்லது தனது உறவினர்கள் யாரையேனும் இறக்கிவிடவோ வாணக்காரத் தெரு வழியாக பயணப்படும். பேருந்துகளுக்கு சரி, கப்பல்களுக்கு ... கப்பலை ஓட்டும் குழுவினரில் ஒருவர் வசிக்கும் தீவை ஒட்டி கப்பலை செலுத்தி, உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் செய்ய முற்பட்டபொழுதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. அகண்ட கடற்பகுதி இருந்தாலும் பொதுவாகக் கப்பல்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வழித்தடத்தில்தான் பயணப்படவேண்டும். இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில்  கப்பல் தலைவரின் முடிவில் பாதைகள் மாற்றப்படலாம். எதிர்வரும் அபாயத்தை அறியாமல் கரையை ஒட்டிப்போக, பெரும்பாறையில் மோதி சாய்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவிற்கும் துறைமுகக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கும் நடந்த உரையாடலில், கப்பல் கவிழ்ந்தவுடன் கப்பலையும் பயணிகளையும் அதோகதியாக விட்டுவிட்டு கேப்டன் ஓடி இருக்கிறார் என்பது தெளிவாகி இருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-w_4Uo6pjn5g/Txa5n8fAn-I/AAAAAAAAF9I/grB1JABzqIU/s1600/captain.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 339px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-w_4Uo6pjn5g/Txa5n8fAn-I/AAAAAAAAF9I/grB1JABzqIU/s400/captain.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698946474386169826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டனின் பதில்கள் வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனின் சாக்குப்போக்குகள் இருக்கின்றன. உரையாடலின் உச்சமாக, துறைமுகப் பொறுப்பு அதிகாரி கோபம், நீ உயிர் பிழைத்து இருக்கலாம், இதற்கான விலையை நீ கொடுத்தாகவேண்டும்,, உன் வாழ்க்கை இனி அத்தனை சுலபமாக இருக்கப்போவதில்லை என வார்த்தைகளாக வெளிப்பட்ட போதிலும் கோழைத்தனத்தின் சிகரமாக பிரான்சிஸ்கோ கப்பலுக்கு மீண்டும் போகவே இல்லை. விடியற்காலையில் டாக்ஸி பிடித்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அடிபட்ட நாயின் கண்களில் தெரியும் கலவரமும் பயமும் கேப்டனிடம் காணப்பட்டதாக இத்தாலியருக்கே உரிய உவமையுடன்  அவரைக்கூட்டிச் சென்ற டாக்ஸி ஓட்டுனர் சொல்லுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-bjrdMReudrk/Txa5f42-HdI/AAAAAAAAF88/3sMbDvbDOtw/s1600/costatrip.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-bjrdMReudrk/Txa5f42-HdI/AAAAAAAAF88/3sMbDvbDOtw/s400/costatrip.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698946335973973458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு அளிக்கப்பட்ட கடல் மேப்பில் அந்த பாறை இருக்கவே இல்லை, தன்னுடைய உயிர்கவச ஆடையை வேறு ஒருவருக்கு அளித்து விட்டதால் மீண்டும் கப்பலுக்கு செல்லவில்லை,  தனது மேற்பார்வையின் பேரில் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது என வாதிட்டாலும், கேப்டனின் வாதங்கள் எடுபடப்போவதில்லை என இத்தாலிய சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். 2002 ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரியாக பணியில் கோஸ்டா கப்பல் நிறுவனத்தில் சேர்ந்த பிரான்சிஸ்கோ , 2006 ஆம் ஆண்டு கப்பலின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனைப் பாதுகாப்பு அம்சங்களோடு இருந்தாலும் சரி, கப்பலின் கேப்டனாக முதன்முறை பொறுப்பேற்கும்பொழுது , டைட்டானிக் பற்றிய கேள்வித் தவிர்க்கப்படமுடியாதது.- &lt;br /&gt;&lt;br /&gt;“பனிப்பாறைகள் மிதக்கும் கடல்பாதையின் வழியாக டைட்டானிக் கப்பலை பயணிக்கவைத்தது முதல் தவறு, மேலும் சமகால தொழில்நுட்ப வசதிகளில் டைட்டானிக் போன்று ஒரு விபத்து ஏற்படுவது சாத்தியமல்ல” என்பது தான் 6 வருடங்களுக்கு முன்னர் பிரான்சிஸ்கோவின் பதிலாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விபத்திற்குப்பின்னர், பிரான்சிஸ்கோவின் அத்தனை முந்தைய நடவடிக்கைகளும் அலசப்படுகின்றன. விபத்திற்கு முன்னர் ஒரு அழகிய இளம்பெண்ணுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டதை, இயல்பாக கப்பல்களில் நடக்கும் ஒன்றைக்கூட அலட்சியக்காரணிகளில் ஒன்றாக முன்வைக்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு, அனைத்து பிரம்மாண்டங்களின் வீழ்ச்சிகளுக்கு அடிப்படை  காரணம் அலட்சியமே எனத் திரும்ப திரும்ப பதிவு செய்தாலும், பாடங்கள் நினைவுக்கூறப்படுவதில்லை. மெத்தனத்துடன் அலட்சியமும் கைக்கோர்க்கும்பொழுது, விபத்துக்களுடன் கையாலாகத கோழைகளும் வரலாற்றில் அடிக்கடி நினைவுகூறப்படுவார்கள் , பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவும் அத்தகையவர்களில் ஒருவர் ஆவார் என்பது துரதிர்ஷ்டவசமானதே !!! அடுத்தமுறை கப்பலில் பயணப்படும்பொழுது, கேப்டனின் வரவேற்புரையை உன்னிப்பாகக் கேட்கவேண்டும், குறைந்த பட்சம் அடுத்த ஒரு நாளாவது எனது உயிரும் உடைமைகளும் அவரின் பொறுப்பல்லவா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-2469208818940440827?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/2469208818940440827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/2469208818940440827'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_18.html' title='கவிழ்ந்த கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-rc9rnIPn7r4/TxbQ68vC8KI/AAAAAAAAF9U/5O8Yx1oVUoU/s72-c/bigcosta.gif' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-3267697413033281275</id><published>2012-01-13T05:31:00.000-08:00</published><updated>2012-01-14T00:28:40.228-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்குகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரயில்வே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ரயில் பயணங்களில் - துணுக்குகளின் தொகுப்பு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-tfaDIFY4llA/TxA2wSkjumI/AAAAAAAAF70/FfO_7iQQxmE/s1600/minimumgauge.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-tfaDIFY4llA/TxA2wSkjumI/AAAAAAAAF70/FfO_7iQQxmE/s400/minimumgauge.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697113731870472802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த விசயங்கள் சிலவற்றைப் பெண்களாக மாற்றிக்கொள்ளவரம் கிடைத்தால், கிரிக்கெட்டிற்குப்பின் ரயில்போக்குவரத்தைப் பெண்ணாக மாற்றிவிடுவேன். உலகத்தை சுருங்கிய கிராமமாக மாற்ற போடப்பட்ட முதல் அடிக்கல் இருப்புப்பாதைகள். இருப்புப்பாதைகளை,  ரயில்வேஸ் என அழகான ஆங்கிலத்தில் சொல்லமால் அசிங்கமாக இரும்பினால் ஆனால் பாதைகள் என்ற பொருள் தரும் பதம் எப்படி வந்தது என்ற குழப்பம் நீண்ட நாட்களாகவே உண்டு. நெடுங்காலம் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய ஆங்கிலத்தில் ரயில்வே என்பதில் எந்த இரும்பு சம்பந்தப்பட்டதும் இல்லியே, பின்னர் எப்படி என யோசித்தது உண்டு. ஆங்கிலத்தைத் தவிர, ஏனைய ஐரோப்பிய மொழிகளில் ரயில்பாதைகளுக்கு, இரும்பினால் அமைக்கப்பட்ட பாதைகள் என்ற சொற்பதத்திலேயே அர்த்தங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டிற்கு, Chemin de fer என பிரெஞ்சு மொழியிலும், Eisenbahn என ஜெர்மன் மொழியிலும், Järnväg என சுவிடீஷ் மொழியிலும் , Ferrovie என இத்தலிய மொழியிலும் Fer, Eisen, Järn , Ferro என இரும்பைக் குறிப்பிடும் வார்த்தைகள் முறையே அமைந்துள்ளதை அறிந்த பின்னர் இருப்புப்பாதை என்ற மொழியாக்கம் ரயிலைப்போலவே அழகாக தெரிய ஆரம்பித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களும் கிரிக்கெட்டும் சுவாரசிய அம்சங்களாக வாழ்க்கையில் இடம்பெறும் முன், என் வாழ்க்கையில் நுழைந்தவை ரயில் வண்டிகளும், ரயில் பாதைகளும் ரயில் &lt;br /&gt;நிலையங்களும்தான்.  கடை 80கள் ஆரம்ப 90களில் கொல்லத்தில் இருந்து திருச்சி வழியாக நாகூர் வரை செல்லும் தொடர்வண்டியில் கொரடாச்சேரி வரை செல்லும் பயணங்கள் தான் &lt;br /&gt;ரயிலின் மீதான காதலை அதிகரித்தன. அன்றைய ரயில்வே அமைச்சர், ஜாபர்ஷெரீப் பெங்களூரில் இருந்து நேரிடையாக ரயிலில் நாகூர் செல்ல முடியவில்லை  என திருச்சி நாகூர் &lt;br /&gt;அகலரயில் பாதை திட்டம் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லுவார்கள். திருச்சி நாகூர் மீட்டர்வழி ரயில் பாதை நிறுத்தப்பட்டவுடன் சிலப்பல வருடங்கள் ரயில் பிரயாணங்கள் &lt;br /&gt;தடைப்பட்டன.சன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு, நெடும் வளைவுகளில் தொடர்வண்டியின் எஞ்சினைப் பார்க்கும் ஆனந்தம் இன்றும் கோபன்ஹேகன் கார்ல்ஸ்க்ரோனா ரயிலில் &lt;br /&gt;செல்லும்போதும் தொடர்கின்றது. ரயிலின் மீதான காதல் ரயிலைக்காட்டும் திரைப்படங்களையும் விரும்பிப்பார்க்க வைத்தது. செந்தூரப்பூவே என்ற ஒருபடம், ரயிலுக்காகவே அடிக்கடிப்பார்த்த படம். &lt;br /&gt;&lt;br /&gt;அகத்தா கிறிஸ்டியின் Murder on the Oriental Express என்ற கதை முழுக்க முழுக்க ஓரியண்டல் விரைவு ரயிலில் நடப்பதாக எழுதி இருப்பார். ஆடுகளம் திரைப்படம் பிடிக்க பலக்காரணங்களுள் ஒன்று, ரயில்வே காலனி பின்புலம். திருச்சியில் ரயில்வே காலனியைக் கடக்கும்பொழுதெல்லாம் இவர்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் ரயிலில் போவார்களே ஒரு பொறாமை கலந்த ஏக்கம் ஏற்படும். ஒரு வேளை பத்தாவது படிக்கும்பொழுது எழுதிய ரயில்வே துறைக்கான தேர்வில் தேர்ச்சிப் பெற்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ !! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-hcDHp21JR6o/TxA2ZgRutUI/AAAAAAAAF7o/PrQlE85FNKg/s1600/longname.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-hcDHp21JR6o/TxA2ZgRutUI/AAAAAAAAF7o/PrQlE85FNKg/s400/longname.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697113340412605762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் தோல்விகள் எதைப்பார்த்து நினைவுக்கு வருகின்றதோ இல்லையோ, கைவிடப்பட்ட ரயில் பாதைகளைப் பார்த்தவுடன் சட்டென நினைவுக்கு வரும்.  உலகத்திலேயே அழகான &lt;br /&gt;கோலம் என்னவென்றால் ரயில்பாதைகள்தாம், இந்தியத் துணைக்கண்ட பிரிப்பின் போது ரத்தமின்றி துண்டானது தண்டவாளங்களும்தான், எல்லைகளில் தொடர்பற்று துண்டுகளாகக் &lt;br /&gt;கிடக்கும் தண்டவாளங்களும் தன் பங்கிற்கு வரலாற்றைச் சேர்த்து வைத்திருக்கின்றனஅதை அழிக்க எப்படி மனசு வருகின்றதோ.... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8eD9ymxFEy0/TxA-Xu7paXI/AAAAAAAAF8Y/T2sndcj811E/s1600/krushnagiri_borivili_national_park.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="http://2.bp.blogspot.com/-8eD9ymxFEy0/TxA-Xu7paXI/AAAAAAAAF8Y/T2sndcj811E/s400/krushnagiri_borivili_national_park.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697122106079799666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் போக்குவரத்துகளில் மிகவும் பிடித்தது &lt;br /&gt;குறைவேக பயணிகள் ரயில்கள்தான் எனினும் சமீபகாலமாக ரயில்டிராம்கள் பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. டிராம் போக்குவரத்தை அனுபவிக்க வேண்டுமானால் கண்டிப்பாக &lt;br /&gt;சுவிட்சர்லாந்தின் ஜூரிச் அல்லது ஆஸ்திரியாவின் வியன்னாவிற்கு ஒரு முறையேனும் பயணப்படவேண்டும். நகரம் முழுவதும் அழகிய கோலத்தின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் போல எண்ணிலடங்கா டிராம்கள் ,  டிராம்களில் நகரத்தைச் சுற்றிப்பார்ப்பது கவித்துவமானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wfgLS4vgJ7A/TxA47Av_jvI/AAAAAAAAF8M/ioo5euoeYnA/s1600/trams.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 234px;" src="http://2.bp.blogspot.com/-wfgLS4vgJ7A/TxA47Av_jvI/AAAAAAAAF8M/ioo5euoeYnA/s400/trams.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697116115088412402" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qhLgSJr2QGk/TxA4gNP8DYI/AAAAAAAAF8A/NcUq_QsBS0A/s1600/rail.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/-qhLgSJr2QGk/TxA4gNP8DYI/AAAAAAAAF8A/NcUq_QsBS0A/s400/rail.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697115654587157890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த ஒன்று என இருந்தால் பிடிக்காத ஒன்றும் இருக்கவேண்டும்தானே... சுரங்கவழிப்பாதைகளில் செல்லும் மெட்ரோ ரயில்களை காதை அடைக்கும் வேகத்தினாலும் நெரிசலினாலும் பிடிக்காது.. &lt;br /&gt;&lt;br /&gt;ரயில்களைப் பற்றி சிலத்துணுக்குகளுக்குப் போகும் முன்னர் ஒரு கேள்வி, சென்னையில் இருந்து பாரிஸிற்கு ரயில்விடமுடியுமா தொடர்ச்சியாக ரயில்பாதை இணைப்புகள் இருந்த போதிலும் நேரிடையான ரயிலை இயக்க முடியாது. (Bogie exhange முறையில் சக்கரங்களை மாற்றி தொடர்ந்து ஓட வைக்க முடியும் எனினும், சில இடங்களில் சரக்கு ரயில்களைத் தவிர பயணிகள் ரயில்களுக்கு இந்த முறைப் பயன்படுத்தப்படுவதில்லை) ஏனெனில் இந்தியவில் பயன்படுத்தப்படும் அகலரயில் பாதைகள் ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுவதில்லை. இந்திய அகலரயில் பாதையில், தண்டவாளங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி, நீண்ட தூர பயணிகள் சரக்குப்போக்குவரத்தில் இந்திய ரயில்வே  பயன்படுத்தும் ரயில்பாதைகள் ஐரோப்பியப் பாதைகளை விட அகலமானது. துணைக்கண்டத்தைத் தவிர, அர்ஜெண்டினாவிலும் சிலியிலும் 1676  மில்லிமீட்டர்கள் இடைவெளியுடன் கூடிய தண்டவாளப்பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷியா பின்லாந்து நீங்கலாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் ரயில் பாதைகளின் அகலம் 1435 மில்லிமீட்டர்கள். 1435 மில்லிமீட்டர்கள் அகலம் கொண்ட பாதைகளே பன்னாட்டுத் தரமாகப் பார்க்கப்படுகின்றது. சுற்றுத்தலங்களிலும், மலைத் தோட்டங்களிலும், பூங்காக்கள் அருங்காட்சியகங்களிலும் 600 மில்லிமீட்டர்களுக்கும் குறைவாக உள்ள இருப்புப்பாதைகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் மிதமிஞ்சிய பணக்காரன் ஆகும்பொழுது, பரந்த நிலப்பரப்பை வாங்கி குறைந்தபட்ச தூரத்திற்காவது நிஜ ரயில் விட்டுப் பயன்படுத்தவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மைசூரில் மீட்டர்வழிப்பாதையும், அகலவழிப்பாதையும் ஒரே தடத்தில் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-7PO-1XAckcI/TxA1-n3kjfI/AAAAAAAAF7c/hsKyt4AtsqY/s1600/broadgauge_meter_gauge.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-7PO-1XAckcI/TxA1-n3kjfI/AAAAAAAAF7c/hsKyt4AtsqY/s400/broadgauge_meter_gauge.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697112878593904114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக்குடியரசில் ஹிம்சாகர் விரைவுவண்டி அகலரயில் பாதைகளில் தொலைத்தூரப்பாதைவண்டியாகும். கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவி வரை 3751 கிலோமீட்டர்கள் பயணப்படுகின்றது. அதிகநேரம் பயணப்படும் வண்டியும் இதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;மஹராஷ்டிராவில் ஸ்ரீராம்பூர் பேலாப்பூர் என்ற இரு ரயில்நிலையங்கள் இருக்கின்றன. இவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் தண்டவளாங்களுக்கு எதிரெதிரே அமைந்திருக்கின்றன. ஒரு வழியில் ஸ்ரீராம்பூர் எனவும் , எதிர்வழியில் பேலாப்பூர் எனவும் அழைக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் இந்தியப்போர்களில் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கிருந்தாலும், ஒருமுறை இந்திய ரயில் எஞ்சினை பாகிஸ்தானியர் கைப்பற்றி, அதற்கு இந்திராகாந்தி எனப்பெயரிட்டு &lt;br /&gt;பாகிஸ்தானிலேயே வைத்துகொண்டனராம். &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்திலேயே சிறியரயில் பாதை வலையத்தைக் கொண்டிருக்கும் நாடு வாடிகன். &lt;br /&gt;&lt;br /&gt;கௌகாத்தி - திருவனந்தபுரம் விரைவு வண்டி இதுவரை ஒரு முறை கூட சரியான நேரத்திற்கு ஓடியது இல்லையாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வீடன் மால்மோ நகரத்தில் இருந்து பெர்லின் வரை செல்லும் விரைவுரயில், டென்மார்க் - ஜெர்மனி எல்லையில் ஒரு கப்பலில் ஏற்றப்பட்ட மறுமுனையில் இறக்கிவிடப்படும். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ரயில் கப்பலில் இருந்தபடி பயணிக்கும்.  (எதிர்காலத்தில் மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இந்தவகையில் விரைவுவண்டிகள் ஓடவேண்டும்)&lt;br /&gt;இந்தியரயில்வேயின் ஆரம்பக் காலங்களில் தில்லி - கல்கத்தா ரயில் பெட்டிகள் அலகாபாத்தில் படகுகள் மூலம் அக்கறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;பரப்பளவில் ஓரளவிற்கு பெரியபகுதியாக இருக்கும் ஐஸ்லாந்தில் ரயில் போக்குவரத்து கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-HR7fgzRDppg/TxA1TKPGA_I/AAAAAAAAF7M/rYhgQX0AjYA/s1600/Train_wreck_at_Montparnasse_1895.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 333px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-HR7fgzRDppg/TxA1TKPGA_I/AAAAAAAAF7M/rYhgQX0AjYA/s400/Train_wreck_at_Montparnasse_1895.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697112131905127410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட புகைப்படம், படிதாண்டிய கிரான்வீல் - பாரிஸ் விரைவு வண்டி சுவரை உடைத்துக்கொண்டு மறுப்பக்கம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆண்டு 1895. &lt;br /&gt;&lt;br /&gt;பின்லாந்திற்கும் ஸ்வீடனுக்கும் ரயில்பாதைகளின் அகலங்களில் வேறுபாடுகள் இருப்பதால், பின்லாந்தின் துரூக்கு துறைமுகத்தில் Bogie exchange என்ற முறையில் சரக்கு ரயில் சக்கரங்கள் மாற்றப்படும். பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் அவர்கள் வேறு ரயிலுக்கு மாறியாகவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியதொடர்வண்டிகளுக்கான ரசிகர் மன்றமே கீழ்க்கண்ட தளத்தில் இயங்குகிறது. ரயில் ஆர்வலர்கள் சேமித்துவைக்க வேண்டியத் தளம் இது &lt;br /&gt;&lt;br /&gt;http://www.irfca.org/index.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் இணையத்தால் இணைகிறதோ இல்லையோ... இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட வேண்டும். இரும்பிற்கும் இதயம் உண்டு என்பதை வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைக்கும் ரயில் சினேகங்கள் மூலம் உணர்ந்து கொண்டே இருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-3267697413033281275?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/3267697413033281275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/3267697413033281275'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post_13.html' title='ரயில் பயணங்களில் - துணுக்குகளின் தொகுப்பு'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-tfaDIFY4llA/TxA2wSkjumI/AAAAAAAAF70/FfO_7iQQxmE/s72-c/minimumgauge.JPG' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-5479932239992759740</id><published>2012-01-11T03:46:00.000-08:00</published><updated>2012-01-11T05:18:20.947-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வெரொனிகா - சிறுகதை</title><content type='html'>சிலப் பெண்பால் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் ஒர் ஈர்ப்பு ஏற்பட்டு, மனது தானாகவே அந்தப் பெயருக்கு ஓர் உருவம் கொடுக்கத் தொடங்கிவிடும். நான் பெண்களைக் காதலித்ததை&lt;br /&gt;விட பெயர்களைக் காதலித்தது அதிகம். வெரொனிகா, இந்தப் பெயரை சமீபத்தில் வாசித்தது பவுலோ கோயல்ஹோவின் ஒரு புதினத்தின் கதாநாயகியாக ... தற்கொலையின் &lt;br /&gt;வாயிலில் நிற்பவள், தனது நாட்டைப்பற்றித் தவறாக எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை வாசிக்க நேரிடுகையில், குறைந்த பட்சம் அதற்கு பதில் எழுதவாவது உயிரோடு இருக்க &lt;br /&gt;வேண்டும் என மீண்டு வர நினைப்பவள். சென்ற வாரம் தான் வாசித்து முடித்ததில் இருந்து தொடர்ந்து வெரொனிகா பெயருக்கு சில உருவங்களைக் கொடுக்கத் தொடங்கி இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு பழக்கம், கட்டுரையிலோ, கதையிலோ ஏதேனும் ஈர்ப்பைத் தரக்கூடிய பெண் பெயர்கள் தெரிந்தால், அந்த பெயர்களை இணையத்தில் தேடி, அந்தப் பெயரில் இருக்கும் &lt;br /&gt;சிலரிடமாவது நட்புப் பாராட்ட நினைப்பேன். கடைசி 10 வருடங்களில், சிலப்பெயர்கள் நட்பைத் தாண்டியும் சில உறவுகளையும் உணர்வுகளையும், சில சமயங்களில் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும் இருந்ததுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;வெற்றித்திருமகள் என்ற பொருள் கொண்ட வெரொனிகா பெயரில் இருக்கும் மெய்நிகர் உருவங்களை ஃபேஸ்புக்கில் தேடி அனைவருக்கும் நட்பு  அழைப்பு விடுத்தேன். வழமைப்போல 80 சதவீதத்தினர் நிராகரித்து, 20 சதவீதத்தினர் ஏற்றுக்கொண்டனர். என்னை ஏற்றுக்கொண்ட, 15 வெரொனிக்காக்களில், எனது ஊரில் இருந்து நேரிடையாக விமானம் செல்லும் நகரத்தில் வசிக்கும் பெண்களை வடிகட்டினேன். உக்ரைன், இங்கிலாந்து நீங்கலாக எஞ்சிய ஸ்லோவாக்கியாவில் வசிப்பதாக காட்டிய வெரொனிகாவிற்கு தனிச்செய்தி அனுப்பினேன்.  அன்னா கோர்னிகாவின் சாயலில் இருந்தாள், கைகளற்ற , கழுத்து இறக்கம் அதிகத்துடன் கூடிய ஒரு ஆடையை அணிந்து இருந்தாள். கணினியின் முன் அமர்ந்தபடி எடுத்தப் புகைப்படம் மாதிரி தெரிந்தது. தோள்பட்டையின் மச்சமும் கழுத்தில் அணிந்து இருந்த சிலுவை சங்கிலியும் கவனத்தைக்கவர்ந்தன. அடுத்த நிமிடத்தில் பதில் ஆங்கிலம் தனக்கு சரளமாக வரும் என ஆங்கிலத்தில் பதில் வந்தது. முதல் பிரச்சினை மொழிப்பிரச்சினை தீர்ந்தது, என நினைத்துக்கொண்டே, மேட்டின இனத்திற்கே உரிய பொய் வார்த்தைகளுடன் பேச்சுத் தொடர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு ஸ்லோவாக்கியாவைப் பற்றி என்னத் தெரியும்”  &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கிய இந்த இரண்டு நாடுகளும்  அடிக்கடி குழப்பினாலும் “கத்தியின் ரத்தமின்றி, பெரிய சங்கடங்கள் இன்றி ஒருங்கிணைந்த செக்கஸ்லோவாக்கியா விடம் இருந்து பிரிந்த நாடு, விலைவாசிகள் சாமானிய மனிதனுக்கு ஏற்ற வகையில் இருக்கும் நகரமான பிராட்டிஸ்லாவா தான் தலைநகரம், பொதுவுடமை பெரும்பலனைத் தந்த &lt;br /&gt;ஐரோப்பியப்பகுதி” மனதுக்குள் விக்கிபீடியாவிற்கு நன்றி சொல்லியபடி பதிலளித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அர்த்தராத்திரியில் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டிய சங்கடத்தை நொந்தபடி, அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுது, &lt;br /&gt;&lt;br /&gt;”உனக்குப் பெண் தோழி இருக்கின்றாளா.... ” நான் எதிர்பார்த்து இருந்த கேள்வியைக் கேட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;“அழகும் அறிவும் கூடிய பெண்ணைத் தேடிக்கொண்டே இருக்கின்றேன்” &lt;br /&gt;&lt;br /&gt;“அழகுடன் அறிவும் கூடிய பெண்கள் பிராட்டிஸ்லாவா வில் இருக்கின்றனர், சிலப்பெண்களின் பெயர்கள் வெரொனிகா என்று கூட இருக்கும்” என்று சொல்லி கண்ணடிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த நாட்களில் பேச்சின் சுவாரசியமும் கிளுகிளுப்பும் கூடிக்கொண்டே போனது. எவ்வளவுக் கேட்டும் ஸ்கைப்பிலோ , குரல் வழி அரட்டையிலோ வரமாட்டேன் என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;“நாம் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், பேசுவதும் நேரில் மட்டுமே இருக்கவேண்டும்” என்று அவள் சொல்லியபொழுது அழகு கொஞ்சம் குறைவாக இருக்ககூடுமோ எனத் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;மூடியிருக்கும் கையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அந்த சந்தேகத்தை அப்பால் தள்ளியது.  பிப்ரவரியின் மத்தியில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குக் கிளம்பும் இரண்டு நாட்களுக்கு முன்னர், போகிறதுதான் போகிறோம், வேறு ஏதாவது பெண் நட்பையும் பிராட்டிஸ்லாவாவில் ஏற்படுத்திக்கொள்வோம் என, கவர்ச்சியான ஒரு &lt;br /&gt;ஐரோப்பியப் பெயரைத் தேடினேன். முன்னே நூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் கனரகவாகனம், எந்த வித முன்னறிவிப்பின்றி வண்டியைத் திடுமென &lt;br /&gt;நிறுத்தினால் பின்னால் வருபவருக்கு என்ன அதிர்ச்சி ஏற்படுமோ அந்த அந்த் அதிர்ச்சி முகத்தில் அறைந்தது. வெரோனிகாவின் அதே புகைப்படம், புதிதாகத் தேடிய பெண்ணின் &lt;br /&gt;முகப்பில் இருந்தது. வெரொனிகாவின் முகப்பில் இருக்கும் நண்பர்களை நோட்டம் விட்டதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண் நட்புகளின் மத்தியில் வெரொனிகாவின் படத்துடன் &lt;br /&gt;வெவ்வெறுப் பெயர்களில் சில ஃபேஸ்புக் கணக்குகள் இருந்தன. கொஞ்சம் பயம் தொற்றிக்கொண்டது, பயணத்திட்டத்தை கைவிட்டு விடலாமா எனக்கூட யோசித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் எத்தனையோ அபயகரமான பாதைகளைக் கடந்து இருக்கிறேன், எது நடக்குமோ அது நடக்கும், போய் பார்த்துவிடலாம். மனதில் ஒரு குறுகுறுப்புடன், எப்போதும் &lt;br /&gt;இல்லாத ஒரு திகிலுடனும் வெரொனிகா கொடுத்திருந்த முகவரிக்கு சென்றேன். அந்தக் குடியிருப்புப்பகுதியின் முதல் நுழைவாயில் வரவேற்றது. நுழைவாயிலில் வெரொனிகாவின் &lt;br /&gt;வீட்டு எண்ணின் அழைப்பானை அழுத்தினேன். ஏனைய வீட்டு எண்களுக்கு நேர் எதிரே குடியிருப்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் வெரொனிகாவின் பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை. அழைப்பு மணி தொடர்ந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பவர் நிஜமாகவே வெரொனிகாவாக இருக்கலாம் அல்லது மனநோயாளி ஆணாகவோ &lt;br /&gt;பெண்ணாகவோ இருக்கலாம், விபாச்சார போதை மருந்துக் கும்பலின் பிரதி நிதியாக இருக்காலாம். யாராக இருந்தாலும் விளக்கைத்தேடும் விட்டில் பூச்சியைபோல அசாதாரண &lt;br /&gt;தைரியத்துடன் இருந்தேன்.  அழைப்பு எடுக்கப்பட்டது, ஆனால் யாரும் பேசவில்லை, நிசப்தத்தைக் கேட்க முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“என் பெயர் கேத்தரினா நீல்ஸ்ஸான், ஸ்டாக்ஹோல்ம் இருந்து வந்திருக்கும் பெண்” என்று நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள கதவுத் திறக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;                  -------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-5479932239992759740?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/5479932239992759740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/5479932239992759740'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2012/01/blog-post.html' title='வெரொனிகா - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-7522211722514386191</id><published>2011-11-22T01:25:00.000-08:00</published><updated>2011-11-22T01:33:27.164-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இத்தாலி'/><title type='text'>கறி வாங்க உதவிய கடவுள் - சிறுகதை</title><content type='html'>மாணவர் விடுதியின் வரவேற்பறையில் இருந்த பொறுப்பாளர் மக்டலீனாவிடம் என் அறையின் சாவியைக் கொடுத்த பின்னர் , தலைக்கு மேலே படத்தில் இருந்தபடி  சிரித்து &lt;br /&gt;கொண்டிருந்த நல்ல மேய்ப்பாளன் இயேசுவைப் பார்த்து நானும் புன்னகைத்துவிட்டு அருகில் இருந்த மளிகைக்கடைக்கு நடக்கலானேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-4Hkpu5xWmhw/Tstr5FugTFI/AAAAAAAAF3Q/_Q48tEViSYM/s1600/Jesus%2B-%2BGood%2BShepherd.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-4Hkpu5xWmhw/Tstr5FugTFI/AAAAAAAAF3Q/_Q48tEViSYM/s400/Jesus%2B-%2BGood%2BShepherd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5677750383764589650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலி வந்து இரண்டு வாரங்கள் ஆகின்றன, இன்னும் குறைந்தது நான்கு வருடங்களாவது வாழ்ந்தாக வேண்டும், ஸ்வீடனில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றியதைப்போல இங்கு &lt;br /&gt;நிச்சயம் முடியாது, மண்ணிற்கு கொடுக்கும் மரியாதை அந்த மண்ணின் மொழியை அறிந்து கொள்வது,  இணையத்தில் மனனம் செய்து வைத்து இருந்த ஒன்று இரண்டு மூன்று எண் &lt;br /&gt;வரிசையை ஜெபித்தபடியே அருகில் இருந்த கடைக்கு வந்தேன். அடடா, எழுதி வைத்திருந்த , தேவையான பொருட்களின் இத்தாலிய இணை வார்த்தைகள் அடங்கிய சீட்டை &lt;br /&gt;வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;“கார்த்தி கண்ணா, நம்ம வீட்டுல மட்டன் குழம்பு, நீ இல்லை என்பதுதான் குறை” என அம்மா வருந்தியபொழுது, “மதியம் நானும் ஆட்டுக்கறி குழம்பு வச்சி சாப்பிடுறேன், கவலைப்படாம நீ சாப்பிடு ” என ஆறுதல் படுத்தியது நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டுக்கறியை கடைசியாகத் தேடுவோம், முதலில் அரிசி, தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிப்பொடி என ஒவ்வொன்றாக அமைப்பை வைத்தோ, ஆங்கிலத்திற்கு நெருங்கியப் பெயர்களை வைத்தோ எடுத்துப்போட்டுக்கொண்டே , மாமிசம் இருக்கும் பகுதிக்கு வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடித்தாள்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை , அதன் சிறிய கால்களினால் எளிதாக அடையாளம் காண முடிந்தது, எது மாட்டுக்கறி, எது பன்றிக்கறி எது &lt;br /&gt;ஆட்டுக்கறி என பிரித்தறிவதில் குழப்பம். ஏனைய கறிகளை சாப்பிடக்கூடாது , சாப்பிட்டால் பாவம் தீட்டு என்பதெல்லாம் கிடையாது. ஆட்டுக்கறி குழம்பு செய்யவேண்டும் என முடிவு &lt;br /&gt;செய்த பின்னர் அதை மட்டுமே வாங்கிப்போக வேண்டும் தானே... &lt;br /&gt;&lt;br /&gt;“உங்க நாட்டில் மாட்டுக்கறி சாப்பிட மாட்டீர்கள் தானே, மாடு உங்களுக்குத் தெய்வம் தானே” என முன்பு ஒரு முறை ஆண்டர்சன் நக்கலாக ஸ்டாக்ஹோல்ம் கல்லூரிக் கொண்டாட்டத்தின்பொழுது கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;மாமிசத்தில் கூட அரசியலைக் கலந்து வைத்திருக்கும் நமது சமுதாயக் கலாச்சாரக் கூறுகளை விளக்க விரும்பாமல், எல்லோருக்கும் சரி என ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் ஒன்றைக் &lt;br /&gt;கொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;“விவசாயம், பொழுது போக்கு, வாகனப்போக்குவரத்து என அனைத்திலும் உங்களுக்கு உபயோகரமாக இருக்கும் குதிரையின் மாமிசத்தை ஐரோப்பாவில் சாப்பிடுவீர்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ அருவெறுப்பாக பேசுகிறாய்” இது லிண்டா , ஆண்டர்சனின் காதலி. &lt;br /&gt;&lt;br /&gt;”அதே அதே ... உங்களுக்கு குதிரைகள் அனைத்திலும் பயன்பட்டதைபோல, இந்தியத் துணைக்கண்டத்தில் மாடுகள் அன்றாட வாழ்வில் இன்றி அமையாததாக மாறிப்போனது, &lt;br /&gt;பொதுவாக இந்திய துணைக்கண்ட மக்கள் நல்லதை நேரிடையாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள், தண்டனை உண்டு என்றால் கேட்பார்கள், கடவுள் கண்ணைக்குத்துவார், இது &lt;br /&gt;சாமியின் வடிவம் என்று சொன்னால் தான் மாடுகளைப் பாதுகாக்க முடிந்தது, நவீன உலகத்தில் எது நமக்கு வசதியோ அதைப்பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற மேற்கத்திய சிந்தனை ஓட்டங்களுக்கு இந்திய மக்களும் பழகிவிட்டார்கள், ஆட்டுக்கறி கோழிக்கறி கிடைக்காத பட்சத்தில் எனக்கு மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை” &lt;br /&gt;&lt;br /&gt;”அட்டகாசமானப் பதில் “ என்றபடி தலையை வருடிக்கொடுத்தாள் ஹன்னா, ஒரு விதத்தில் ஆண்டர்சனை வெறுப்பேற்றக்கூட இருக்கலாம், லிண்டாவின் வரவிற்குப்பின்னர் &lt;br /&gt;ஹன்னாவின் பார்வை என் மேல் விழுந்து விட்டது. ம்ம்ம் அது எல்லாம் பழையக்கதை. &lt;br /&gt;&lt;br /&gt;மாமிசக்கூட்டத்தில் மறைந்து இருக்கும் எனக்கான இன்றைய ஆடு எங்கே எனத் தேடுவதில் சில நிமிடங்கள் ஓடிப்போனது. கோழி, பன்றி, மாடு மூன்றும் சேர்ந்த படங்களையே எல்லா &lt;br /&gt;கண்ணாடிக்கதவுகளிலும் ஒட்டி வைத்திருந்தார்கள். மொழியின் தேவை சாப்பாட்டிற்கு வரும் என ஒருபொழுதும் நினைத்தது கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;“சாவ்” என ஒருக் குரல் கேட்க , அது மக்டலீனா. &lt;br /&gt;&lt;br /&gt;அட, கடவுளே அனுப்பி வைத்திருப்பார் போல, மக்டலீனா ஆங்கிலம் நன்றாகப் பேசுவாள். &lt;br /&gt;&lt;br /&gt;  “மக்டா, உனக்கு ஆட்டுக்கறி எது எனத் தெரியுமா” நான் ஆட்டுக்கறி என்பதை மட்டன் எனக்கேட்டதால் அவளுக்கு விளங்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இது மாட்டுக்கறி , இது பன்றிக்கறி, இது கோழிக்கறி என ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு வந்தாள்.  “நீ எந்தக் கறியைக் கேட்கிறாய், மீன் வேண்டும் என்றால் வலது புறம் இருக்கின்றது” &lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை, இல்லை, எனக்கு மட்டன் வேண்டும், கோட் அல்லது லாம்ப்” ஒரு வேளை என்னுடைய ஆங்கில உச்சரிப்பு அவளுக்கு விளங்காமல் கூட இருந்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;“மன்னிக்கவும் நீ சொல்லுவது எனக்கு விளங்கவில்லை” &lt;br /&gt;&lt;br /&gt;பன்றியைப்போல உருவத்தில் சிறியதாக இருக்கும், தலையில் கொம்பு இருக்கும், நம்ம ஊர் ஆட்டின் நினைவாக கருப்பாக இருக்கும் என ஆங்கிலத்திலும் சைகை மொழியிலும் விளக்க முயன்றும் முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எந்திரன் ரஜினியைப்போல ம்மெமேஹே  எனக்கத்திக் காட்டிவிடலாம் என்ற பொழுது இயேசு நினைவுக்கு வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;“உனது கடவுள் இயேசு கூட கையில் வைத்திருப்பாரே ... ஆங்கிலத்தில் குட் ஷெப்பர்ட் என்றெல்லாம் சொல்லுவார்களே, அந்தக்கறி வேண்டும்” &lt;br /&gt;&lt;br /&gt;“ஓ அன்யெல்லோ, அல்லது ரோம் நகரத்து வழக்கு மொழியில் அப்பியாச்சி, அது இந்தக்கடையில் கிடைக்காது , அடுத்தக் கடையில் புத்தம் புது கறிக்கிடைக்கும் அங்கு போகலாம் வா” என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தக்கடையில் ஆட்டுக்கறி வாங்கிவிட்டு மக்டலீனாவுடன் வெளியே வரும்பொழுது,&lt;br /&gt;&lt;br /&gt;“இன்றைக்கு உன் அறையில் ஆட்டுக்கறி குழம்ப்பா, இந்தியர்களும் இத்தாலியர்களைப்போல காரச்சாரமாக சமைப்பார்கள் எனக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்” என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு நேரம் இருந்தால் வாயேன், உனக்கும் சேர்த்து தமிழ் நாட்டுப்பாணியில் சமைத்துத் தருகின்றேன்” &lt;br /&gt;&lt;br /&gt;“இன்றைக்கு வேண்டாம், அடுத்த வாரம் என் வீட்டிற்கு வா, கொஞ்சம் இத்தாலியம் , கொஞ்சம் ஆங்கிலம் நிறைய ஆட்டுக்கறி சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே கோப்பை வைனுடன் &lt;br /&gt;பேசுவோம்” என்றபடி மக்டலீனா என்னிடம் இருந்து விடைபெற்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;இனி மொழிக்கும் பிரச்சினையில்லை இனி,  செத்தெ, செய், ஜின்குவே, க்வாத்துரோ , துவே, ஊனோ என அடுத்த ஏழு நாட்களை எண்ணியபடி ஆட்டுக்கறியில் அடுத்த அத்தியாயத்தை எழுத தயாராக வேண்டியதுதான். விடுதியின் வரவேற்பறைப்படத்திலிருந்த இயேசுவின் புன்னகை சில மில்லிமீட்டர் அகன்றிருந்ததுபோலத் தோன்றியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-7522211722514386191?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7522211722514386191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7522211722514386191'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/11/blog-post_22.html' title='கறி வாங்க உதவிய கடவுள் - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4Hkpu5xWmhw/Tstr5FugTFI/AAAAAAAAF3Q/_Q48tEViSYM/s72-c/Jesus%2B-%2BGood%2BShepherd.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-7371960132342957204</id><published>2011-11-20T16:15:00.000-08:00</published><updated>2011-11-20T07:11:46.117-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினாடி வினா'/><title type='text'>விடைகள்  -  கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு (Cricket Quiz with Answers)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-h7SNU8MV26M/TsZGVQ18bhI/AAAAAAAAF2k/DfGvXJEqafw/s1600/whoami.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 278px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-h7SNU8MV26M/TsZGVQ18bhI/AAAAAAAAF2k/DfGvXJEqafw/s400/whoami.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676301711459511826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;1. இந்தப்புகைப்படத்தில் இருப்பவர் யார், நவீன கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஒரு விசயத்தை முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் ஆட்டங்களில் செய்தவர். இவர் செய்த விசயம்தான் என்ன?&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0); "&gt;கிரஹாம் யலுப் - &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;அடிவயிற்&lt;/span&gt;&lt;/i&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span"&gt;று&lt;/span&gt;&lt;/i&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span"&gt;ப் பாதுகாப்பு உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்குப்பின்னரே , தலைக்கவசம் கிரிக்கெட் ஆட்டத்தில் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்தது. மனிதனின் மூளையும் முக்கியமானது என உணர ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டுள்ளது என நகைச்சுவையாக கூறுவார்கள். கவாஸ்கர் , தலையைச் சுற்றி அடிபட்டால் கட்டும் கட்டுபோல போல ஒரு வடிவுடன் ஒரு கவசத்தை அணிந்து ஆடியிருக்கிறார். &lt;/span&gt;&lt;/i&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VftBwXtOKcY/TskNvUDMdWI/AAAAAAAAF20/XhGmoFs2Cig/s1600/Gavaskar_helmet_Skull_cap.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-VftBwXtOKcY/TskNvUDMdWI/AAAAAAAAF20/XhGmoFs2Cig/s400/Gavaskar_helmet_Skull_cap.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5677083911764342114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;i&gt;டென்னிஸ் அமிஸ், பெக்கர் உலக(கலகத்) &lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; font-size: medium; "&gt;தொடர் &lt;/span&gt;&lt;i&gt; போட்டிகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டும்பொழுது பயன்படுத்தப்படும் தலைக்கவசத்தை சில மாறுபாடுகள் செய்து ஆடினார். ஆனால் அதிகாரப்பூர்வ டெஸ்ட் ஆட்டங்களில் , முதன் முறையாக தலைகவசத்தை அணிந்து ஆடியவர் கேள்வியின் படத்தில் இருக்கும்  கிரஹாம் யலுப் என்ற ஆஸ்திரேலிய வீரர். மேற்கிந்திய தீவுகளுடன் உடன் ஆனா டெஸ்ட் தொடரில், பார்படாஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தலைகவசத்துடன் இறங்கி ஆடினார். பயந்தாங்கோலி என மேற்கிந்திய ரசிகர்களால் இவர் எக்களிக்கப்பட்டர்.&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;2. கிரிக்கெட் விதி எண் இரண்டின்படி மாற்று ஆட்டக்காரராக வருபவர் , விக்கெட் கீப்பிங் பணியை செய்ய இயலாது. டெஸ்ட் ஆட்டங்களில் ஒரு முறை இந்த விதி இரண்டு அணித்தலைவர்களின் ஒப்புதலோடு மீறப்பட்டுள்ளது. அந்த டெஸ்ட் ஆட்டம் எது? அந்த டெஸ்ட் ஆட்டத்தில் முதல் தர ஆட்டங்களில் அதிக அளவில் விக்கெட் கீப்பிங் முறையில் ஆட்டக்காரர்களை வீழ்த்தியவர் என்ற பெருமை உடைய ஒருவர் பன்னாட்டு ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்களுக்குப்பிறகு மாற்று விக்கெட் கீப்பராக சில நேரம் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;i&gt;பாப் டெய்லர் தான் அந்த விக்கெட் கீப்பர் . 86 ஆம் ஆண்டு லார்ட்சில் நடந்த நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் ஒன்றில், இங்கிலாந்தின் விக்கெட்  கீப்பர் &lt;/i&gt;&lt;/span&gt;&lt;i&gt;புருஸ் பிரெஞ்ச், &lt;/i&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;i&gt;பேட்டிங்  செய்யும்பொழுது  காயமடைந்து விட , அணியில் இருந்த பில் அத்தே சில ஓவர்களுக்கு விக்கெட் கீப்பராக இருந்தார், சிறப்பாக கீப்பிங் செய்யத் தடுமாறிய பில் அத்தே விற்குப்பதிலக  சிறப்பு விருந்தினர்களுடன் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பாப் டெய்லர் இங்கிலாந்திற்கான விக்கெட் கீப்பராக இருக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.கிட்டத்தட்ட 70 ஓவர்கள் கீப்பிங் செய்த டெய்லரின் பணியை ஹாம்ப்ஷையர் விக்கெட் கீப்பர்  &lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; "&gt;பாபி &lt;i&gt;பார்க்ஸ் &lt;/i&gt;&lt;/span&gt;&lt;i&gt;தொடர்ந்தார்.&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;i&gt;ஒரு ஆட்டத்தில் 4 விக்கெட் கீப்பர்கள் பயன்படுத்தப்பட்டது இந்த ஆட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம். இத்தனை மாற்றங்களுக்கும் நியுசிலாந்து அணியின் தலைவர் ஜெரமி கோனே  பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார்.  துணைத் தகவல் - ஜெரமி கோனே ஒரு முறை , அவரின் பந்து வீச்சை கபில்தேவ் துவம்சம் செய்தபொழுது வெள்ளைக்கொடி காட்டி அரங்கையே சிரிப்பில் ஆழ்த்தியவர். &lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/Z-MKXhhRXiU" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எனப்படுவது தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது. பலர் ஒரே ஓவரில் எடுப்பார்கள். சிலர் இரண்டு ஓவர்களில் எடுத்திருப்பார்கள். அதாவது முதல் ஓவரில் கடைசி பந்துகளில் ஒரு விக்கெட்டோ அல்லது இரண்டு விக்கெட்டுகளோ, அதே பந்துவீச்சாளர் மறுமுறை பந்துவீசும்பொழுது மீதமுள்ள விக்கெட்டுகளை எடுப்பது. டெஸ்ட் ஆட்டங்களில் ஒரு பந்து வீச்சாளர் மூன்று ஓவர்களில் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். எப்படி எடுத்தார் மேலும் அந்த பந்துவீச்சாளர் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஆஸ்திரேலியாவின் மீசைக்கார வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியுஜஸ் தான் மூன்று ஓவர்களில் ஹாட்ரிக் எடுத்தவர். பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் , அம்புரோஸ் ஹாட்ரிக்கின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார், அந்த பந்துடன் ஓவரும்  முடிந்தது. ஹியுஜஸ் தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் பாட்ரிக் பட்டர்சனின் விக்கெட்டை எடுத்தார். அத்துடன் மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய பேட்டிங்கிற்குப்பின்னர் , மீண்டும் களம் இறங்கி ஆடிய மேற்கிந்தியத்துவுகளின் இரண்டாவது இன்னிங்க்சில் பந்து வீச வந்த ஹியுஜஸ் தனது முதலாவது பந்திலேயே கர்டன் கிரினிட்ஜை ஆட்டமிழக்கச் செய்து சிறப்பம்சம் பொருந்திய இந்த ஹாட்ரிக் சாதனையுடன் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/ZJPmwp4BN7w" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. ஆமை முயலாகுமா எனத் தெரியாது. ஆனால் தனது ஆமை வேக ஆட்டத்தை தேவைப்பட்ட சமயங்களில் முயலென்ன, சிறுத்தை வேகத்தில் கூட மாற்றிக்கொள்ளக்கூடிய ஆட்டத்திறன் பெற்றவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் மட்டையாளர் சந்திரபால். இவர் பன்னாட்டு ஒருநாள் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹாரிம்சன் வீசிய ஒரு ஓவரை துவம்சம் செய்தார். 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என தூள் கிளப்பி ஆடிய கீழ்க்காணும் காணொளியின் ஆட்டத்தின் முடிவு என்ன? அந்த முடிவில் இருந்த சுவராசியமும் என்னவென்று சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/zwW3vLDS62w" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடை :&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வருண பகவனும் இணைந்து விளையாடிய இந்த ஆட்டத்தில் வெற்றி இலக்கு ௨௭௧ என களமிறங்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஏழாவது விக்கெட்டாக ராம்தின் வீழ்ந்தார். டக்வோர்த் லூயிஸ் முறையின் படி இரண்டு ஓட்டங்கள் பின் தங்கி இருப்பதைக் கவனிக்காத பயிற்சியாளர் ஜான் டைசன் , மட்டையாளர்களை மழை காரணமாகத் திரும்ப உத்தரவிட்டார். நமுட்டு சிரிப்புடன் இங்கிலாந்து வெற்றியை எடுத்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;Score Card - http://www.espncricinfo.com/wiveng2009/engine/current/match/352665.html&lt;br /&gt;&lt;br /&gt;5. கொஞ்சம் எளிமையான கேள்விதான், நியுசிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டினுக்கும் , முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? பந்து வீச்சில் இருவரும் 200 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள், அதைத்தவிர வேறு ஒரு சுவாரசியமான ஒற்றுமை உள்ளது, அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;விடை :&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;i&gt;இருவரும் டெஸ்ட் ரன்களை விட அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்.&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;6. சடகோபன் ரமேஷ் முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர், ஓரளவிற்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் ஒரு நாள் ஆட்டங்களிலும் சோபித்தார். கால்களை நகர்த்தாமலேயே ஆடி 1000 ரன்கள் எடுப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல. கிரிக்கெட் ரசிகர்கள் மறக்காமல் இருக்க இவர் ஒரு சுவாரசியமான ஒருநாள் ஆட்ட சாதனையை தன் வசம் வைத்துள்ளார். உலக அளவில் 16 பேர் செய்து இருந்தாலும் இந்திய அளவில் இவர் ஒருவரே வைத்துள்ளார். 16 பேர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் இன்சாமம் உல் ஹக். அது எத்தகைய சாதனை என்பதுதான் இந்த வினாடிவினாப் பதிவின் கடைசிக் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;விடை : &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த ஒரே இந்தியர்.&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;------------&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த முகிலனிற்குப் பாராட்டுக்கள்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-7371960132342957204?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vinaiooki.blogspot.com/feeds/7371960132342957204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17429638&amp;postID=7371960132342957204' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7371960132342957204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7371960132342957204'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/11/cricket-quiz.html' title='விடைகள்  -  கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு (Cricket Quiz with Answers)'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-h7SNU8MV26M/TsZGVQ18bhI/AAAAAAAAF2k/DfGvXJEqafw/s72-c/whoami.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-3605348511699388767</id><published>2011-11-17T03:40:00.000-08:00</published><updated>2011-11-17T05:09:20.086-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்வீடன்'/><title type='text'>உறைநிலை மனங்கள் - சிறுகதை</title><content type='html'>நான் அனுபவித்த வரையில் குளிர் மூன்று வகையானது, தமிழ்நாட்டில் கிடைக்கும் மார்கழி மாதக் குளிர், சுகமான குளிர் அது, சின்ன ஸ்வெட்டர் அணிந்து ஏழு மணி வாக்கில், அருகில் இருக்கும் டீக்கடைக்கு சென்று , தினத்தந்தியை மேய்ந்தபடி,  பக்கத்து கடைக்கு காய்கறி வாங்க வரும் அம்முவை சைட் அடிப்பதில்  ஏலக்காய் டீ துணையுடன் மென்மையான குளிர் மேலும் சுவாரசியப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ரிட்ஜைத் திறந்தவுடன் முகத்தில் அடிக்கும் குளிர், சில வினாடிகளுக்கு நன்றாக இருக்கும், இது இரண்டாவது வகையிலான குளிர், ஸ்வீடனைப் பொருத்தமட்டில் இது மிதமான குளிர். இந்த மிதமான குளிருக்கே ஸ்வீடன் வந்த முதல் வாரத்தில் ஒரு பனியன், பின்னர் கழுத்து வைக்காத டீஷர்ட், அதன் மேல் ஒரு சட்டை,அதற்கு மேல் ஸ்வெட்டர், கடைசி அடுக்காக ஒரு ஓவர்கோட்  என தனுஷ் மாதிரி இருந்தவன், பூசணிகாயிற்கு சின்னக் கத்தரிக்காயைத்தலையாக வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி மாறிப்போனேன். அம்முவிற்கு அனுப்பவேண்டும் என, கார்ல்ஸ்க்ரோனா ரயில் நிலையத்திற்கு வெளியில் வெறும் சட்டையுடன் ஸ்டைல் போட்டோ எடுக்க நான் பட்டபாடு தனிக்கதை. கடைசிவகை குளிர் ஃப்ரீசரில் அடிக்கும் குளிர், இது ஆரம்பித்து சில வாரங்கள் ஆகின்றது. உடன் பிறப்பாக பனி மழையும் ஆரம்பித்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-U9FhJozvCe0/TsUHD66-n3I/AAAAAAAAF10/onpAgel79ME/s1600/kkn3"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-U9FhJozvCe0/TsUHD66-n3I/AAAAAAAAF10/onpAgel79ME/s400/kkn3" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675950669308010354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலிரண்டு நாட்களில் பனிப்பொழிவைப் பார்த்த மகிழ்ச்சி, அடுத்தடுத்த நாட்களில் கரைந்துப்போனது.  வீட்டிற்குள் இருந்தபடி, சன்னலின் வழியாக, கையில் தேநீர் கோப்பையுடன் இளையராஜாவின் பின்ணனி இசையில், புது வெள்ளை மழை எனப்பார்க்கும் உற்சாக உணர்வு, பனியில் அலுவலகம் போகும்பொழுது வருவதில்லை. அலுவலகம் பத்து நிமிட நடைதான், பாதையில் வழுக்கி விழுந்துவிடக்கூடாது எனக் கவனத்துடன் நடக்கும்பொழுது, மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகும். இதில் இன்னொரு பிரச்சினை, நான் வீட்டில் இருக்கும்பொழுது அம்மு மிஸ்ட் கால் கொடுக்க மாட்டாள், அலுவலகத்தில் இருக்கும்பொழுதும் கொடுக்க மாட்டாள். சரியாக உறைபனிக்குளிரில் நடக்கும்பொழுதுதான் கொடுப்பாள். ஒரு நிமிடத்திற்குள் திருப்பிக்கூப்பிட்டாகவேண்டும், இல்லை என்றால் மண்டகப்படிதான். கையுறையைக் கழட்டி, திரும்பக்கூப்பிட்டு கண்ணே மணியே எனக் காதல் மொழிப் பேசி முடிப்பதற்குள் எனது கை ஃப்ரீசரில் வைத்தக் கோழியைப்போல விறைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பனிக்காலத்தில் இவர்களுக்கு இருக்கும் ஒரே மகழ்ச்சி, கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள், ஊரே பனிப்படர்வில் பிரகாசிக்கும் மின்னொளி வெள்ளத்தில் மிதக்கும், &lt;br /&gt;நான் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. மொத்தம் இருபது வீடுகளில் நான் ஒருவன் மட்டுமே வெளிநாட்டுக்காரன் அதிலும் மாநிறத்திற்கு சற்றுக்குறைவானவன்,  மற்றவர்கள் தங்க நிறக் கூந்தலுடன் 14 தலைமுறைகளாக தங்களது ஏழாம் அறிவைப் பாதுகாத்து கொண்டு வருபவர்கள்.  கருப்பாக இருப்பவர்கள் என்றால் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்ற தோரணையுடன் இருப்பவர்களாக எனக்குப்பட்டது, தீவிர வலதுசாரி, வெளிநாட்டவர் எதிர்ப்பு கட்சி, கடைசியாக நடந்தத் தேர்தலில்,  இந்தப்பகுதியில் 95 சதவீத வாக்குகளைப் பெற்றது என எனது அலுவலக பாகிஸ்தானியத் தோழன் சொன்னான். எனக்கு எப்படி அந்த குடியிருப்புப் பகுதியில் வீடு கிடைத்தது என்ற வியப்பு அவனுக்கு எப்பொழுதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வேலைப்பார்க்கும் ஸ்வீடன் நிறுவனத்தைப் பொருத்தமட்டில் நான் அவர்களுக்குக் கிடைத்த அடிமைகளில் நான் மிகவும் திறமைசாலியானவன், அருகில் வைத்துக்கொண்டால் என்னை அதிக நேரம் சாறு பிழியலாம் என்பதால் எனது மனிதவள மேலாளார் இந்த வீட்டைப் பெற்றுத்தந்தார், உடல் உழைப்பு சார்ந்த அடிமைகளை விட, அறிவுசார் அடிமைகளுக்கு எங்கும் மதிப்புதான். நான் வீட்டு வாடகைத் தரவேண்டியதில்லை என்றாலும், ஏழால் பெருக்கி இந்திய பணத்திற்குப் பார்க்கும்பொழுது ஒரு இந்திய கடைநிலை அரசாங்க ஊழியனின் இரண்டு வருட சம்பளம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-WP79G_dW4fE/TsUHOm-sFoI/AAAAAAAAF2A/noEjtPApeEU/s1600/kkn2"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-WP79G_dW4fE/TsUHOm-sFoI/AAAAAAAAF2A/noEjtPApeEU/s400/kkn2" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675950852933424770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகு மனிதர்களின் மத்தியில் நான் பார்த்த ஒரேஅழுக்கு மனிதர், கார்ல்ஸ்க்ரோனா ரயில் நிலையத்தின் மூலையில் இருக்கும் ஒரு பெஞ்சில் தனது அழுக்கு மூட்டையுடன் அடிக்கடி &lt;br /&gt;தென்படும் ஒரு வயதானவர். வெளிநாட்டுக்காரர் அல்ல, ஸ்வீடிஷ் மண்ணின் மைந்தர்தான். நான் எப்பொழுது ரயில் நிலையம் சென்றாலும் அங்கு தென்படுவார், சில சமயங்களில் அருகில் இருக்கு அரபுக்கடை ஒன்றில் ஏதேனும் வாங்கிக்கொண்டு இருப்பார். வீடில்லாதவர்கள் ஸ்வீடனில் இல்லை என்ற எண்ணத்தை இது உடைத்து நொறுக்கியது. பகலில் சரி, இரவில் என்ன செய்வார், ஸ்வீடனின் அனைத்து ரயில் நிலையங்களும் நள்ளிரவைக் கடந்த பின்னர் பூட்டப்பட்டு விடும். முதன் முறையாக ஸ்டாக்ஹோல்ம் மைய ரயில்நிலையத்தில் அடித்துத் துரத்தாதக் குறையாக அனைவைரையும் வெளியேற்றினர். நல்லவேளை நமது மார்கழிக்குளிரைத் தரும் ஸ்காண்டிநேவிய கோடையாக இருந்ததால் தப்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயதானவர் இரவில் எங்குத் தங்குகிறார் என்பதைக் கண்டுபிடித்தாகவேண்டும், என வெறுமனே 10 மணியில் இருந்து கோபன்ஹேகன்  போகும் ரயில்களை வேடிக்கைப்பார்த்தபடி,  காத்திருந்தேன். வயதானவர் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டார், 7 ஆம் எண் பேருந்தைப்பிடித்தார், கடைசி நிறுத்தத்தில் இறங்கினார். அவரைப்பின் தொடர்ந்தேன். அகதிகள், ஏழைகள், மாணவர்கள் தங்கி இருக்கும் ஊருக்கு வெளியே இருக்கும் அந்தக்குடியிருப்புப் பகுதியினுள் நுழைந்தார், தமிழகத்தில் இருப்பது போல, காவலாளிகள் கிடையாது. எல்லாம் தானியங்கு முறை. குடியிருப்பின் வாசலில் சிலவினாடிகள் காத்திருந்த பின்னர், என்னைப்பார்த்து, உள்நுழையும் கடவு எண் தெரியுமா என ஸ்வீடிஷில் கேட்டார். பதில் சொல்வதற்குள், &lt;br /&gt;&lt;br /&gt;பால்கனியில் இருந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்த  ஒரு ஆப்பிரிக்க கருப்பன் எங்களைப் பார்த்ததும் கீழே வந்து உள்ளிருந்து கதவைத் திறந்துவிட்டான். தனது வீட்டிற்குப்போவார் &lt;br /&gt;எனப்பார்த்தால், வயதானவர், மாடிப்படிகளுக்குக் கீழ் இருந்த இடத்தில் தனது படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் ஏதேச்சையாகப்பின் தொடருவதைப்போல அவரைத்தொடர்ந்தேன். அதேக்குடியிருப்புப் பகுதி, ஆனால் வேறுக்கட்டிடம், வேறு ஒரு ஆள் கதவைத் திறந்துவிட,  மாடிப்படிகளின் கீழ் உள்ள இடத்தில் அவரின் வாசம். வார இறுதிக்கொண்டாட்டங்களை கோபன்ஹேகனில் கோலாகலமாகக் கொண்டாடிவிட்டு , கடைசி ரயிலில் கார்ல்ஸ்க்ரோனா வந்திறங்கியபொழுது, அந்த முதியவர் என்னைப்பார்த்து சிரித்தபடி பின் தொடர்ந்தார். வாசலில் குடியிருப்பில் உள்நுழைவதற்கான எண்ணை அடித்துவிட்டு, கதவை அவருக்காக திறந்துவிட்டேன். எனது குடியிருப்பின் மாடிப்படிகளில் கீழ் இருக்கும் இடத்தில் ஒரு குடும்பமே நடத்தலாம். அத்தனை விசாலமானது. தொடர்ந்த நாட்களில், நான் அலுவலகம் முடிந்து வரும் வழியில் காத்திருந்து என்னைப் பின் தொடர்ந்து, இரவு தங்கிவிட்டு, விடியற்காலையில் ரயில் நிலையம் திறக்கும் சமயத்தில் சென்றுவிடுவார்.  &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் நாள், இரவு  இரவு பதினொரு மணி அளவில் அழைப்பு மணி அடிக்கப்பட்டது,  யார் இந்த வேளையில், ஒரு வேளை அந்த வயதானவர் அழைக்கிறாரோ என்ற எண்ணத்துடன் கதவைத் திறந்தால், எனக்கு மேல் தளத்தில் இருக்கும் இளம் தம்பதியினர் முகத்தில் கடுமையுடன், சிறு குழந்தையுடன் இவர்களைப் பார்த்திருக்கின்றேன். நான் ஒரு முறை நட்புப்புன்னகை செய்தபொழுது வறட்டுப்புன்னைகையைத் திரும்பக்கொடுத்ததால் அவர்களை அதன்பின்னர் கண்டுகொண்டதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;”நீ தான் அந்த வயதான மனிதருக்கு கதவைத் திறந்துவிட்டாயா?” அந்த இளம் மனைவி கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம், வெளியே கடும் குளிர் அடிக்கின்றது, அதனால் தான் திறந்துவிட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“இது சிறு குழந்தைகள் இருக்கும் பகுதி, அந்த நபர் நோயாளியைப்போலவும் தெரிகிறார், அநாமதேய நபர்கள் வருவதை நாங்கள் விரும்புவதில்லை”&lt;br /&gt;&lt;br /&gt;“மனிதாபிமான அடிப்படையில்தான் திறந்துவிட்டேன், இனிமேல் அவ்வாறு நிகழாது, சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று அவர்களை அனுப்பி வைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் வயதான மனிதரிடம் சென்று கடவு எண்ணைக் கொடுத்துவிட்டு, இனிமேல் என்னை எதிர்பார்க்க வேண்டாம், அவராகவே திறந்து வந்து மடிப்படிகளில் கீழ் &lt;br /&gt;படுத்துக்கொள்ளவும் எனச்சொல்லிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று தினங்கள் எந்தப்பிரச்சினை இன்றி சென்றது, நான்காம் நாள், எனது வீட்டின் அழைப்பு மணி அடிக்கப்பட்டது, இந்த முறை போலிஸ், போலிஸிற்குப்பின்னர் அந்த தம்பதியினர் மற்றும் மேலும் சில குடியிருப்பு வாசிகள். &lt;br /&gt;&lt;br /&gt;காவலதிகாரிகள் கதவை இனி அந்த முதியவருக்கு திறந்துவிடக்கூடாது என என்னை எச்சரிக்கை வந்தார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;“அந்த முதியவர் ஒரு நாள் நான் கடவு எண்ணை அடிக்கும்பொழுது பார்த்துவிட்டார், ஒரு வேளை அதன் மூலம் உள்ளே வந்து இருக்கலாம், எனக்கு இது பற்றி எதுவும் மேலேத்&lt;br /&gt;தெரியாது” என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனது பதிலில் திருப்தி அடையாவிட்டாலும், வேறு வழியின்றி அவர்கள் சென்றனர். பால்கனி வழியே வெளியேப்பார்த்தேன். அந்த முதியவர் காவல்துறையின் காரில் ஏற்றப்பட்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் கடவு எண் அடித்து உள்நுழையும் முறை மாற்றப்பட்டது. வீட்டிற்கு இரண்டு ஸ்மார்ட்கார்ட்கள் கொடுக்கப்பட்டன. ஏடிம்மில் கார்டை நுழைத்தை கடவுச்சொல்லை அடிப்பது போல , கதவைத் திறக்க புது வழிமுறை. எனக்கு மட்டும் ஒரு அட்டை மட்டும் கொடுக்கப்பட்டது. சில நாட்கள் காணாமல் போய் இருந்த முதியவரை மீண்டும் வழியில் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-QFGBJGCNmec/TsUHam8j6rI/AAAAAAAAF2M/Rx1FgM-9HHA/s1600/kkn1"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-QFGBJGCNmec/TsUHam8j6rI/AAAAAAAAF2M/Rx1FgM-9HHA/s400/kkn1" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675951059082930866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 7 ஆம் எண் பேருந்திற்காகக் காத்திருப்பதாகக் கூறினார். 7 ஆம் எண் பேருந்து வருவதைப்போலத் தெரியவில்லை. அந்த வாரத்தில் கடும்பனிப்பொழிவும் கடுமையான குளிரும் இருக்கும் என வானிலை எச்சரிக்கை இருந்ததால், அவரை நான் என்னுடன் அழைத்துச் சென்றேன். வீட்டின் அருகில் அந்தத் தம்பதியினர் என்னைப்பார்த்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு அறிவு இல்லையா, இனியும் இவருக்காகக் கதவைத் திறந்துவிட்டால் நீயும் இவருடன் வெளியேற்றப்படுவாய் ” என்பதை பக்குவமான மொழியில் சொன்னார்கள். . &lt;br /&gt;&lt;br /&gt;“இவர் என் வீட்டு விருந்தாளி, என் விருந்தாளியை என் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு எனக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றது” எனச்சொல்லிவிட்டு வீட்டிற்கு அழைத்துச்சென்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் என்னிடம் “எனக்கு நான் வாழும் வாழ்க்கை முறையேப்பிடித்து இருக்கின்றது, வீடுகளில் வழக்கமான படுக்கை விரிப்புகள் தூக்கம் எனக்குப் பிடிக்கவில்லை ஆனாலும் உன் அன்புக்கு நன்றிகள்” &lt;br /&gt;&lt;br /&gt;எனச் சொல்லிவிட்டு கிளம்பினார். ஏதோ ஒரு உந்துதலில் என் வீட்டு விருந்தாளி எனக்கூட்டிவிட்டு வந்துவிட்டேன், ஒரேயடியாக இங்கேயேத் தங்கிவிடுவாரோ என்ற பயம் உள்ளூர இருந்தது, அவரே போறேன் என்று சொன்னதும் மகிழ்ச்சியாகவே வழியனுப்பும் முன்னர், &lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு வேளை 7 ஆம் எண் பேருந்து கிடைக்கவில்லை என்றாலோ, அதிக பனி குளிர் என்றாலோ தாரளமாக இங்கு வரலாம்” என எனது கைபேசி எண்ணைக்கொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;வரும் நாட்களில் பனியும் குளிரும் மேன்மேலும் அதிகமாகும் என்ற ஒவ்வொரு எச்சரிக்கையின் போதும் முதியவர் நினைவுக்கு வருவார், பின் அம்முவின் உரையாடல்களில் காணாமல் போய்விடுவார். புதுவருட ஆரம்பத்தில் அலுவலக நிமித்தமாக ஸ்டாக்ஹோல்ம் செல்ல வேண்டி இருந்தது. சக்கையையும் மறு முறை பிழிவதைப்போல இரண்டு நாட்களில் இரண்டு வார வேலையை வாங்கிக்கொண்டார்கள். பல எடுக்காத கைபேசி அழைப்புகள். பெரும்பாலனவை அம்முவினது, சிலவை புதிய எண்கள், கார்ல்ஸ்க்ரோனா எண்கள் போல இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;விடியற்காலையில் 8 மணி நேர பேருந்து பயணத்திற்குப்பின்னர்,ஸ்டாக்ஹோல்மிலிருந்து  கார்ல்ஸ்க்ரோனா வந்தடைந்த பொழுது சுத்தம் செய்யப்படாத சாலைகளில் கணுக்காலுக்கும் மேலே பனிபடர்வு இருந்தது. எனது தெருவின் முனையில் ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு போலிஸ் வாகனம். ஏற்கனவே கதவைத் திறந்த விசயத்தில் என்னை விசாரித்த அதிகாரியும் அங்கு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் போய் என்னவென்று கேட்டபொழுது, “அந்த முதியவர் பனிக்குளிரில் இறந்துவிட்டார், அவரின் உடலை எடுத்துப்போகத்தான் வந்து இருக்கின்றோம்” &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வீடன் வந்த பின்னர் முதன் முறையாக கண்கலங்கியது. ஒருத்தர் கூடவா கதவைத் திறந்துவிடவில்லை. எனக்கு வந்திருந்த அறிமுகமில்லாத எண்களை மீண்டும் ஒரு முறைப் &lt;br /&gt;பார்த்தேன். கடைசி அழைப்பு நேற்றிரவு 11 மணிக்கு, கடவுளே , நான் கதவைத் திறப்பேன் என்ற நம்பிக்கையில் அல்லவா வந்திருப்பார். சிறிய கூட்டத்தில் என்னை எச்சரித்த &lt;br /&gt;தம்பதியினரும், வேறு சில குடியிருப்பு வாசிகளும் இருந்தனர். என்னை கண்ணுக்கு கண் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தபடி இருப்பதாக பாசாங்கு செய்து கொண்டிருந்தனர். &lt;br /&gt;பாசாங்கையும் மீறி குற்ற உணர்ச்சி தெரிந்தது. அவர்களை விட எனக்கு அதிகமாவே இருந்தது. ஒரு நிமிடம் எனது கையுறையைக் கழட்டிவிட்டு அந்த மைனஸ் 10 டிகிரியில் வெறும் கையுடன் இருந்தேன். கையில் மரத்துப்போன உணர்ச்சியை மீட்டு எடுக்க அன்று பகல் முழுவதும். ஆனது. கை உணர்ச்சி வந்தாலும் மனது மரத்தேப்போனது.  மறுநாளும் &lt;br /&gt;அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு பால்கனி சன்னலின் வழியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். பனி மழைக் கொட்டிக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மேல்தள தம்பதியினரில் இளம் மனைவி தனது கைக்குழந்தையுடன் வெளியில் கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். கடவு அட்டையை மறந்து வைத்து விட்டாள் &lt;br /&gt;போலும். நான் பால்கனியில் இருப்பதைப்பார்த்தவுடன் என்னைப்பார்த்து கையை ஆட்டி சைகையில் கதவைத் திறந்துவிட சொன்னாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளையே புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக மற்றவர் படும் கஷ்டம் ஆனந்தமாக இருந்தது. நான் திறக்கப்போவதில்லை என்பதைப்புரிந்து கொண்டாளோ என்னவோ, கையுறையைக் கழட்டிவிட்டு கைபேசியை எடுத்து அவளின் கணவனிட்ம் பேசினாள் போல, சில நிமிடங்களுக்குப்பிறகு அவளின் கணவன் கதவைத் திறந்துவிட்டு உள்ளே அழைத்து செல்லும் முன்னர், இருவரும் என்னைப்பார்த்தனர். குரூர சிரிப்புடன்  உறைந்த மனங்களுக்கு மத்தியில்  மரத்துப்போன மனிதத்துடன் அவர்களுக்கு நடுவிரலைக் காட்டினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-3605348511699388767?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/3605348511699388767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/3605348511699388767'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/11/blog-post_17.html' title='உறைநிலை மனங்கள் - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-U9FhJozvCe0/TsUHD66-n3I/AAAAAAAAF10/onpAgel79ME/s72-c/kkn3' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-7444800821540227016</id><published>2011-11-11T23:46:00.000-08:00</published><updated>2011-11-12T00:37:17.732-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளம்பரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் - இது ஒரு விளம்பரப் பதிவு</title><content type='html'>மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் &lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; font-size: medium; "&gt;படித்த &lt;/span&gt; என்னுடைய நண்பர் ஒருவர் சென்னையில் நடத்தும் ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் பெண்கள் ஆடைகளுக்கான பிரத்யோக துணியகம் நடத்தி வருகிறார். அவருடைய வியாபார முயற்சிக்கு சிறு ஊக்கமாக , இந்த விளம்பர பதிவு எழுதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் யின் தனித்துவமான விற்பனை சூட்சுமம் , நாம் விரும்பிய வகையில் அவர்கள் வடிவமைத்து தருகிறார்கள். வடிவைமைப்புகள் , வேலைப்பாடுகள் நாம் தேர்ந்தேடுத்தபடி சேலை ஆகட்டும் , சுடிதார் ஆகட்டும் அருமையாக செய்து கொடுப்பார்கள். தபால் ,மின்னஞ்சல் , தொலைபேசி வழியாகவும் தங்களின் தேர்வுகளைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;You can find ‘’Fancy Sarees, Embroidery Sarees, Work Sarees (Kundan Works, Stone Works, Thread Works, Sequins Work &amp;amp; Bead work Sarees ) Chudidar Materials, Georgette Sarees, Net Sarees, Vazhai Naaru Sarees, Lazer Sarees, Crepe Sarees, Patola Sarees, Cotton Sarees, Vail Sarees, Masakali Sarees, Rasakali Sarees &amp;amp; Surat Cutpiece Joint Sarees with High Good Quality at Cheaper Rates’’.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; font-size: medium; "&gt;இவர்களிடம் இருந்து துணி வகைகளை பெற்றுக்கொண்டு , &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 33px;"&gt;வியாபாரம் செய்யும்  Re-sellers &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; font-size: medium; "&gt;தேவைப்படுகிறார்கள் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தொடர்புக்கு&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;Shree Textiles&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-weight: bold; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;40/2 Kappal Polu Street,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-weight: bold; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;Old Washermanpet,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-weight: bold; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;Chennai - 600021.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-weight: bold; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;Phone: +91 9840819501&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;Email:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;shreetextiles.sgc@gmail.com&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;div style="font-weight: bold; text-align: center; "&gt;&lt;b&gt;shreetextilessgc@yahoo.com&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;font-weight: bold; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VEGsL5lT4jw/Tr4wGZJgI4I/AAAAAAAAF1M/rXXseaOQQxs/s1600/shree.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 212px;" src="http://2.bp.blogspot.com/-VEGsL5lT4jw/Tr4wGZJgI4I/AAAAAAAAF1M/rXXseaOQQxs/s400/shree.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5674025466921493378" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-7444800821540227016?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7444800821540227016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/7444800821540227016'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/11/blog-post.html' title='ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் - இது ஒரு விளம்பரப் பதிவு'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VEGsL5lT4jw/Tr4wGZJgI4I/AAAAAAAAF1M/rXXseaOQQxs/s72-c/shree.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-2567840228839780279</id><published>2011-11-11T09:40:00.000-08:00</published><updated>2011-11-11T04:29:36.320-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை-போலாந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>போலாந்து - ஃபீனிக்ஸ் தேசம்</title><content type='html'>&lt;div&gt;ஒரு பக்கம் வாசனைத் திரவியங்களுக்காகவும் தங்கத்திற்காகவும் நாடு பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐரோப்பிய மன்னாராட்சி வல்லரசுகளின் மத்தியில், அமைதியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஒற்றுமையே பலம் என்ற தற்கால ஐரோப்பிய ஒன்றிய கோட்பாடுகளை அன்றே செயற்படுத்திய போலாந்து இன்று (நவம்பர் 11) தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.   &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwx22fB8HI/AAAAAAAAEvA/iHMl7-DkLkc/s1600/Poland_3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 375px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwx22fB8HI/AAAAAAAAEvA/iHMl7-DkLkc/s400/Poland_3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5538356460167229554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சோவியத் ரஷியாவின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு மாநிலமாக 50 ஆண்டுகள் பொதுவுடைமை சித்தாந்த அடிப்படையில்  ஆட்சி நடைபெற்ற போலாந்து தேசம் தான், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்களாட்சி தத்துவத்தை ஆட்சி முறையில் நடைமுறைப்படுத்தியது என்பதைக் கேட்க வியப்பாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் எப்பொழுது ஏப்பம் விடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் ரஷியா, மறுபக்கம் கடல் வாணிபம் என்ற பெயரில் கடற்கொள்ளையர்களாகத் திரியும் சுவீடன் தேசத்து கடற்படை, வேறொரு பக்கம், மேற்கு ஐரோப்பா முழுவதையும் தனதாக்கிக்கொண்டிருக்கும் துருக்கிய ஆட்டோமான், இவற்றிற்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டு, தங்களுக்குள்ளும் அடித்துக்கொண்டிருந்த  லித்துவேனியாவும் போலாந்தும் கூட்டமைப்பாக இருப்பது என முடிவு செய்தன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwra1pBnxI/AAAAAAAAEuo/9qeMpSK9MSU/s1600/Poland_Map.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 314px;" src="http://3.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwra1pBnxI/AAAAAAAAEuo/9qeMpSK9MSU/s400/Poland_Map.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5538349381834612498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசன், கடவுளுக்கு அடுத்தபடி என ஐரோப்பாவே மந்திரித்து திரித்துவிட்டதுபோல இருந்த சமயத்தில், மன்னனின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி தேர்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் வழியாக கூட்டாட்சித் தத்துவம் செயற்படுத்தப்பட்டது. லித்துவேனியா - போலாந்து கூட்டமைப்பில் தற்கால பெலாரஸ் , எஸ்தோனியா ,லாட்வியா, ருமேனியா, ஸ்லோவேக்கியா, உக்ரைன் மற்றும் ரஷியாவின் சிலபகுதிகளும் அடங்கி இருந்தன. பலதரப்பட்ட இன மக்கள், அவர்களில் பல்வேறு மொழிகள் பேசும் இனக்குழுக்கள், ஆதி தெய்வங்கள் முதற்கொண்டு ஆபிராகமிய மதங்கள் வரை பின்பற்றும் மக்கள்  சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தது இன்றளவிலும் வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப்படுகிறது.போலிஷ் மொழி முதன் அதிகாரப்பூர்வமாக இருந்தாலும் லத்தீன், ஜெர்மன், ஹீப்ரூ, ஆர்மீனியன், ஸ்லேவேனியன் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருந்தன. பிரெஞ்சு நீதிமன்ற தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwxjCi5LzI/AAAAAAAAEu4/MzUtmhoxAfk/s1600/Great_Chor%25C4%2585%25C5%25BCy_of_the_Polish_Crown.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwxjCi5LzI/AAAAAAAAEu4/MzUtmhoxAfk/s400/Great_Chor%25C4%2585%25C5%25BCy_of_the_Polish_Crown.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5538356119807274802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோழ சாம்ராஜ்யத்தைப்போல பண்பட்டு 1569 முதல் 1795 வரை கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள் வெற்றிகரமாக செயற்பட்ட லித்துவேனியா - போலாந்து கூட்டமைப்பு வீழ்ந்ததன் காரணங்கள் பலவாக இருந்தாலும்  மாகாணங்களின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த  ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் முக்கியமானதாக சொல்லபடுகிறது. தற்பொழுதைய ஐ.நா சபையின் பாதுகாப்புக்குழுவில் இருக்கும் ரத்து அதிகாரத்திற்கு நிகரானது. பலமிழக்கும் கூட்டமைப்பை வலுப்படுத்த, திருத்தி வடிவைமைக்கப்பட்ட அரசியலைப்பு சட்டம் 18 ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்த ஆஸ்திரிய, பிரஷிய , ரஷிய தாக்குதல்கள் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த அரசாங்கம் அப்பத் துண்டுகள் போல தனித்தனியே வெட்டி எடுக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது. வாழ்ந்து கெட்டவர்கள் படும் துன்பங்களை ஏனைய ஐரோப்பா கொண்டாடிக்கொண்டிருக்கையில் ஆட்டோமான் துருக்கிய அரசு, கூட்டமைப்பு உடைந்ததை அங்கீகரிக்கவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நூற்றாண்டுகள் தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த போலாந்து இன மக்கள், தனது மொழியைப் பேச மறுக்கப்பட்டனர், ரஷிய , ஜெர்மானிய அடையாளங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். பதுங்கு அறைகளில் போலாந்திய  மொழி அடுத்து வரும் தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது. அடையாளங்கள் உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கப்பட்டது. இடையில் நெப்போலியன் ஒரு பரப்பளவில் சிறிய நாட்டைப் பெற்றுத்தந்தாலும், மீண்டும் நெப்போலியனின் தோல்விக்குப்பிறகு போலாந்திய மக்கள் அகதிகள் ஆகினர். தற்கால தமிழர்களைப்போல தமிழன் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்கு என ஒரு நாடில்லை கதியில் போலாந்து மக்களின் துயரம் தொடர்ந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwyHQekRxI/AAAAAAAAEvI/jvDU2wVJCcU/s1600/Poland_4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwyHQekRxI/AAAAAAAAEvI/jvDU2wVJCcU/s400/Poland_4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5538356742022514450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் நாடற்று இருந்த போலாந்திய இனம், முதலாம் உலகப்போரின் முடிவில், ரஷியாவின் உள்நாட்டுக்குழப்பம், ஜெர்மனியின் பின்வாங்கல் ஆகியனவற்றுடன், சுதந்திரக் காற்றை சுவாசிக்க இரண்டு தலைமுறையாய் காத்துக்கொண்டிருந்த போலாந்து மக்கள் ஜோசஃப் பிலுட்ஸ்கி தலைமையில் ஒன்று திரண்டனர். எஞ்சி இருந்த ஜெர்மானிய ஆதிக்கத்தை துரத்தி அடித்து ஜோசஃப் பிலுட்ஸ்கி தலைமையில் இரண்டாம் போலாந்து குடியரசு உதயமான நாள் தான் நவம்பர் 11.உணர்ச்சிப்பூர்வமாக நான்கு ஒன்றுகள் அடுத்தடுத்து இருக்கும் இந்த நாள், ஒவ்வொரு போலாந்தை சேர்ந்தவரும் தன அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் நாள்.  இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் வந்த ரஷியாவின் பொம்மை அரசாங்கம் அரை நூற்றாண்டு காலத்திற்கு , இந்த நாளுக்கான மரியாதையை குப்பையில் போட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்கள், போலாந்தில் இருந்த யூதர்களை வேட்டையாடியபொழுது, உயிரைக்கொடுத்தாலாவது யூதர்களைக் காப்பாற்ற வேண்டும் என போலாந்து மக்கள் பிரயத்தனப்பட்டார்கள். இலங்கையில் 80களின் இடையில் ஜேவிபி இளைஞர்களுக்கு அடைக்கலம் அளித்த தமிழ் குடுமபங்கள் இங்கு நினைவுக்கு வருவது தடுக்க முடியாதது. வரலாற்றுப்பூர்வமாக நோக்கினால் , ஐரோப்பா முழுமைக்கும் நிலவிய யூத எதிர்ப்பு போலாந்து சமுதாயத்தில் ஒப்பீட்டளவில் மிக மிகக்குறைவு, இதற்கு ஒரு காரணம் லித்துவேனிய-போலாந்து கூட்டமைப்பு காலம் தொட்டு ரத்தத்தில் ஊறி இருந்த சகிப்புத்தன்மை, பெருந்தன்மை.  யூதர்களுக்கு சமமாக போலாந்து மக்களும் கொல்லப்பட்டாலும் (முதலில் ஜெர்மானிய ராஜிக்கள், பின்னர் ரஷியா), யூதப்படுகொலைக்கு ஈடாக போலாந்திய இனப்படுகொலை வரலாற்றில் உணரப்படுவதில்ல்லை. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் போலாந்து ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்தபின்னர், போலாந்து தேசியவாதிகளில் நாடுகடந்த அரசாங்கம் முதலில் பாரிஸில் இருந்தும் பின்னர் லண்டனில் இருந்தும் செயற்படத் தொடங்கியது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஏட்டளவு அரசாங்கமாக இருந்தாலும், நாடுகடந்த அரசாங்கத்தின் தொடர் இயக்கம் போலாந்து மக்களின் ரஷிய ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளுக்குள் கணர வைத்துக்கொண்டே இருந்தது. தங்களின் இன மொழி தேசியத்தின் அடிப்படையில் தனிநாடு கோரிப்போராடி வருபவர்களுக்கு இந்த போலாந்தின் நாடுகடந்த அரசாங்கம் பற்றிய பார்வை ஒரு உற்சாக மருந்து.  நாடுகடந்த அரசாங்க செயற்படுகளின் தொடர் முயற்சிகளில் , 80 களின் தொடக்கத்தில் ரஷியாவின் பொம்மை அரசாங்கத்தின் அடித்தளம் கிடான்ஸ்க் நகரில் நடைபெற்ற  தொழிலாளர் போராட்டத்தில் ஆடத் துவங்கியது. உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து முதன் முதலில் மீண்டும் ஒருமுறை ஃபீனிக்ஸ் பறவையாய் சுய அடையாளத்தைக் கண்டது. மீண்டும் நவம்பர் 11 சுதந்திர தினம் ஆனது. மக்களாட்சித் தத்துவத்தை உலகிற்கு நடைமுறைப்படுத்திக் காட்டிய போலாந்து மக்கள் பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு எதிராக கிளம்பினர் என்பதை விட, ஆதிக்க ரஷியாவிற்கு எதிராக நூற்றாண்டுகளாகப் போராடியதைப்போல, 80 களின் பிற்பகுதியில் போராடி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினர். வோட்காவிலும் வினிகரிலும் எழுச்சியை முடக்க நினைத்தாலும், இறுதியில் வைராக்கியம் வென்றது. மக்களாட்சியாகட்டும் பொதுவுடமைத் தத்துவமாகட்டும் முழு அதிகாரங்களுடன் நிறுவனமயப்படுத்தப்பட்ட எந்த ஒரு தத்துவமும், அது சார்ந்த அரசாங்கமும் தோல்வியில் முடிவடையும் என்பது போலாந்தின் வரலாற்றில்  கற்றுக்கொள்ளப்படவேண்டிய பாடமாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwxF_9HlHI/AAAAAAAAEuw/E3MqchtSqzg/s1600/Poland_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 204px;" src="http://1.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwxF_9HlHI/AAAAAAAAEuw/E3MqchtSqzg/s400/Poland_2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5538355620895757426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தொடர் வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது கண்ணிமைக்கும் நேரம், அடையாளங்களைத் தொடர்ந்து எழுச்சியுடன் வைத்திருப்பது எப்படி என்பதை தமிழ்ச் சமுதாயம் போலாந்து தேசியத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கின்றது. உலகிற்கே உதாரணமாக விளங்கிய சில நூற்றாண்டுகள்,  ஒடுக்கப்பட்டு ஓடி ஓளிந்து பாதாள அறைகளில் விழுமியங்களையும் மொழியையும் அடையாளங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது, வல்லரசுகள் மத்தியில் நசுங்கி சின்னா பின்னம் ஆனாலும், ஏகாதிபத்திய திமிங்கல வாயில் நுழைந்து விடாமல், நாடுகடந்த அரசாங்கங்களின் ஊக்கத்தில் விசுவரூபம் எடுத்து அடையாளாங்களை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் போலாந்து தேசியத்திடம் இருந்து தமிழர்களும் தமிழ் தேசியமும் கற்றுக்கொள்ள ஏராளமாக இருக்கின்றனர். அப்பொழுதுதான் தமிழர்கள்  நண்டுகள் அல்ல , அவர்கள் ஃபீனிக்ஸ் பறவைகள் என வரும் வரலாறு சொல்லும் காலமும் கனவும் நிறைவேறும்.  ஆம் நவம்பர் 11 ஆம் தேதிக்கும் நவம்பர் 27 ஆம் தேதிக்கும் பெரிய இடைவெளி இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;---&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;போலாந்து தேசத்தின் வரலாற்றை விரிவாகப்படிக்க Norman Davies எழுதியிருக்கும் God's Playground நூலின் இரண்டு தொகுதிகள் பரிந்துரைக்கப்படுகிறது. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-2567840228839780279?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/2567840228839780279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/2567840228839780279'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2010/11/blog-post_11.html' title='போலாந்து - ஃபீனிக்ஸ் தேசம்'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HUXNbxQdt24/TNwx22fB8HI/AAAAAAAAEvA/iHMl7-DkLkc/s72-c/Poland_3.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-6244110154684333507</id><published>2011-10-08T03:09:00.001-07:00</published><updated>2011-10-08T23:52:53.612-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>இணைய வெளியில் தமிழுக்கென தனிக்கொற்றம் ( .Tamil - gTLD) - தேவையான முன்னெடுப்புகள்</title><content type='html'>நம்முடைய வலைப்பூக்கள், இணையத்தளங்களின் கொற்றங்கள் (domain).com , .net, .in என அல்லாது .Tamil (உதாரணமாக www.india.com என்பதற்குப் பதிலாக www.india.tamil )என்ற வகையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நீங்கள் எண்ணியதுண்டா? ஆம் எனில் இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமான பார்சிலோனாவில் இருந்து  ஒரு நண்பரை நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது. சிலப்பல ஸ்பானிய மொழி வாக்கியங்களுடன் அவரைச் சந்திக்க தயாராக இருந்தபோது, தன்னை ஒரு கட்டலோனியன் (Catalonia) என அறிமுகப்படுத்திக் கொண்டார். வடகிழக்கு ஸ்பெயினின்  தனியான சுதந்திர அந்தஸ்துடன் இருக்கும் ஒரு மாநிலம் கட்டலோனியா, கட்டலோனிய மொழிப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு அது. தனித்துவமான இன, மொழிகுழுக்கள் தேசியங்களாக மேலெழும்புவதைப் பார்ப்பது மனதுக்குப் பிடித்தமான ஒன்று ஆதலால், அவருடன் தொடர்ந்து பேசத்தொடங்கியபோது , நிறையப் பேருக்கு வெளியில் தெரியாத ஒரு விபரத்தைக் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;இணைய வெளி வரலாற்றில், மொழி மற்றும் கலாச்சாரக் கூறுகளின் அடிப்படையில் இணையத்தில் உயர்நிலைக் கொற்றதைப் பெற்றவர்கள் கட்டலோனியர்கள். ஆம், .cat என்ற உயர்நிலைக் கொற்றம் (TLD - Top level domain)கட்டலோனிய மக்களுக்காக  2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. .cat கொற்றத்தின் வழியாக 50,000 க்கும் மேலான இணைய தளங்கள் கட்டலோனியன் மொழியில் செயற்பட்டு வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;2004 ஆம் ஆண்டு ICANN நிறுவனத்தால்,  உபயதாரர்கள் உயர்நிலைக் கொற்றங்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது, .asia, .jobs, .travel, .mobi ஆகியனவற்றுடன் .cat கொற்றத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது.  ICANN என்பதின் முழுவடிவம், Internet Corporation for Assigned Names and Numbers, அதாவது இணைய தள முகவரிகள், எண்கள் வழங்குபவதை நிர்வாகிக்கும் உச்ச அமைப்பு. &lt;br /&gt; இடையில் காதல்-கலவிக் கான இணையத்தளங்களுக்கான  .xxx அனுமதி அறிவிப்புப்பிற்குப்பின்னர், இணைய வெளியின் மற்றும் ஒரு மறுமலர்ச்சித் திட்டமாக மேலதிக உயர்நிலைக் கொற்றங்களை அனுமதிக்கும் ஒரு திட்டத்தை ICANN ஆரம்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-TkcHQyAD68I/TpA-Bf8ZSaI/AAAAAAAAFzk/aQFtR4Cqut8/s1600/Icann3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-TkcHQyAD68I/TpA-Bf8ZSaI/AAAAAAAAFzk/aQFtR4Cqut8/s400/Icann3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661092927080319394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமை, முன்னெடுப்பு இல்லாமை, நிதிக்கட்டுப்பாடுகள், ஒருங்கிணைப்பு இன்மை என ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் தமிழுக்கான  உயர்நிலைக் கொற்றம் பெறும் வாய்ப்பை 2004 ஆம் ஆண்டில் தவறவிட்டாலும், இந்த முறை ICANN அறிவித்து இருக்கும் gTLD கொற்றங்கள் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;தனித்தமிழ் முன்னெடுப்புகள், திராவிட அரசியல் இயக்கங்கள், இளையராஜாவின் இசை, செயற்கை கோள் தமிழ் தொலைகாட்சி ஊடகங்கள், ஒருங்குக்குறி எழுத்துருக்கள் என தமிழுக்கு அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மறுமலர்ச்சிகளும், உணர்வூட்டங்களும் கொடுக்கப்பட்டு நீரில் அமுக்கப்பட்ட காற்றடைத்தப் பந்தைப்போல தமிழ் மேல் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் தமிழுக்கான கொற்றம் அருமையான வாய்ப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;தேவையான முன்னெடுப்புகள் &lt;br /&gt;&lt;br /&gt;1. கட்டலோனியர்களின் விண்ணப்பப் படிவத்தை ஆழ்ந்து வாசித்து, அதைத் தரவாக வைத்து தமிழுக்கென ஒரு விண்ணப்பத்தைத் தயார் செய்வது. கருத்தியல், அரசியல், நடைமுறைப்யன்பாடு முதலிய காரணங்களைக் காட்டி எழுந்த  எதிர்ப்புகளுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பது பற்றிய ஆழ்ந்த வாசிப்பு. தமிழ் என வந்து விட்டால் சுண்டைகாய் பெறாத விடயங்களைக்கூட காரணம் காட்டி எதிர்ப்பார்கள். புதிய gTLD யில் கலாச்சார மொழிக்கான கொற்றங்கள் கொடுப்பதற்கு எதிர்க்கும் காரணங்களில் தமிழை ஒரு உதாரணமாக ஒரு வேளை தமிழ் தனக்கெனக் கேட்டால் இலங்கை அரசாங்கம் எதிர்க்குமே என  விவாதங்களில் காட்டியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.icann.org/en/tlds/stld-apps-19mar04/cat.htm"&gt;&lt;br /&gt;கட்டலோனியர்களின் விண்ணப்பம் = http://www.icann.org/en/tlds/stld-apps-19mar04/cat.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://forum.icann.org/lists/stld-rfp-cat/"&gt;விண்ணப்பத்தின் மீதான விவாதங்கள் - http://forum.icann.org/lists/stld-rfp-cat/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் / அரசாங்கங்கள் தமிழுக்கென தனி இடத்தை வாங்கும் திட்டம் வைத்து இருந்தால், அவற்றை ஒருங்கிணைத்து கூட்டாக முயற்சித்தால் பெரிய இடையூறுகள் இன்றி பெறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;3. ICANN நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய gTLD திட்டத்தின் கீழ் வர்த்தக நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், அரசாங்கங்கள், சமுதாய,கலாச்சர,மொழிக்குழுக்கள் என கொற்றங்களைப் பெற்றுக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;4. புதிய உயர்நிலைக் கொற்றங்களைக்கோரும் விண்ணப்பங்கள் ஜனவரி 12, 2012 ஆம் ஆண்டில் இருந்து ஏப்ரல் 12, 2012 ஆம் தேதிவரை ICANN பெற்றுக்கொள்ளும். &lt;br /&gt;&lt;br /&gt;5. உயர்நிலைக் கொற்றம் பெருவதில் மிகப்பெரும் வியாபர சந்தையும் இருப்பதால், இதற்கான விண்ணப்பக் கட்டணமும் மிக மிக அதிகம். சாமானிய மனிதனால் இந்த முன்னெடுப்பைத் தனியாக செய்ய இயலாது. நிறுவனங்கள், அரசாங்கங்கள் என கூட்டு முயற்சியில் மட்டுமே தமிழுக்கென தனிக்கொற்றம் வாங்க முடியும். தனிக்கொற்றம் பெற்று அதற்கான இரண்டாம் நிலை கொற்ற விற்பனை சந்தையினால், விண்ணப்பம் கோரும் நிறுவனம் அதற்கான சிறந்த வியாபரத்திட்டத்தையும் கையகத்தே வைத்திருத்தல் வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;6. விண்ணப்பத்திற்கான முன் வைப்புத் தொகை - 5000 அமெரிக்க டாலர்கள்&lt;br /&gt;ஒட்டு மொத்த விண்ணப்பத் தொகை - 1,85,000 அமெரிக்க டாலர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;7. இயல்பாக எழும் அடிப்படைக் கேள்விகளுக்கு இந்தக் கோப்பை வாசிக்கலாம் &lt;a href="http://www.icann.org/en/topics/new-gtlds/gtld-facts-31jul11-en.pdf"&gt;http://www.icann.org/en/topics/new-gtlds/gtld-facts-31jul11-en.pdf&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. விண்ணப்பத்தாரர்களுக்கான முழு வழிகாட்டி இந்த சுட்டியில் கிடைக்கும் &lt;a href="http://www.icann.org/en/topics/new-gtlds/rfp-clean-19sep11-en.pdf"&gt;http://www.icann.org/en/topics/new-gtlds/rfp-clean-19sep11-en.pdf&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-1jfAWUvHYYk/TpA17C_dSPI/AAAAAAAAFzU/y_9Wjfc4aVM/s1600/ICANN1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 294px;" src="http://4.bp.blogspot.com/-1jfAWUvHYYk/TpA17C_dSPI/AAAAAAAAFzU/y_9Wjfc4aVM/s400/ICANN1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661084020136298738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-T9KuyDzhEwI/TpA17fOX75I/AAAAAAAAFzc/askyNavMVqU/s1600/icann2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 292px;" src="http://3.bp.blogspot.com/-T9KuyDzhEwI/TpA17fOX75I/AAAAAAAAFzc/askyNavMVqU/s400/icann2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661084027715055506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணப்பங்களை அனுப்ப இன்னும் 90 நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. ஐந்து நாடுகளில் மக்கள் செல்வாக்குடன் அரசியல் செல்வாக்கையும் பெற்றிருக்கும் தமிழுக்கு தனிக்கொற்றம் வேண்டும் என்பது பேராசை அல்ல. இயல்பாக தன்னிடம் வரவேண்டிய விசயங்கள்,தகுந்த முன்னெடுப்புகள் இல்லாமல் இலவு காத்த கிளியின் நிலை போல் ஆகிவிடக்கூடாது. தமிழக அரசாங்கமோ, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ, அல்லது தமிழை நேசிக்கும் பெரும் நிறுவனங்களோ இணைந்து இந்த முன்னெடுப்பை எடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt; முக்கியமான விசயம் என்னவெனில் இதில் வெறும் ஆர்வம் சார்ந்து, கொடை சார்ந்த விசயம் மட்டும் அல்ல. இதில் வியாபாரம் வணிகம் சார்ந்த கூறுகளும் அடங்கியுள்ளது. வெறுமனே மொழி சார்ந்து மட்டும் பார்க்காமல் சந்தை ரீதியில் பார்த்தாலும் மிகப்பெரும் லாபம் ஈட்டக்கூடிய ஒரு விசயம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெறப்பட்ட .cat கொற்றம் இன்று வருடா வருடம் ஒன்பதரைக் கோடி ரூபாயை தோராயமாக ஈட்டி வருகிறது. கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் மக்கள் தொகை / சந்தை கொண்ட தமிழால் மேலும் லாபம் ஈட்டித்தர முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;மாட்ரிக்ஸ் படத்தில் வருவதைப்போல உலகம் இணையம் சார்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பூமிப்பந்தில் தனித்த இடம் இல்லாது போதிலும், எல்லையற்ற இணையவெளியில் தமிழுக்கென கொற்றத்தைப்பெறுவொம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்காக மட்டும் இன்றி , ஏனைய மொழிகளுக்கும், அவற்றின்  மொழி ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் ஆனா ஒரு கொற்றத்தை பெற வைக்க முன்னெடுப்புகளையும் செய்ய வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழும் ஈழமும் ஒன்றுக்கொன்று சமமானவை. தமிழுக்கு கொற்றம் பெறும் அதே வேளையில் ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி, .eelam or .eezham கொற்றத்தினைப் பெற முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். அரசியல், அறப்போராட்டங்களுக்கு, அறிவுசார்ந்த வெற்றிகளும் மிகப்பெரியத் துணைக்கொடுக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களில் www.tamil.eelam எனவும் www.eelam.tamil எனவும் தளங்கள் அமைய இன்றே விதைப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;உசாத்துணைகள் / தரவுகள் &lt;br /&gt;1. http://www.icann.org/&lt;br /&gt;2. http://www.mindsandmachines.com/tag/new-gtlds/&lt;br /&gt;3. http://newgtlds.icann.org/&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - கலைச்சொற்கள் மற்றும் மேலதிக விவாத விபர உதவிகளுக்காக - டாக்டர். புருனோ &lt;a href="http://www.payanangal.in/"&gt;- http://www.payanangal.in/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-6244110154684333507?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/6244110154684333507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/6244110154684333507'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/10/tamil-gtld.html' title='இணைய வெளியில் தமிழுக்கென தனிக்கொற்றம் ( .Tamil - gTLD) - தேவையான முன்னெடுப்புகள்'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-TkcHQyAD68I/TpA-Bf8ZSaI/AAAAAAAAFzk/aQFtR4Cqut8/s72-c/Icann3.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-8645973057312457192</id><published>2011-08-30T15:01:00.000-07:00</published><updated>2011-08-31T02:06:52.937-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>சரப்ஜித் சிங் - தூக்கின் வாசலில்</title><content type='html'>இந்த வருடத்திய  ஆகஸ்ட் மாதம்அதிகாரப்பூர்வ உயிர்க்கொலைகளை ஆதரிக்கும் மாதம் போல் இருக்கிறது. இந்தியக் குடிமகனும் , பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட21 வருடங்களாக பாகிஸ்தானிய கடுஞ்சிறை வாசத்தை அனுபவித்து வரும் மரண தண்டனை கைதி சரப்ஜித் சிங்கிற்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது என்றும் உடனடியாக தூக்கில் ஏற்ற வேண்டும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் இராணா இலாமுதீன் காசா அந்நாட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. ஏற்கனவே பாகிஸ்தானிய மாணவர்கள் சங்கம் சரப்ஜித் சிங்கிற்கு உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என 2008 ஆம் ஆண்டில் இருந்து அடிக்கடி போராட்டங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  2008 ஆம் ஆண்டுதான் சரப்ஜித்தின் தூக்கை அப்பொழுதைய பிரதமர் யூசுப் கிலானி காலவரையின்றி ஒத்தி வைத்தார். பஞ்சாப் முதல்வர் பிரதமருக்கு நேரிடை கோரிக்கை, இரு நாட்டு பேச்சுவார்த்தைகளில் இடம்பெறும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் இந்த மரணதண்டனைக்கு? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-2Km0Je5l3yg/Tl17bMtFrRI/AAAAAAAAFxw/6c0L5BcYyRc/s1600/sarabjit-singh-noose.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 250px;" src="http://1.bp.blogspot.com/-2Km0Je5l3yg/Tl17bMtFrRI/AAAAAAAAFxw/6c0L5BcYyRc/s400/sarabjit-singh-noose.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5646805214989495570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுள்ளிப்பொறுக்கவும் , சாராயம் கடத்தவும் எல்லைக் கடந்த மன்ஜித் சிங்கை, 90ஆம் ஆண்டு  லாகூரிலும் , முல்தானிலும் ஏற்பட்ட  தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அதனால் ஏற்பட்ட 14 உயிர்ப்பலிகளுக்கும் காரணமான தீவிரவாதி எனச் சித்தரித்தும், இந்திய உளவுத்துறையின் கூலி எனவும் கைது செய்து மனிதாபிமான அற்ற முறையில் தனிமைச் சிறையில் அடைத்தது. உலகத்தில் இருக்கும் அனைத்து விதமான கொடூரமான சித்ரவதைகளைச் செய்தால் எந்த சாமானிய மனிதனும் செய்யாதக் குற்றத்தையும் ஒப்புக்கொள்வான். மன்ஜித் சிங்கும் ஒப்புக்கொண்டார், பாகிஸ்தானிய காவல்துறை அவருக்கு சரப்ஜித் என்ற பெயரையும் சூட்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நாட்டுக் காவல்துறைகளுக்கு பாகிஸ்தானிய காவல்துறை சளைத்ததா என்ன? அற்புதமாக சாட்சிகளையும் சந்தர்ப்பங்களையும் ஜோடித்து , நமது ஊருக்கு இணையான தடா போன்ற தீவிரவாதக் கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றில் 1991 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையும் வாங்கிக்கொடுத்தது. வழக்கு விவாதங்கள் ஆங்கிலத்தில் நடைபெற்றன. அடிப்படை தடயவியல் சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை. எல்லாவித ஓட்டை ஒடிசல்களைக் காரணம் காட்டி சிலக் கருணை மிகுந்த பாகிஸ்தானிய மனித உரிமை வழக்கறிஞர்களின் உதவியுடன் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் வரைச் சென்றாலும் ஒவ்வொரு முறையும் மரண ஓலை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்டது. நூறுகோடி முகமுடைய இந்தியத் தேசத்திற்கு சரப்ஜித்தின் ஒருமுகம் தெரியவே இல்லை. முன்னாள் அதிபர் பர்வேஷ் முசாரஃபும் 2006 ஆம் ஆண்டு கருணை மனுவைத் தள்ளுபடி செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Q5L6wHupyv4/Tl187gUFDuI/AAAAAAAAFx4/IgjsCPpoGRY/s1600/sarabjit-singh1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 228px;" src="http://3.bp.blogspot.com/-Q5L6wHupyv4/Tl187gUFDuI/AAAAAAAAFx4/IgjsCPpoGRY/s400/sarabjit-singh1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5646806869520748258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரப்ஜித் என்ற மன்ஜித்தின் முற்பிறவி பலனோ என்னவோ, இந்திய செய்தி ஊடகங்கள் மழைக்காளான்கள் போல 2000ம் ஆண்டுகளில் பெருக ஆரம்பித்தன. அவர்களுக்கு இந்த சரப்ஜித் விவகாரம் வசமாக கையில் சிக்கியது. சரப்ஜித்திற்கு எதிராக சாட்சி சொல்லிய ஒருவரை நேரிடையாகப்பேட்டி எடுத்து, அவர் காவல்துறையின் வற்புறுத்தலால் தான் சரப்ஜித்திற்கு எதிராக சாட்சி சொன்னதாகக் கூறியதை ஒளிபரப்பியது.&lt;br /&gt;&lt;iframe width="420" height="345" src="http://www.youtube.com/embed/idrSe30iCgs" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt; புது நூற்றாண்டில் இந்தியா ஊடகங்களால்தான் ஆளப்படப்போகிறது என்பதற்கு முன்னோட்டமாக சரப்ஜித்தின் விடயம் இந்திய அரசாங்கத்தின் உயர்தளம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அப்பாவி சரப்ஜித்திற்கும் நம்பிக்கைக் கீற்று தெரியத் தொடங்கியது. ஏறத்தாழ இதேக் காலக்கட்டத்தில்(2005-08)  பாகிஸ்தானிய மனித நேய ஆர்வலர் அன்ஸர் பர்னே எடுத்த முன்னெடுப்புகளால், வேவுப்பார்க்க வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்கள் தனிமைச் சிறையில் வாடிய காஷ்மிர் சிங் என்பவர், அதிபர் முசாரஃபால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சரப்ஜித்தின் பொது மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பாக கேள்விகளும் விளக்கங்களும் கோரப்பட,  அப்பொழுதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் இதுத் தொடர்பாக பாகிஸ்தானிய உயரதிகரிகளிடம் பேசி மனிதாபிமான அடிப்படையில் சரப்ஜித்தை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அன்றைய பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் ஊடக ஆலோசகர் ஹர்சரன் சிங் பெயின்ஸ் ஒரு படி மேலே சென்று, “ஒரு வேளை சரப்ஜித் குற்றவாளியாக இருந்தாலும் கூட இந்திய துணைக்கண்டத்தின் அமைதிக்காக பாகிஸ்தான் அவரைப் பெருந்தன்மையாக மன்னித்துவிடவேண்டும்” எனப் பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டார். சரப்ஜித்தின் குடும்பத்தினர் பாகிஸ்தான் சென்று சரப்ஜித்தைப் பார்க்க பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;மின்மினிப் பூச்சியாக இருக்கும் இந்திய பாகிஸ்தானிய உறவில் மீண்டும் ஒரு துளிர்ப்பு ஏற்பட்டது. காஷ்மிர் சிங்கை முன்மாதிரியாகக் கொண்டு சரப்ஜித் விடுதலைச் செய்யப்படுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்ததை உறுதி செய்யும் வகையில் பிரதமர் கிலானியும் மரணதண்டனையை காலவரையின்றி ஒத்திப்போட வைத்தார்.&lt;br /&gt;வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் கசாப் பம்பாயை கசாப்பு கடையாக்க, வருங்கால மரணதண்டனைக் கைதியால் தன் மரணதண்டனை நிர்ணயிக்கப்படும் என சரப்ஜித் எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஏற்கனவே விடுதலை ஆன காஷ்மிர் சிங் , இந்திய எல்லையை அடைந்தவுடன், “ஆமாம் , நான் இந்திய உளவு ஆள்தான்” எனப் பெருமையடித்துக்கொள்ள, அவருக்கு ஏற்கனவே உதவி செய்து இருந்த அன்ஸர் பர்னே மிகப்பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஏற்கனவே ஒரு முறை சூடுபட்டுக்கொண்டதால், அன்ஸரும் சரப்ஜித்திற்கு உதவ முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சொர்க்கத்தின் எல்லையான வாகாவை சில வாரங்களில் கடந்து இரண்டு மகள்களையும் மனைவியையும் பார்க்கலாம்  என எண்ணிக்கொண்டிருந்த சரப்ஜித் மீண்டும் நரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மரணதண்டனையை உடனடியாக நிறைவேற்றவேண்டும் எனத் தொடர்போராட்டங்கள் நடைபெற்றன. கசாப் கடல் கடந்து மாட்டிக்கொண்ட தருணத்தில் இருந்து நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தான் சரப்ஜித் வாழ்ந்து வருகின்றார். உலகத்திலேயே கொடுமையானது தனது உயிர் பழிக்குப்பழி என்ற வகையில் துருப்புச்சீட்டாக இருக்கிறது என்பதை உணரப்படும்பொழுதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் வாதத்தின் படி அவர் எல்லையோரப் பாமரன் மன்ஜித்தாக இருந்துவிட்டுப் போகட்டும் அல்லது பாகிஸ்தானிய நீதிமன்ற தீர்ப்பின்படி தன்னாட்டு மக்களைக் கொன்ற தீவிரவாதி சரப்ஜித்தாக இருந்துவிட்டுப்போகட்டும்.எப்படி இருந்தாலும் இந்த 21 வருடங்களில் மரணத்தையும் விட கொடுமையான துன்பங்களையும் சித்ரவதைகளையும் ஒரு உண்மையான தீவிரவாதி அனுபவிப்பதைக்காட்டிலும் அதிகமாகவே சரப்ஜித் அனுபவித்துவிட்டார். கால் லிட்டர் சாரயத்திற்கு 21 வருடங்கள், மேலதிகமாக மரணதண்டனை என்பது மிகக் கொடுமையானதுதான். செய்த குற்றத்திற்கே இரு தண்டனைகள் நியாயம் ஆகது என்ற நிலையில் செய்யாத குற்றத்திற்கு இரண்டு கடும் தண்டனைகளை அனுபவிக்க வைப்பது மனிதத் தன்மையாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையால் அளிக்கப்பட்ட உயிர் இயற்கையாக மட்டுமே பிரிதல் வேண்டும். வலுக்கட்டாயமாக எடுக்க தனக்கே உரிமை இல்லாத பொழுது, எந்தவொரு தனி மனிதனுக்கோ அரசாங்காத்திற்கோ கிடையாது. பாகிஸ்தானிய அரசாங்கம் பெருந்தன்மையாக இளமையின் பசுமையை சிறையில் தொலைத்த சரப்ஜித் சிங்கை மன்னித்து விடுதலை செய்து எஞ்சியுள்ள காலத்திலாவது குடும்பத்தினருடன் வாழ வழிவகை செய்யவேண்டும். இதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய ஊடகங்களும் தங்களால் ஆன முன்னெடுப்புகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், தனக்கு ஒரு குடம் மாமியாருக்கு ஒரு குடம் என பாரபட்சம் இல்லாமல் ஒட்டுமொத்த மரணதண்டனைக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-8645973057312457192?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/8645973057312457192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/8645973057312457192'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/08/blog-post.html' title='சரப்ஜித் சிங் - தூக்கின் வாசலில்'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-2Km0Je5l3yg/Tl17bMtFrRI/AAAAAAAAFxw/6c0L5BcYyRc/s72-c/sarabjit-singh-noose.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-695596165924984179</id><published>2011-07-17T11:27:00.000-07:00</published><updated>2011-07-18T14:39:51.095-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினாடி வினா'/><title type='text'>கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு</title><content type='html'>1. ராஜேஷ் சௌகான் ஒரு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்.  90களில் அனில் கும்ப்ளே, வெங்கடபதி ராஜுவுடன் மற்றும் ஒரு மும்மூர்த்தியாய் வலம் வந்தவர். பாகிஸ்தானுக்கு எதிரான, கராச்சியில் நடந்த  ஒருநாள் போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சிக்ஸர் அடித்து வெற்றியை எளிதாக்கியதில் பலரால் நினைவுக்கூறப்படுபவர்.&lt;b&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=P24X6cZbHmg"&gt; வீடியோ இங்கே&lt;/a&gt;&lt;/b&gt;&lt;div&gt;கேள்வி என்னவெனில் இந்த ராஜேஷ் சௌகான் மற்றும் ஒரு நினைவுகூறத்தக்க ஒரு சாதனையையும் வைத்துள்ளார். அந்த சாதனைதான் என்ன?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2.  கிரிக்கெட் ஆட்டத்தின் தாய்வீடான லார்ட்ஸ் மைதானத்தில்  டெஸ்ட் ஆட்டங்களில் முதன் முதலில் இந்திய அணி சார்பில் சதம் அடித்தவர் வினு மன்காட்.  அதன் பின்னர் திலீப் வெங்சர்க்கார் மூன்று சதங்களும், குண்டப்பா விஸ்வநாத், அசாரூதின், கங்குலி, ரவி சாஸ்திரி ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.  இவர்களைத் தவிர லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்துள்ள மற்றும் ஒரு இந்திய வீரர் யார்? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;3.  தற்பொழுது திரைப்பட நடிகராகிவிட்ட இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சடகோபன் ரமேஷ் பன்னாட்டுப்போட்டிகளில் அடித்த ஒரே சிக்ஸரின் காணொளி கீழே இருக்கின்றது.  இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சார்பாக அதிக ஓட்டங்கள் அடித்தவரும் இவரே ... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/GnUuiZ2isV4" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காணொளியைப் பார்த்து இருப்பீர்கள். இப்பொழுது கேள்வி என்னவெனில் , இந்த ஆட்டத்தின் முடிவு என்ன? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;4.  ககன் கோடா என்ற ஒருவர்  இந்திய அணிக்காக இரண்டு ஒரு நாள் ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார்.  அதே போல ஆஸ்திரேலியாவிற்காக அந்தோனி ஸ்டுவர்ட் என்பவர் மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் ஆடி இருக்கிறார்.  இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு சுவாரசியமான ஒற்றுமை என்ன? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;5.  தற்பொழுது மூன்றாம் நடுவர்கள், தீர்ப்புகள் வழங்கும்பொழுது ஆட்டமிழப்பை சிவப்பு விளக்கிலும், தொடர்ந்து ஆடச்சொல்வதை பச்சை என்ற வகையிலும் அறிவிக்கின்றனர். ஆனால் மூன்றாம் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் எந்த நிறத்தை ஆட்டமிழந்தார் என்பதை அறிவிக்கப் பயன்படுத்தினர்? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;6. பொதுவாக கிரிக்கெட் மைதானங்களில் , எல்லைக்கோடு வரை எந்த கம்பங்களோட இடையூறோ இருக்காது. இதற்கு விதிவிலக்காக இரண்டு மைதானங்கள் மட்டும் எல்லைக்கோட்டிற்குள் மரங்கள் கொண்டிருக்கின்றன.அந்த மைதானங்களில் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளும் நடைபெற்று இருக்கின்றன. அந்த மைதானங்கள் எவை? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;---&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடைகள் &lt;br /&gt;&lt;br /&gt;1. ராஜேஷ் சௌகான் இந்தியாவுக்காக ஆடிய 21 டெஸ்ட் போட்டிகளில் எந்தபோட்டிகளிலும் , இந்திய அணி தோற்றது கிடையாது. &lt;br /&gt;ராஜேஷ் சௌகான் ஒரு விரும்பத்தகாத சாதனையும் வைத்துள்ளார், இந்திய பந்து வீச்சாளர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தவரும் இவர்தான். இலங்கைக்கு எதிரான 97 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்து 276 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். (http://www.espncricinfo.com/ci/engine/match/63762.html)&lt;br /&gt;&lt;br /&gt;2. மட்டையடிக்க தெரியாதவர் என அனைவராலும் கேலி செய்யப்பட்ட அஜித் அகர்கார் தான் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்தவர். அதன் காணொளி கீழே &lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/6twu9YZSWT8" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. லீசெஸ்டரில் நடைபெற்ற 99 உலகக்கோப்பை முதல் சுற்று ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது. ஹென்றி ஒலங்கா கடை ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/65200.html&lt;br /&gt;&lt;br /&gt;காணொளி கீழே &lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/PiJ4TxebwG4" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. ககன் கோடாவும், அந்தோனி ஸ்டுவர்டும் தங்களது கடைசி ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப்பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக அதன் பின்னர் அவர்கள் எந்தப்பன்னாட்டு போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புக்கிடைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;5. இன்றைய நிலைமைக்கு நேர் எதிராக பச்சை விளக்கு ஆட்டமிழப்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. காணொளி கீழே &lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/-e2C4YA2n80" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. மரங்கள் இருக்கும்  இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;செயிண்ட் லாரன்ஸ் - காண்டர்பெர்ரி - கெண்ட் (http://www.espncricinfo.com/england/content/ground/56869.html)&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டி ஓவல், பியத்தர்மரிட்ஸ்பெரி , தென்னாப்பிரிக்கா &lt;br /&gt;&lt;a href="http://www.espncricinfo.com/southafrica/content/ground/59151.html"&gt;http://www.espncricinfo.com/southafrica/content/ground/59151.html&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரும், கங்குலியும் நமீபியாவிற்கு எதிரான உலகக்கோப்பை ஒன்றில் சதமடித்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-695596165924984179?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vinaiooki.blogspot.com/feeds/695596165924984179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17429638&amp;postID=695596165924984179' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/695596165924984179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/695596165924984179'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/07/blog-post_17.html' title='கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/GnUuiZ2isV4/default.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-617154554491842005</id><published>2011-07-17T02:42:00.000-07:00</published><updated>2011-07-17T05:23:31.263-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட விமர்சனங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>லவ்வர்ஸ் - திரைப்பார்வை</title><content type='html'>&lt;div&gt;அருமையான சினிமா க்விஸ் கேள்வியான ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து, ரஞ்சித் பாரோட், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, சிவா மற்றும் கௌதம் இயக்கிய திரைப்படம் எது என்பதற்கான விடைதான் லவ்வர்ஸ் என்ற ஒரு காக்டெயில் சினிமா. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாதவன் , ஜோதிகாவுடன், ஷோபனா, நாசர், சௌகார் ஜானகி, பிரதாப்போத்தன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருப்பதுடன் , தியா மிர்ஸா கௌரவ வேடத்தில், (அவர் இந்த வேடத்தில் நடித்திருப்பது அவருக்குத் தெரியுமா தெரியாதா எனத் தெரியவில்லை) நடித்திருக்கின்றார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-rERYZ3pNOUo/TiLRtU5D6uI/AAAAAAAAFuw/EAKImYTEt0Y/s1600/lovers.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 123px;" src="http://1.bp.blogspot.com/-rERYZ3pNOUo/TiLRtU5D6uI/AAAAAAAAFuw/EAKImYTEt0Y/s400/lovers.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5630293060798900962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாதி மீந்து போன நம் வீட்டு சாம்பாரை, பக்கத்துவீட்டு கோழிக்குருமாவுடன் கலந்தால் என்ன கிடைக்குமோ அதுதான் இந்தப்படம்.  ஒரு படத்தின் கதையையே எடுக்கவா கோர்க்கவா என இயக்குனர்கள் திண்டாடும் இந்தக்காலக்கட்டத்தில்,  இரண்டுப்படங்களை, அதிலும் இரு வெவ்வேறு மொழிப்படங்களை ஒன்று சேர்த்து, (அதில் ஒன்று தமிழில் ஏற்கனவே சக்கைப்போடு போட்டப்படத்தின் மொழிமாற்று வடிவம்) , கடைசிவரை பார்க்க வைத்ததிலேயே இயக்குனர் பாரட்டப்படவேண்டியவர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணவம்சியின் இயக்கத்தில் அந்தப்புரம் என பாதி மொழிமாற்றம், மறுபாதி பார்த்திபன் நடிப்பில் நேரடிப்படம் என வந்து சுமாரான வரவேற்பைப்பெற்றது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் லவ்வர்ஸ் பட இயக்குனர் ஒரு படி மேலேயே சென்றுவிட்டார். ஆர்.மாதவன் , ஜோதிகாவை வைத்து எடுத்திருந்த பாதிப்படத்தை, அப்படியே கைவிடாமல், இந்தி மின்னலேயின் தேர்ந்து எடுத்தக் காட்சிகளைக் கோர்த்து, (வசீகரா பாடலின் அசைவுகளுக்கு வேறு ஒரு மெட்டுடன்) ஒரு முழுநீளப்படமாகக் கொடுத்து விட்டார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் கட்டிடப்பொறியியல் படித்துவிட்டு  சென்னையில் வேலைத்தேட வரும் மாதவனுக்கு , சார்லி , விற்பனை பிரதிநிதி வேலை வாங்கித் தருகிறார். மாதவனுக்கு பீட்ஸா கடையில் வேலைப்பார்க்கும் ஜோதிகாவின் காதலும், செஸ் ஆட்டத்தில் விருப்பம் உள்ள பிரதாப் போத்தனின் நட்பும் கிடைக்கிறது. இடையில் நாசரின் மகள் ஷோபனா , மற்றும் ஷோபனாவின் கணவர் கே.எஸ் ரவிக்குமாரைக் காட்டுகிறார்கள்.  நாசரினால் ஒரு திருட்டு வழக்கில் மாதவன் மாட்டிவிடப்பட , சிறைக்குச் சென்றுத் திரும்பும் மாதவன் , ஷோபனாவின் குழந்தையைக் கடத்துகிறார். அந்தக் குழந்தையை அவரிடம் இருந்து கே.எஸ்.ரவிக்குமார் கடத்துகிறார்.  இடையில் பாம்பாயில் இருந்து வரும் நண்பர் , மாதவனின் பழையக் கதையை சொல்கிறார். அதுதான் இந்தி மின்னலே. இந்தி தியா மிர்ஸாவின் கோபத்தினால் சென்னைக்கு வந்துவிடும் மாதவனின் காதலை மீண்டும் சேர்த்து வைக்க ஜோதிகா முடிவு எடுக்கிறார். தனது சொத்துக்களை விற்றுவிட்டு , மாதவனுக்கு உதவி செய்து அமெரிக்கா போய்விடுகிறார்.  இது எல்லாவற்றையும் துண்டு காட்சிகளில், பின்குரலின் மூலம் படத்தில் சொல்லிவிடுகிறார்கள்.  கடைசிக்காட்சியில் தியா மிர்ஸாவுடன் மாதவன் சேர்ந்து விடுகிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;படத்தில் இருந்து  அழகிய கொலைகாரியே பாடல் காட்சி கீழே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/o_j-9SkiDU4" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உண்மையாக எடுக்கப்பட வேண்டிய படம் ஏன் கைவிடப்பட்டதென தெரியவில்லை. கோழிக்குருமா கலந்த சாம்பார் என்றாலும், ஒட்டு மொத்தமாக படத்தைக் கைவிடாமல் இரண்டுக் கதைகளைச் சேர்த்து ஏதோ ஒன்றைக் கொடுத்த இயக்குனரைப் பாராட்டத்தான் வேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஐயா திரைப்படத்தில்,  வடிவேலு அருணாசலம் படத்தின் இறுதிக்காட்சிக்கு, பாட்ஷா படத்தின் இறுதிக்காட்சியை வைத்து ஒப்பேற்றுவதைப்போல இந்தப் படத்தின் தயாரிப்பு இயக்கம் இருந்தாலும், ஒரு கைவிடப்பட்ட படத்தை முயற்சி செய்து வெளிக்கொண்டு வந்ததற்காகவே இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாரட்டலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதிவேக இணைய இணைப்பு இருப்பவர்கள்,  வேறு எதுவும் முக்கியமாக வேலை இல்லாத பட்சத்தில் , இணையத்தில் தேடி இந்தப் படத்தைப் பார்க்கலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://thulasidhalam.blogspot.com/2006/06/blog-post_29.html"&gt;&lt;b&gt;துளசி மேடம் பல வருடங்களுக்கு முன்னரே இந்தப்படத்தைப் பார்த்து எழுதி இருக்கும் விமர்சனத்தையும் இங்குப்பார்த்து விடுங்கள். &lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-617154554491842005?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vinaiooki.blogspot.com/feeds/617154554491842005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17429638&amp;postID=617154554491842005' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/617154554491842005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/617154554491842005'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/07/blog-post.html' title='லவ்வர்ஸ் - திரைப்பார்வை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-rERYZ3pNOUo/TiLRtU5D6uI/AAAAAAAAFuw/EAKImYTEt0Y/s72-c/lovers.png' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-5156256495335114006</id><published>2011-05-17T13:03:00.000-07:00</published><updated>2011-05-17T04:04:13.198-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>புத்தர் சிலையும் சிலத் துளிகள் ரத்தமும் - சிறுகதை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/Sn_c7lCOqyI/AAAAAAAAC_s/ZU3L6ZbzauQ/s1600-h/Budha_cry.gif" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:Tahoma;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: 16px; "&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;div style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 3px; padding-right: 3px; padding-bottom: 3px; padding-left: 3px; width: auto; font: normal normal normal 100%/normal Georgia, serif; text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கண்ணில் குருதி வழிந்தோடி வானுயர்ந்து இருக்கும் புத்தர் சிலையை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;மண்ணோடு மண்ணாக்க காடு மேடு எல்லாம் தாண்டி ஓடி வருகின்றேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என்னுடன் ஓடிவருபவர்கள் பிண்டங்களாய் சிதறி விழுந்தாலும் ரத்தசகதியில் நான் மட்டும் ஓடிவருகின்றேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இதோ இன்னும் சில அடிதூரம்தான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;புத்தர் சிலையை தகர்த்து எனது சோழதேசத்து புலிக்கொடியை நடப்போகின்றேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என்ன ஒரு முரண்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;பிடித்தமான புத்தரின் சிலை கீழேவிழுந்து சுக்குநூறாக விழுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கின்றதே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;!!. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;புலிக்கொடி பட்டொளி வீசிப்பறப்பதை ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில் “ராஜ ராஜ சோழன் நான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எனை ஆளும் காதல்தேசம் நீ ” பாடல் கனவைக் கலைத்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கீர்த்தனா தான் கூப்பிடுகிறாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நேரத்தைப் பார்த்தேன் சுவீடன் நேரம் விடியற்காலை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;3 &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;மணி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இந்தியா மூன்றரை மணி நேரம் முன்னதாக இருக்கின்றது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Georgia; font-size: 16px; "&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/Sn_c7lCOqyI/AAAAAAAAC_s/ZU3L6ZbzauQ/s1600-h/Budha_cry.gif" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/Sn_c7lCOqyI/AAAAAAAAC_s/ZU3L6ZbzauQ/s320/Budha_cry.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5368252196960774946" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 206px; height: 320px; " /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:arial;font-size:13px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:arial;font-size:13px;"&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:arial;font-size:13px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கீர்த்தனாவிற்கும் எனக்கும் ஒரு உடன்பாடு என்னவெனில் உயிர்ப்போகின்ற விசயத்தைத் தவிர வேறு எந்த விசயத்திற்காகவும் அதிகாலை நேர உறக்கத்தை கலைக்கும் விதத்தில் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என்பதுதான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என்ன பிரச்சினையோ என யோசித்துக்கொண்டே “குட் மார்னிங் அம்மு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என்றேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;“&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கார்த்தி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இப்போதாண்டா பேப்பர்ல பார்த்தேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;சுட்டுக்கொன்னுட்டாங்கன்னு போட்டு இருக்கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கவலையா இருந்துச்சுடா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அதுதான் கூப்பிட்டேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;'&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 48px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;“&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அம்மு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;டோண்ட் வொர்ரி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அவரை இதுவரைக்கும் ஏகப்பட்ட தடவை கொன்னு இருக்காங்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கடைசியா சுனாமி வந்தப்பக்கூட ஒரு தடவை செத்துப்போனாரு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;..”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கடந்த ஒருவார காலமாக போர்க்கள செய்திகளை இணையத்தில் படிக்கும் போது மனதுக்குப்பாரமாகவே இருக்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எது நடக்கக்கூடாது என்றெல்லாம் மனது தவிக்கின்றதோ அவைப்பற்றிய செய்திகள் தாம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இரண்டு நாளுக்கு முன்னர் இவைப்பற்றி நான் கீர்த்தனாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;”&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கார்த்தி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நீ அங்கே படிக்கப்போயிருக்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;படிக்கிற வேலையை விட்டுட்டு சும்மா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;தமிழ் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இனம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;போராட்டம் அப்படி இப்படின்னு எதுனாச்சும் உளறிக்கிட்டு இருந்தீன்னா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அப்ரப்டா உன்கிட்ட பேசுறதை நிறுத்திடுவேன்”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என சொன்னவள் இப்பொழுது அவளேக்கூப்பிட்டு கேட்பது வியப்பாய் இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;“&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அம்மு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அவர் உலகத்தில எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்வார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;”&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;சரி கார்த்தி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நான் ஆபிஸுக்கு ரெடியாகனும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;உன்னைத் தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;“&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;பரவால்ல அம்மு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ஹேவ் எ நைஸ் டே”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எனச்சொல்லிவிட்டு மனதைப் பிசையும் வலியுடன் மடிக்கணினியை திறந்து வழக்கமாக செய்திவாசிக்கும் இணையதளங்கள் எதிலும் உள்ளேப் புகாமல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இன்றைக்கான பாட அட்டவணையை மட்டும் குறித்துக்கொண்டு மடிக்கணினியை அணைத்தேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;காலை எட்டு மணிக்கே முதல் பாடவேளை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கணிப் பொறியியலில் எப்படி ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தொடர்ந்து நான்குமணி நேரப்பாடம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கட்டாய வகுப்பு கிடையாது என்றாலும் வீட்டில் இருந்தால் செய்திகளைப் படித்து வருத்தங்கள் மேலும் அதிகமாகும் என்பதால் கல்லூரிக்கு கிளம்பினேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ப்ரூன்னஸ்பார்க் காட்டுவழியே வாடைக்காற்று முகத்தில் அடிக்க பழைய நினைவுகள் வந்தன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ஒரு கோடைவிடுமுறை தினத்தன்று வீட்டின் நடுவே பெரியாருக்கு அருகில் மாட்டி இருந்த அவரின் புகைப்படத்தை என் அப்பா அகற்றியபோது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;யாரோ திரையுலகக் கதாநாயகன் என நினைத்துக்கொண்டிருந்தேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;பின்னொரு நாள் வரலாற்று நாயகன் மீசையின்றி எம்மொழியில் பன்னாட்டு ஊடகங்கள் முன்னிலையில் பேசும் நேரலையைக் கண்டு கொண்டிருக்கையில் ”அப்பா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;போட்டோவை திரும்ப ஹால்ல வச்சா என்ன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;?”&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;“&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எனக்கும் ஆசைதான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ஆனால் அனாவசிய பொல்லாப்பு வேண்டாமுன்னுதான் வைக்கல” என வருத்தத்தோடு அப்பா சொன்ன பதிலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;பின்பு &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;முதன் முறையாக சுவீடன் வரும்பொழுது ஃபிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இணைப்பு விமானத்திற்காக காத்திருக்கையில் அருகில் இருந்த டேனிஷ் காரர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நான் தமிழ் பேசுபவன் என்று தெரிந்தவுடன் ‘டைகர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எனச்சொன்னபோது மனதுக்குள் பெருமிதமாக இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;மனதுக்குள் ஆதரிப்பதை எந்த தேசத்தின் சட்டதிட்டங்களும் கட்டுப்படுத்த முடியாதல்லவா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;!!&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;யோசித்துக்கொண்டே நடக்கும்பொழுது லேசாகப் பசி எடுத்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;வகுப்பு ஆரம்பிக்க &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;15 &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நிமிடங்கள் இருந்தன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நிசந்த வோட இந்திய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு செல்ல நேரம் இருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நிசந்த வோட முழுப்பெயர் நிசந்த விக்கிரமசிங்கே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;போர்க்காலத்தில் அகதி என்ற போர்வையில் சுவீடன் வந்தவர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இந்திய உணவகம் என்ற பெயரில் அரிசி சாதம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;சப்பாத்தி போன்ற வகையறாக்களை இங்கு சுவீடிஷ் மக்களுக்கு ஏற்ற வகையில் காரம் குறைவாகப் பரிமாறி உணவகம் நடத்துபவர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எங்கள் குடும்பத்திலேயே சுமாராக சமைக்கும் அத்தையின் சாப்பாட்டை விட சுவைக் குறைவாக இருந்தாலும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;உள்ளே நுழைந்ததும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;'&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;வாங்க கார்த்தி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இன்றைக்கு எல்லோருக்கும் இனிப்பு இலவசம்”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என்று சுவீடீஷ் மொழியில் சொன்னபொழுது விசயம் புரிந்து விட்டது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நிசந்த விற்கு தமிழ் ஓரளவுக்குத் தெரியும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நான் தமிழ் பேசுபவன் என்றுத் தெரிந்தாலும் தமிழில் என்னிடம் பேசமாட்டார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ஆரம்பத்தில் ஏதோ இவரின் உணவகத்தில் அன்னதானத்தில் வந்து சாப்பிடுவதைப்போல நடந்து கொண்டதை நிறுத்தியது அவர் கார்ல்ஸ்க்ரோனா இரவு மதுவிருந்து விடுதியில் எங்களிடம் ஏற்கனவே வம்பு செய்து இருந்த இரண்டு அரபு இளைஞர்களிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தபோது நானும் அன்பரசனும் காப்பற்றியபின்னர்தான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;“&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என்னப்பா இது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அவனும் அகதி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நானும் அகதி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இந்த நாய்ங்க என்னை அடிக்குதுங்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என நீண்ட நேரம் உளறிக்கொண்டிருந்தார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;'&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இனிப்புக்கான காரணத்தை ஊகித்துக்கொண்ட நான் “ஹே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;டோ”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எனக்கூறிவிட்டு வெளியேறிய பொழுது நிசந்தா வேகமாக வந்து &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;'&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இன்று மாலை என் குழந்தைக்குப் பிறந்த நாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நீ கண்டிப்பாக வரவேண்டும்”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என்றார் திரும்பவும் சுவிடீஷ் மொழியில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;“&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நிச்சயமாக” &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என நான் ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு வகுப்புக்கு வந்தேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;வகுப்பில் மனம் பாடத்தில் செல்லவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;பசியும் வயிற்றைக் கிள்ளியது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எங்கோ நடக்கும் விசயத்திற்கு நிசந்தவை நொந்து கொள்வதில் என்ன பயன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;காந்தியை மானசீகமாக ஏற்றுக்கொள்ளும் நான் இப்படி நடந்து இருந்திருக்கக்கூடாதே &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;வெறுப்பு என்பது முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய விசயம் அல்லவா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;!! &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இல்லை நான் காட்டியது வெறுப்பு இல்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எதிர்ப்புக் கூட கிடையாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இயலாமை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;குறைந்த பட்சம் என் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;50 &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;க்ரோனர் என் மக்களைக் கொன்றுபோடுகின்ற தேசத்திற்குப்போக வேண்டாமே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;!! &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இனி நிசந்த வின் உணவகத்தில் சாப்பிடக்கூடாது என முடிவு செய்தேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அதே சமயம் நிசந்த வின் பழக்கத்தில் எந்த வித மாறுதலும் காட்டக்கூடாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இன்று மாலை கண்டிப்பாக அவரின் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ச் செல்ல வேண்டும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;வகுப்பு முடிந்த பின்னர் மூலைக்கு ஒன்றாக ரோன்னிபே நகரத்தில் இருக்கும் அரபு பீட்சா உணவகத்தில் ஒரு பீட்சாவை விழுங்கிவிட்டு அருகில் இருந்த கடையில் குழந்தைக்கு என்ன பரிசுப்பொருள் வாங்கலாம் எனத் தேடினேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;வெண்ணிறத்தில் அழகான புத்தர் சிலை இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அட &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இடதுக்கண்ணில் சிறியதாக சிவப்புக்கோடு கீழ் நோக்கி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;பிடித்திருந்ததால் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;100 &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;க்ரோனர் கொடுத்து வாங்கிக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்றேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எனது புத்தர் சிலைப் பரிசை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நிசந்தவின் மகள் அதை நிசந்த விடம் கொடுத்தாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கண்ணில் இருந்த சிவப்புக் கோட்டை கையால் அழித்துவிட்டு என்னைப் பார்த்து “&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கார்த்தி இதில் மட்டும் அல்ல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எங்கள் நாட்டிலும் சிவப்பு என்பது இனிக்கிடையாது ” ‘ &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;'&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என்றார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;”&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;அது சாதாரணக் கோடு அல்ல &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;குருதியில் எழுதப்பட்ட வரலாறு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;வரலாறுகள் திரும்புவதை பலமுறைப் பார்த்திருக்கின்றோமே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எனச் சொல்ல நினைத்தேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ஆனால் சொல்லாமல் குழந்தையை வாழ்த்திவிட்டு ஏதும் சாப்பிடாமல் இல்லம் திரும்பினேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;‘&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ராஜராஜ சோழன் நான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;எனை ஆளும் காதல் தேசம் நீதான்”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;என கீர்த்தனாவின் அழைப்பு வர “அம்மு சொல்லுடா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;!!”&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 48px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;'&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;கார்த்தி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;நமக்கு ஃபர்ஸ்ட் பையன் பிறந்தா &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; font-size: medium; "&gt;அர்ஜுன்னு மட்டும் வைக்க வேண்டாம் , அவர் பெயரையும் சேர்த்து அர்ஜுன் பிரபாகரன் என வைக்கலாம் .....&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 48px; "&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Tahoma;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ஒகேவா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;!! ”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;  -------&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; margin-bottom: 0cm; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இந்தக் கதை தமிழோவியம் இணைய இதழில் (ஆகஸ்ட் 6, 2009) வெளிவந்தது. &lt;/span&gt;&lt;b&gt;&lt;a href="http://www.tamiloviam.com/unicode/08060904.asp"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;தமிழோவியம் இணைய இதழைப் பார்வையிட இங்கேச் சொடுக்கவும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p style="font-family: arial; font-size: 13px; "&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-5156256495335114006?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vinaiooki.blogspot.com/feeds/5156256495335114006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17429638&amp;postID=5156256495335114006' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/5156256495335114006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/5156256495335114006'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2009/08/blog-post_10.html' title='புத்தர் சிலையும் சிலத் துளிகள் ரத்தமும் - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/Sn_c7lCOqyI/AAAAAAAAC_s/ZU3L6ZbzauQ/s72-c/Budha_cry.gif' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-3986908130559813148</id><published>2011-05-15T05:32:00.000-07:00</published><updated>2011-05-15T08:54:25.055-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேய்'/><title type='text'>பின் தொடரும் பேய் - சிறுகதை</title><content type='html'>நள்ளிரவைக்கடந்தும் மடிக்கணினியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்ததனால் கண்களுக்கு ஏற்பட்ட இறுக்கத்தைக் குறைக்க நிமிர்ந்து வரவேற்பறையைப் பார்க்கையில் பகீர் என்றது. அங்கு ஒருவன் உட்கார்ந்து இருந்தான், என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டு ... பொன்னிறத்தில் தலைமுடி, ஸ்காண்டிநேவிய நிறம், உட்கார்ந்திருக்கும்பொழுதே உயரமாகத் தெரிந்தான்.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சன்னல்களையும் கதவையும் தாழிட்டுத்தானே வந்தேன், என்ற யோசனையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“ஹூ ஆர் யூ ... வெம் எர் டு” என ஆங்கிலத்திலும் சுவிடிஷிலும் மாறிக்கேட்டுக்கொண்டு அவனருகே நெருங்கினேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவனை நெருங்க நெருங்க அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியுடன் அப்படியே பின்னோக்கிப்போனான். வேகமாக நகர நகர அவனும் பின்னோடிப்போய் சுவற்றில் மறைந்துப்போனான். இல்லை இல்லை போனது, இது பேய் ... திரும்ப என் அறைக்கு வர, உருவமும் சுவற்றைக் கிழித்துக்கொண்டு அதே தூர இடைவெளியுடன் மீண்டும் வந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் வேகமாக ஓடி கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, உருவமும் என்னைப் பின் தொடர்ந்தது. நான் நின்றால் அதுவும் நின்றது. நான் அதை நோக்கிப்போனால் அது என்னைவிட்டு நகர ஆரம்பித்தது. பாதகமான பேய் இருக்கும் எனப் பார்த்தால் விளையாட்டு காண்பிக்கிறதே !!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி என்ன ஆனாலும் ஆகட்டும் என மீண்டும் வீட்டிற்கே வந்தேன். படுக்கை அறையினுள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டேன்.  அந்த உருவம் நல்ல வேளை உள்ளே வரவில்லை.  பயம் தூக்கத்தை விரட்டினாலும், அசதி இரட்டிப்பான தூக்கத்தைக் கொண்டு வந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மறுநாள் காலை படுக்கை அறையின் கதவைத் திறக்க அதே இடத்தில் அந்த உருவம் இருந்தது.  நள்ளிரவிலேயே பேயைச் சமாளித்தாகிவிட்டது. பகலிலா தொந்தரவு செய்யப்போகின்றது, என சிரித்து வைத்தேன். பேயும் சிரித்தது. கண்டிப்பாக பிரமை இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”பேர் என்ன, ஊர் என்ன என்ன வேண்டும்” ம்ஹூம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை.  நான்கு பிரெட் துண்டுகள், கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே கிளம்பியதும் கதவைக் கிழித்துக்கொண்டு அந்தப் பேய் என்னைப்பின் தொடர்ந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பேருந்து, பின்னர் ரயில் என பயணச்சீட்டு இல்லாமல் அதுவும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தது. இது சிரிப்புப் பேயாக இருக்கும் என கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் போனது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அலுவலகத்தில் எனக்கு 20 அடிகள் தள்ளி நின்று கொண்டே இருந்தது. அலுவலக நண்பனிடம் , பேய் இருந்த இடத்தைச் சுட்டி அங்கு யாரேனும் நிற்கிறார்களா எனப்பாரேன் எனக்கேட்டேன். அவன் என்னை ஒரு தினுசாக “லூஸாப்பா நீ” என்ற வகையில் முறைத்துவிட்டுப்போனான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வீட்டிற்கு பேயுடன் திரும்பினேன். பிறரின் தனிமையை மதிக்கும் நாகரிகமான ஸ்காண்டிநேவியர்களின் குணம் அப்படியே இந்தப் பேயிற்கும் இருந்தது. படுக்கை அறையிற்கோ குளியல் அறைக்கோ நுழைவது இல்லை. வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு செல்லுங்கள் என்னும் வகையிலேயே அடுத்தப் பத்து நாட்களுக்கு என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. இது என்னடா இழவு என , தமிழ்நாட்டிற்கு ஒரு வாரம் விடுமுறை எடுத்து வந்து சேர்ந்தேன்.  சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும், விமானத்திலும், பின் சென்னையில் என்னுடைய டாக்ஸியிலும் பேயின் பயணம் தொடர்ந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்னை வீட்டில் தொந்தரவுகள் இல்லாத போதிலும், எதற்கு ஒரு மனநல மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து விடுவது என முடிவு செய்தேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“தொடர்ந்து பிம்பங்கள் வருவது ஒரு விதமான ஹாலுசினேசன், நீங்கள் பார்த்து, உங்களைப் பாதித்த உருவங்கள் தெரிவது போல இருப்பது இயல்பானது”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“இல்லை டாக்டர், இப்பொழுது கூட உங்கள் மருத்துவமனையின் வரவேற்பறையில் தான் இருக்கின்றது”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னைப் படுக்கவைத்து ஆழ்ந்த மனநிலையில் ஏதோ ஏதோ முயற்சி செய்து, நான் பார்த்த ஒரு படு பயங்கரமான பழைய ஸ்விடீஷ் திகில் படத்தில் வந்த வில்லனின் உருவம் தான் அந்த பேயாக எனக்குத் தெரிகின்றது என முடிவு செய்தார். அந்தப் படத்தை அவரும் பார்த்து இருப்பதாகவும் சொன்னார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதால், அந்த பிரமை என்னை விட்டு விலகி விடும் என என்னை ஆறுதல்படுத்திவிட்டு என்னை வழியனுப்பினார். வெளியில் அந்த பேய் இன்னும் உட்கார்ந்து இருந்தது. என்னை நோக்கி வருவது போல வந்து என்னைக் கடந்துப் போய் அந்த மனநல மருத்துவரின் அறைக்குள் நுழைந்தது. உள்ளே ஸ்விடிஷில் ஒரு ஆண் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-3986908130559813148?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vinaiooki.blogspot.com/feeds/3986908130559813148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17429638&amp;postID=3986908130559813148' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/3986908130559813148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/3986908130559813148'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2011/05/blog-post_15.html' title='பின் தொடரும் பேய் - சிறுகதை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-4583268893338616813</id><published>2011-05-11T15:00:00.000-07:00</published><updated>2012-01-13T00:03:30.257-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>Paraskevidekatriaphobia, 13ஆம் தேதி  வெள்ளிக்கிழமை</title><content type='html'>மேற்கத்திய பாரம்பரிய நம்பிக்கைகளில் பொதுவாக 13 ஆம் எண்ணும் வெள்ளிக்கிழமையும் தனித்தனியாக துரதிர்ஷ்டமான விசயங்களாக கருதப்படுகின்றன. இவையிரண்டும் இணைந்து ,13 ஆம் தேதி வெள்ளியன்று வந்தால்,அன்று ஆரம்பிக்கப்பட வேண்டிய விசயங்களை கொஞ்சம் மிரட்சியாக அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போடுவது மேற்கத்திய நாடுகளில் இயற்பான ஒன்றாக இருக்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கைகளில் இயேசு கிறிஸ்து வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டதும், அவரின் கடைசி இரவு உணவில் அவரின் சீடர்களுடன் அவரையும் சேர்த்து 13 பேர் இருந்ததும் , 13வதாக யூதாஸ் வந்ததும் இந்த Friday 13th மீதான பயத்தை வலுப்படுத்தும் ஒரு காரணி எனவும் சொல்லுவார்கள்.ஆதாமும் ஏவாளும் சாத்தான் அளித்த பழத்தை உண்டதும்,காயின் ஆபேலைக் கொன்றதும் இதே வெள்ளியன்றுதான் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_HUXNbxQdt24/SFIWy0S5rII/AAAAAAAAAT0/05gcbWdyNN8/s1600-h/davinci.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5211252781108276354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_HUXNbxQdt24/SFIWy0S5rII/AAAAAAAAAT0/05gcbWdyNN8/s320/davinci.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் மைய கத்தோலிக்க மடாலயங்கள் பெண் மைய பாகான் மதங்களை,வழிபாட்டு முறைகளை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நோர்ஸ் கலாச்சார பெண் தெய்வங்களின் புனித நாளாகக் கருதப்பட்ட வெள்ளிக்கிழமையையும் , 13 என்ற ராசியான எண்ணையும் துரதிர்ஷ்டமானது ,அந்நாளில் துவக்கப்படும் எதுவும் சரியாக அமையாது என அவநம்பிக்கை ஏற்படுத்தினார்கள் எனவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். பாகானிய வழிபாட்டு முறைகளில் ஒரு ஆண்டில் சந்திரனை அடிப்படையாக கொண்ட மாதங்களின் எண்ணிக்கை 13 என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;13 ஆம் தேதி வெள்ளியன்று வருவதனால் ஏற்படும் பயத்தை paraskevidekatriaphobia என்று அழைப்பார்கள். எண் 13, வெள்ளிக்கிழமை, பயம் ஆகிய மூன்று தனித்தனி கிரேக்க மொழி வார்த்தைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன வார்த்தை. மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல சீனாவிலும் எகிப்திலும் 13 ராசி இல்லாத எண்ணாக இன்றும் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_HUXNbxQdt24/SFI3o1zpznI/AAAAAAAAAUE/GhPvMddX_Ho/s1600-h/templars.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5211288893599108722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_HUXNbxQdt24/SFI3o1zpznI/AAAAAAAAAUE/GhPvMddX_Ho/s320/templars.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14ஆம் நூற்றாண்டில் நைட் டெம்ப்ளேற்ஸ் ஆட்களை பிரான்சு மன்னர் பிலிப் IV ,போப் கிளமெண்ட் V இன் ஆணையின் பேரில் அக்டோபர் 13 ஆம் வெள்ளிக்கிழமை,1307 அன்றுதான் வேட்டையாடிக் கொன்றனராம். அன்று முதல் இந்த 13,வெள்ளிக்கிழமைப் பற்றிய பயம் உருவெடுத்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பன்னெடுங்காலம் வரை பிரிட்டனில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டது வெள்ளிக்கிழமைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டனில் வெள்ளிக்கிழமை பயத்தை உடைத்தெறிய அந்த நாட்டுக் கடற்படை எச்.எம்.எஸ் ப்ரைடே என்ற பெயரில் , ஜேம்ஸ்பிரைடே என்ற ஒருவரை கப்பற்தலைவனாகக் கொண்டு ,வெள்ளிக்கிழமையன்று பயணத்தை துவக்க வைத்தனராம். அந்தக் கப்பல் ஒரு அருமையான வெள்ளியன்று கடைசியாகப் பார்த்தபின் கரை திரும்பவே இல்லையாம். இது உண்மையிலேயே நடந்ததா இல்லையா என்று உறுதி செய்யப்படவில்லை எனினும், ஏப்ரல் 13 வெள்ளியன்று ,அப்போல்லோ 13 விண்கலத்தில் ஆக்ஸிசஜன் சிலிண்டர் வெடித்தது இந்த நம்பிக்கை ஆதரிப்பவர்களுக்கும் மூட நம்பிக்கை என ஒதுக்கியவர்களிடமும் அதிர்ச்சி அலைகளைப் பரவச்செய்தது. அந்த விண்கலத்தில் இருந்த மூவரும் பத்திரமாக பூமிதிரும்பினர் என்பது வேறுவிசயம். இதனை Successful Failure எனவும் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_HUXNbxQdt24/SFI3WkDBGWI/AAAAAAAAAT8/v66vGgzo-Eg/s1600-h/elevator.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5211288579594066274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_HUXNbxQdt24/SFI3WkDBGWI/AAAAAAAAAT8/v66vGgzo-Eg/s320/elevator.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவிலும், அமெரிக்காவிலும் பன்மாடிக் கட்டடங்களில் பதிமூன்றாவது எனக் குறிப்பிடப்படாமல் 13 வது தளம் அமைந்திருக்குமாம். எண் பதிமூன்றைப் பற்றிய பயத்தை Triskaidekaphobia என சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனோதத்துவ நிபுணர்கள், 13க்கும் வெள்ளிக்கிழமைக்கும் எந்த ராசி,ராசி இல்லாத காரணிகளும் கிடையாது, அவரவர் மனோபாவத்தை பொறுத்து அந்த நாள் அமைகிறது, அடடா, இன்றைக்கு 13 வெள்ளியாச்சே, காப்பி சிந்திவிட்டதே, சட்டை சரியாக சலவை செய்யப்படவில்லையே, போக்குவரத்து விதிகளை மீறி காட்டுத்தனமாக வண்டி ஓட்டுகின்றானே என தினசரி ஏற்படும் வருத்தங்கள் இது போன்ற சிலநாட்களில் நமக்கு பூதகரமானதாக தோன்றுகிறது என சொல்லுகின்றனர். காரணிகளால் நம்பிக்கை ஏற்படுவதில்லை, நம்பிக்கை உருவாக்கப்பட்டபின்னரே காரணிகளை தேடிக்கண்டுப்பிடிக்கப்படுகின்றன. மனம் சாட்சியங்களை தேடிக் கிடைக்காத போது , ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை தன்மேல் திணித்துக் கொள்கிறது. மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட நாட்கள் எல்லாமும் நல்ல நாளே!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;a href="http://enpoems.blogspot.com/2008/06/friday-13th.html"&gt;பதிவர் தமிழ்மாங்கனியின் வெள்ளிக்கிழமை 13 அனுபவம் வாசிக்க இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி &lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; font-size: medium; "&gt;இதே தினத்தில் &lt;/span&gt; &lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; font-size: medium; "&gt;வெளியான &lt;/span&gt; தசாவதாரம் &lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 33px; font-size: medium; "&gt;பெரும் வெற்றிப் பெற்றது ,2011 தமிழக சட்ட மன்ற  தேர்தல் முடிவுகள் 13 ஆம் தேதி வெள்ளியன்று வெளியானது என்பதும் குறிப்பிடத் தக்கது.  &lt;/span&gt;&lt;div&gt;------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் : &lt;a href="http://people.howstuffworks.com/friday-thirteenth.htm"&gt;http://people.howstuffworks.com/friday-thirteenth.htm&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17429638-4583268893338616813?l=vinaiooki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vinaiooki.blogspot.com/feeds/4583268893338616813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17429638&amp;postID=4583268893338616813' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/4583268893338616813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17429638/posts/default/4583268893338616813'/><link rel='alternate' type='text/html' href='http://vinaiooki.blogspot.com/2008/06/paraskevidekatriaphobia-13.html' title='Paraskevidekatriaphobia, 13ஆம் தேதி  வெள்ளிக்கிழமை'/><author><name>வினையூக்கி</name><uri>http://www.blogger.com/profile/05935927338229081658</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/_HUXNbxQdt24/SNO8rz9VepI/AAAAAAAAAU8/dfDr8qBut7w/S220/selvakumar_smart.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_HUXNbxQdt24/SFIWy0S5rII/AAAAAAAAAT0/05gcbWdyNN8/s72-c/davinci.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17429638.post-8478470917722768175</id><published>2011-05-09T03:28:00.000-07:00</published><updated>2011-05-09T14:32:27.709-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Joan of Arc'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரான்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஜோன் ஆஃப் ஆர்க் - பிரான்சின் வீரமங்கை</title><content type='html'>மொழி அடிப்படையில் உருவாகும் தேசியமே காலங்கடந்து கம்பீரமாக நிற்கும் என்பதற்கு ஐரோப்பிய வரலாற்றுப்பக்கங்கள் உதாரணம். நிறத்தாலும், குணத்தாலும் , நம்பிக்கைகளினாலும் ஒன்றுபோல இருந்தாலும் , ஐரோப்பியர்கள் தங்களை நிலைநிறுத்திக் காட்டிக்கொள்வது மொழியின் அடிப்படையிலேயே இருக்கின்றது. அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் பிரெஞ்சு தேசமான பிரான்சு. &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;14 ஆம் நூற்றாண்டில் உள்ளடி வேலைப்பார்க்கும் துரோகிகளினாலும், போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சோம்பித்திரிந்த அரசர்களாலும் துண்டாடப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில தேசமாக மாறிக்கொண்டிருந்த பிரான்சை மீண்டும் முழு தேசியமாக எழுச்சி பெற வித்திட்டவர் ஜோன் ஆஃப் ஆர்க்.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-AAM_imT7HMk/TcgT30gS03I/AAAAAAAAFPA/fMnbwRDyKVE/s1600/DSC00688.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-AAM_imT7HMk/TcgT30gS03I/AAAAAAAAFPA/fMnbwRDyKVE/s400/DSC00688.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604751585970410354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”அந்த சிலுவையை உயரேக் காட்டுங்கள், என் நாட்டிற்காக நான் இந்தத் தீ ஜூவாலைகளில் கரையும் பொழுது, எனது இறைவனை நினைவுகூற விரும்புகின்றேன்” என பிரெஞ்சில் கூறியபடியே மரிக்கும் தருவாயிலும் மொழி, தேசியம், தெய்வீகம் மூன்றையும் இணைத்து பிரான்சை மீட்டெடுத்த குவியப்புள்ளிதான் ஜோன் ஆஃப் ஆர்க் (Jeanne d'Arc). &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;14 , 15 ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு அரசுரிமைக்கானப் போட்டியில் நடந்த போர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நடந்தது.  வலுவா (House of Valois) குடும்பத்தினரும், இங்கிலாந்த்தைச் சேர்ந்த  பிளாண்டஜெனட் (House of Plantagenet) குடும்பத்தினரும் பிரஞ்சு அரசுரிமையை தங்களுக்கே சொந்தம் எனக் கொண்டாடி சண்டையில் ஈடுபட ஆரம்பித்தனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-aG98y8z_t4o/Tcf3WGwM2ZI/AAAAAAAAFO4/G-Xdtlsoyjg/s1600/France_Map_1.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 324px;" src="http://2.bp.blogspot.com/-aG98y8z_t4o/Tcf3WGwM2ZI/AAAAAAAAFO4/G-Xdtlsoyjg/s400/France_Map_1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604720220427835794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பாரிஸ் நகரம் உட்பட மூன்றில் ஒரு பகுதியான வடக்குப்பகுதியை ஆங்கிலேயர்கள் ஆதரவுப்பெற்ற பருகெண்டிய பிரபுக்கள் ஆண்டு வந்தனர். எஞ்சிய மீதத்தை வலுவா குடும்பத்தை சேர்ந்த புத்திசுவாதீனமில்லாத ஆறாம் சார்லஸ் ஆண்டு வந்தார். பருகண்டி பிரபுக்களின் சூழ்ச்சிகள், தனது ஏழு வயது மகளை இங்கிலாந்து இளவரசரனுக்குக் திருமணம் செய்து கொடுத்து சமாதானம் பேச முயன்றும், தொடர்ந்த இங்கிலாந்தின் படையெடுப்புகள் என பிரெஞ்சு தேசம் கொஞ்சம் கொஞ்சமாக சுயத்தை இழந்து கொண்டிருந்தது. ஏறத்தாழ இதேக் காலக்கட்டத்தில் இன்றைய பிரான்சின் வடக்கிழக்கு கிராமமான தொம்ரெமெவில் ஒரு விவாசயக் குடும்பத்தில் ஜாக்குவஸ் த’ஆர்க் என்பவருக்கும் இஸபெல்லா ரொமே என்பவருக்கும் மகளாக ஜோன் பிறந்தார்.  &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பருகெண்டிய பிரபுக்களின் நிலப்பகுதியில் இருந்தாலும் ஜோனின் குடும்பம் இருந்த கிராமம் பிரெஞ்சு அரசருக்கு விசுவாசமாக இருந்தபடியால் அடிக்கடி சூறையாடப்பட்டது. பிஞ்சு வயதில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த துரோகிகளின் அட்டூழியம், கொடுங்கோல்தன்மை ஆகியவற்றினால் சுதந்திரம் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் பயனில்லை எனும் விதை ஜோனின் மனதில் ஆழப்பதிந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தேசிய எண்ணங்கள் ஆழப்பதிய, தெய்வீகமும் ஜோனைச் சூழ்ந்து கொண்டது, ஜோன் 12 வயதாக இருக்கும்பொழுது, கிறித்தவ புனிதர்களான மைக்கெல், கேத்தரின், மார்க்கரேட் ஆகியோரை தரிசித்ததாகவும் , அவர்கள் ஜோனிடம் ஆங்கிலேயர்களை பிரெஞ்சு மண்ணைவிட்டே விரட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆறாம் சார்லஸின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்சிலும், வடகிழக்கில் இருந்து ஒரு வீரமங்கை வந்து இளவரசரருக்கு (ஏழாம் சார்லஸ்) முடிசூட்டுவாள் என ஒரு நம்பிக்கை பரவிவந்தது.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஜோனிற்கு 16 வயதாக இருக்கும்பொழுது,  பிரெஞ்சு ராணுவத்தளபதி ராபர்ட்டை சந்திக்க முற்படுகிறார். ராபர்ட் சிறு பெண் என ஏளனப்படுத்தினாலும், தொடர் முயற்சிகளினால் ஏற்கனவே உலவி வந்த நம்பிக்கைகளினாலும் , ஏழாம் சார்லஸை சந்திக்க ராபர்ட் அனுமதிக்கின்றார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Z9N_diH6KrQ/TcgU_phMmkI/AAAAAAAAFPI/_PtIsKbPZEY/s1600/DSC00895.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-Z9N_diH6KrQ/TcgU_phMmkI/AAAAAAAAFPI/_PtIsKbPZEY/s400/DSC00895.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604752819971988034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஜோன் அழகிய இளமங்கையாக இருந்ததால் , பிரச்சினைக்குரிய பருகெண்டிய பிரதேசத்தைக் கடக்கவேண்டி , அவருக்கு ஆணைப்போல திருத்தமான முடிவெட்டு மற்றும் போர் வீரர்களின் உடை தரிக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஜோனை சோதிக்க, பணியாள் ஒருவர் ஏழாம் சார்லஸைப்போல வேடமிட்டு வரவேற்றாலும், ஜோன் நேரிடையாக கூட்டத்தில் இருந்த ஏழாம் சார்லஸை மண்டியிட்டு அரசரே என வணங்கியபோது,  காத்துக்கொண்டிருந்த நம்பிக்கைத் தேவதை வந்துவிட்டாள் என ஆர்ப்பரித்தனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆங்கில - பிரெஞ்சு யுத்தத்தை இறைவனின் பெயரால் ஜோன் எடுத்துச் செல்ல முற்பட்டதைக் கண்டு ஏழாம் சார்லஸ் அஞ்சினார். ஒரு வேளை வென்றால் ஜோன் சூனியக்காரியாகவும், தனது அரசாங்கம் சாத்தானின் கைவண்ணமாகக் கண்டு கொள்ளப்படுமோ என்ற பயம் அவருக்கு.  அன்றைக்கு உண்மையில் ஆங்கிலேயர்களைப் பொருத்தமட்டில் ஜோன் ஒரு சூனியக்காரியாகவே பிரபலப்படுத்தப்பட்டாள்.  இவ்வளவு ஏன், ஷேக்ஸ்பியரின் ஆறாம் ஹென்றி முதல் பாகத்தில் ஜோன் எதிர்மறைக் கதாப்பத்திரமாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஏழாம் சார்லஸின் ஐயத்தை , எதைத் தின்னால் பித்தம் தெளிந்து  சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்று இருந்த பிரெஞ்சு மதக்குருமார்கள் ஜோன் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவள் என நேரிடையாகக் கூறாமல் அதே சமயத்தில் நேர்மை, எளிமை, விசுவாசம் ஆகியனவற்றைக்கொண்ட ஒரு நல்ல கிறித்தவப்பெண் எனப் பிரகடப்படுத்தினர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YNkHIMixfhk/TcgZ2yWsgrI/AAAAAAAAFPw/m8s85Rv_qzI/s1600/DSC00722.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-YNkHIMixfhk/TcgZ2yWsgrI/AAAAAAAAFPw/m8s85Rv_qzI/s400/DSC00722.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604758165283177138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஓர்லியான்ஸ் நகரத்தை மீட்போம் என்ற ஜோனின் கணிப்பை சோதிக்க, ஜோன் ஓர்லியான்ஸிற்கு அனுப்பப்பட்டார். முதலில் ஓர்லியான்ஸ் பிரபுவின் நம்பிக்கை பெறமுடியாமல், ஒதுக்கிவைக்கப்பட்டாலும் சிறுக சிறுக தனது கணிப்புகளினாலும் சாதுரியமான ஆலோசனைகளினாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எச்சரிக்கை உணர்வுடனேயே சண்டை போட்டு வந்த பிரெ
